மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் அதிகப்படியான அனுகூலங்களை அடைவீர்கள். குரு 2-ல், சனி 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிக தாராளமாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்படும். மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். குடும்ப ஒற்றுமை மிகமிக சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபத்தை ஈட்டமுடியும். திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவதால் ஒரு கௌரவமான நிலையினை நீங்கள் அடையமுடியும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பதால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஒரு சிலருக்கு கடந்த காலங்களில் இருந்துவந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் தற்போது குறைந்து சுமூகமானநிலை ஏற்படும். வெளியூர், வெளிநாடுகள்மூலமாக அனுகூலமான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லவாய்ப்பு, ஒருசிலருக்கு விரும்பிய இடமாற்றங் களும் கிடைக்கும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடந்தகால பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறையும். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். குறிப்பாக கடந்த சில நாட்களாக இருந்த மன குழப்பங்கள் எல்லாம் விலகி மனநிம்மதி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு பெரியோர்களுடைய ஆசியை பெறுவார்கள். துர்க்கையம்மனுக்கு தீபம் ஏற்றுவது, சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

Advertisment

வெற்றி தரும் நாட்கள்: 24, 25, 26, 27

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

Advertisment

உங்கள் ராசி அதிபதி சுக்கிரன், புதனுடன் 2-ல் இருப்பதால் நெருங்கியவர்கள் ஆதரவு மிகச் சிறப்பாகஇருக்கும். இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத தன சேர்க்கை ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாகக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ராகு 11-ல் இருப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். மறைமுகஎதிர்ப்புகள் இருந்தாலும் உங்கள் தனித் திறனால்எதையும் எதிர்கொண்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. ஒருசிலருக்கு உறவினர்களிடம் தேவையற்ற மனஸ்தாபம் ஏற்படலாம் என்பதால் பேச்சில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சின்னசின்ன நெருக்கடிகள் இருக்கக்கூடிய நேரமென்பதால் ஒவ்வொரு விஷயத்தையும் சரியானமுறையில்கையாள்வது நல்லது. சில நேரங்களில்வேலையாட்கள் உதவி எதிர்பார்க்காமல் நீங்களே முன்நின்று செயல்பட்டால் அடையவேண்டிய இலக்கை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடுதலாக இருந்தாலும்உங்கள் உழைப்புக்கான பலனை அடைய முடியும். அதிகாரியிடம் பேசுகின்றபொழுது சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. புதியவாய்ப்பு எதிர்பார்த்து இருப்பவர்கள் தற்போது கிடைப்பதை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் நல்ல நிலையினை அடையமுடியும். மாணவ- மாணவியர்கள் பெற்றோர் சொல்படி நடப்பது, வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. முருக வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நற்பலனைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 26, 27, 28, 29

சந்திராஷ்டமம்: 21-6-2024 மாலை 6.18 மணிமுதல் 23-6-2024 இரவு 10.47 மணிவரை.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் ராசியாதிபதி புதன்- சுக்கிரனுடன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். சில காரியங்களில் நீங்கள் சாமர்த்தியமாக செயல்படுவதால் எதிர்பாராத பண வரவுகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சனி, லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீண்டநாட்களாக உள்ள நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறைந்து ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். பிறருக்குதந்த வாக்குறுதிகளை எளிதில்நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும்.குடும்பத்தில் கணவன்- மனைவி யிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.நீண்டநாட்களாக தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஒரு செயலில் ஈடுபட்டால் அதில் நெருங்கியவர்கள் ஆதரவு சிறப்பாக இருந்து ஒருசில ஆதாயத்தைஅடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. ஜென்ம ராசியில் சூரியனும், 12-ல் குருவும் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைத்து மனநிம்மதி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், தொடர்பான விஷயங்களை பொதுஇடங்களில் பேசாமல் இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் நட்புகளிடம் பேசுகின்றபொழுது சற்று பொறுமையோடு இருப்பது உத்தமம். இந்த வாரத்தில் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, துர்க்கையம்மனுக்கு அர்ச்சனை செய்வது நற்பலனை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 23, 28, 29

சந்திராஷ்டமம்: 23-6-2024 இரவு 10.47 மணிமுதல் 26-6-2024 அதிகாலை 1.49 மணிவரை.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் செவ்வாய் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். லாப ஸ்தானமான 11-ல் வருட கிரகமான குருபகவான் பலமாக சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருக்கும். மற்றவர்களுக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் வரும் நாட்களில் உண்டு. பிள்ளைகள்வழியில் இருந்துவந்த மனக்கவலைகள் எல்லாம் தற்போது குறைந்து சுமூகமான நிலை உண்டாகும். பூர்வீக சொத்துவகையில்ஆதாயங்கள்அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. உங்கள் ராசிக்கு 12-ஆம் வீட்டில் சூரியன், புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது, சூழலுக்கு ஏற்றவாறு பேச்சில் சற்று கவனத்தோடு இருப்பது வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும். உங்களுக்குஅஷ்டமச்சனி நடப்பதால் உடல்நலத்தில் கவனம் எடுத்துக் கொள்வது, இரவு நேர பயணங் களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செயலிலும் சிந்தித்து செயல்பட்டால்அனுகூலங்களை அடையமுடியும். உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைக்கும் என்றாலும் வேலையாட்கள் சிறுசிறு இடையூறுகளை உங்களுக்கு ஏற்படுத்தக்கூடிய நேரமென்பதால் சற்று எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சக ஊழியரிடம் பேசுகின்றபோது கவனத்தோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் நல்ல மதிப்பெண்களை எடுத்து பெற்றோர் ஆசிரியரின் பாராட்டுதலை பெறக்கூடிய நேரமாகும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்வது நற்பலனைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 23, 24, 25

சந்திராஷ்டமம்: 26-6-2024

அதிகாலை 1.49 மணிமுதல் 28-6-2024

அதிகாலை 4.31 மணிவரை.

சிம்மம்

(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசியாதிபதி சூரியன் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் புதன்- சுக்கிரன் சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்த பிரச்சினைக்கெல்லாம் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். உங்கள் ராசிக்கு 10-ல் குரு சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது, அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 7-ல் சனி, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்-மனைவியிடையே விட்டுக்கொடுத்துசெல்வது, நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதுநல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைத்து போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கக்கூடிய நேரமென்பதால் தொழில் தொடர்பான விஷயங்களைவெளியாட்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. செவ்வாய் 9-ல் வலுவாக சஞ்சரிப்பதால் வெளியூர் தொடர்புகள்மூலமாக ஒருசில ஆதாயங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் திறமையாக செயல்படுவதால் அதிகாரியினுடைய பாராட்டுதலை பெறமுடியும். சக ஊழியரிடம் பேசுகின்றபொழுது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்துவதும், தேவையற்ற பொழுதுபோக்குகளைத் தவிர்ப்பதும்நல்லது. துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, உடல்ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 24, 25, 26, 27

சந்திராஷ்டமம்: 28-6-2024 அதிகாலை 4.31 மணிமுதல் 30-6-2024 காலை 7.34 மணிவரை.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி புதன்- சுக்கிரன், சூரியன் சேர்க்கைப் பெற்று 10-ல் வலுவாக சஞ்சரிப்பதால் உங்களது பலமும் வலிமையும் கூடக்கூடிய இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். குருபார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு 6-ல் சனி சஞ்சரிப்பதால் நீண்டநாட்களாக உள்ள வம்பு வழக்குகளுக்கு எல்லாம் தற்போது ஒரு நல்ல தீர்ப்பு கிடைத்து உங்களுக்கு இருக்கக்கூடியமனக்கவலைகள் எல்லாம் விலகும். அசையும், அசையா சொத்து வகையில் அனுகூலமான பலன் களை பெறக்கூடிய அமைப்புகளும், நெருங்கியவரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம்விலகி ஒற்றுமையான சூழ்நிலையும் உண்டாகும். உங்களுடையதனித்திறனை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு உங்கள் வளர்ச்சியானது மிகச் சிறப்பாக இருக்கும். வேலையாட்கள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் தொழிலில் சிறப்பாக செயல்பட்டு வாடிக்கையாளரிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைப்பதால் நீண்டநாட்களாக உங்களுக்கு இருக்கக்கூடிய பொருளாதார நெருக்கடிகள் எல்லாம் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பிறரால் முடிக்க முடியாத பணிகளைகூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக முடித்து நல்லபெயர் எடுப்பீர்கள். மாணவ- மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். முருகப்பெருமானை வழிபாடு செய்வது, சரபேஸ்வரருக்கு ராகுகால நேரத்தில் பூஜை செய்வது கெடுதியைக்

குறைக்கும்.

வெற்றி தரும் நாட்கள்: 26, 27, 28, 29

.துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி சுக்கிரன்- புதன் சேர்க்கைப்பெற்று 9-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். ஒவ்வொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்பட்டால்தான் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய், 8-ல் குரு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள், எதிர்பார்த்த பணவரவுகள் தக்க நேரத்தில் வராமல் தாமதமாகக் கூடிய நிலை உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருப்பது, ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் கிடைக்கக் கூடிய சிறு வாய்ப்பையும் தவறவிடாமல் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வது நல்லது. வேலையாட்கள் தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்தக்கூடிய நேரமென்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் சற்று கவனத்தோடும், சில நேரங்களில் நீங்களே நேரடியாக சில செயல்களை செய்வது மிகவும் நல்லது. முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதன்மூலம் வீண்அலைச்சல்கள் குறையும். உடல்நலத்தில் சற்று கவனம் எடுத்துக்கொள்வது, நேரத்திற்கு சாப்பிடு வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை காரணமாக ஓய்வுநேரம் குறைவது மட்டும் இல்லாமல் மனைவி, பிள்ளைகளிடம் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய ஒரு நேரமாகும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் நீங்கள் சற்று கவனத்தை செலுத்துவது மிகமிக நல்லது. மாணவ- மாணவியர்கள தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் பயனுள்ள காரியங்களில் நேரத்தை செலவிடுவது உத்தமம். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நற்பலனை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 23, 28, 29

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம்,

அனுஷம், கேட்டை)

ராசியாதிபதி செவ்வாய் 6-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதாலும், 7-ல் குரு சஞ்சரிப்பதாலும் உங்களுக்கு சகலவிதத்திலும் அனுகூலமான பலன்களைஅடைவீர்கள். பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. தடைப்பட்ட சுபகாரியங் கள் கைக்கூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உங்கள் ராசிக்கு 8-ஆம் வீட்டில் மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன், புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் தேவையில்லாத வகையில் வீண்செலவுகள் ஏற்படலாம் என்பதால் ஆடம்பரத்தை சற்று குறைத்துக் கொண்டு எதிலும் சிக்கனத்தோடு செயல்படுவது நல்லது. தேவையில்லாத அலைச்சல் காரணமாக இருப்பதைஅனுபவிக்க இடையூறுகள் ஏற்படலாம். ஒருசிலருக்கு வண்டி வாகனங்கள் மூலமாககூட சுபச்செலவுகள் ஏற்படக்கூடிய ஒரு நேரமாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நீங்கள் அடையவேண்டிய அனுகூலத்தை அடையக் கூடிய வாய்ப்புகள் அமையும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை அபிவிருத்தி செய்யக்கூடிய யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய நேரமாகும். குறிப்பாக சக ஊழியரிடம் பேசுகின்றபொழுது பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் சிறப்பாக செயல்பட்டு பெற்றோர், ஆசிரியரிடம் நல்லபெயர் எடுக்கமுடியும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, நரசிம்மர்வழிபாடு மேற்கொள்வது நற்பலனைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 24, 25

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு சம சப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் உடன் இருப்பவர்கள் உங்களுக்கு எல்லா விஷயத்திலும் உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத தனசேர்க்கை ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாகக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு 3-ல் சனி சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படக்கூடிய பலம் உண்டாகும். ராசியாதிபதி குரு 6-ல் இருப்பதால் பணவிஷயத்தில்

ஒரு ஏற்ற- இறக்கமான நிலை இருக்கக்கூடிய நேரமென்பதால் எதிலும் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. குறிப்பாக மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது உத்தமம். ஒருசிலருக்கு எதிர்பாராதவகையில் கடன்கள் ஏற்படலாம் என்பதால் சூழலுக்கு ஏற்றவாறு கையில் இருப்பதை கொண்டு செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சிறப்பாக கையாண்டு அடையவேண்டியதை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்புசிறப்பாக இருப்பதால் ஒருவகையில் மனஅமைதி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் பணியில் நீங்கள் சற்று கவனத்தோடு செயல்பட வேண்டிய நேரமாகும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் இருப்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்களை சொல்வார்கள். மாணவ- மாணவியர்கள் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு நடந்து கொண்டால் விரும்பியபாடப்பிரிவு பெற்று நல்ல நிலையினை அடையமுடியும். பாம்பு புற்றுக்கு பால்விடுவது, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 23, 26, 27

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களுக்கு உள்ள நெருக்கடிகள் எல்லாம் குறைந்து ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பணவரவுகள் சிறப் பாக இருப்பது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். நீண்டநாட்களாக குழந்தை பாக்கியமில்லை என்று ஏங்கியவர்களுக்கு வரும் நாட்களில் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று கிடைக்கும். உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமை யோடு இருப்பது நல்லது. ஒருசிலருக்கு இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்லபண்பை புரிந்துகொண்டு நட்புடன் பழகக்கூடிய

நிலை உண்டாகும். தொழில், வியாபாரத் தில் நல்ல ஒரு வளர்ச்சி யினை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு இருந்து வந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் தற்போது குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் இருக்கிறது. ஒருசிலருக்கு தேவையில்லாத பயணமும் அதன்மூலம் வீண்செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று கூடுதலாக இருந்தாலும் உழைப்புக் கான ஊதியத்தை பெறக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நீண்டநாட்களாக இருந்த பிரச்சினைக்கெல்லாம் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படக்கூடிய நேரமாகும். காலபைரவரை வழிபாடு செய்வது, முருக வழிபாடு மேற் கொள்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 24, 25, 28, 29

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 5-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு இருக்கும் இடத்தில் நல்ல ஆதரவு கிடைக்கும். எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் இருக்கக்கூடிய நெருக்கடிகளைச் சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். பெண்கள்வழியில் ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. ஜென்ம ராசியில் சனி, 2-ல் ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, நெருங்கியவர்களைஅனுசரித்துச்செல்வது நல்லது. நீங்கள் வெகுளித்தனமாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடிய நேரமென்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் கவனத்தோடு செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேற இடையூறுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் தற்போது கிடைக்கக்கூடிய சின்ன வாய்ப்பையும் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் போட்ட முதலை எடுக்கமுடியும். ஒருசிலருக்கு தேவையில்லாத மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டு மன நிம்மதிக்குறைவு ஏற்படும். தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரிவர பராமரித்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்

தில் இருப்பவர்கள் பிறர் பேசக்கூடிய வார்த்தைகளை நம்பி இருக்கக்கூடிய வாய்ப்புகளை இழந்துவிட வேண்டாம். தற்போது நீங்கள் செய்யக்கூடிய வேலையில் கவனம் செலுத்தி கிடைக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒருநல்ல நிலையை அடையமுடியும். மாணவ- மாணவியர்கள் நண்பர்களிடம் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, பிரித்தியங்கரா தேவி வழிபாடு செய்வது நற்பலனைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 23, 26, 27

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 4-ல் சூரியன் இருப்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரமாகும். வயது மூத்தவரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய நேரமாகும். பேச்சால் வீண் பிரச்சினைகள் உண்டாகலாம் என்பதால் பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்பட்டு இருப்பதைஅனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது நிதானத்தோடு செல்வது நல்லது. குருபகவான் 3-ல் இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டிய நேரம் ஆகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள்

நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்லிக்கொள்ளும்படி இருக்காது. தற்போது நீங்கள் சற்று கவனத்தோடு செயல்பட்டால்தான் போட்ட முதலை எடுக்கமுடியும். தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருந்தால் வீண் பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். அசையும், அசையா சொத்துவகையில் வீண்செலவுகள் ஏற்பட்டு உங்கள் சேமிப்புகள் குறையக்கூடிய நேரமாகும். பெண்கள்வழியில் ஒருசில ஆதாயங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளுசற்று கூடுதலாக இருந்து மனநிம்மதி குறைவு ஏற்படும். உடன்பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வதுநல்லது. மாணவ- மாணவியர்கள் ஒவ்வொரு காரியத் திலும் நிதானத்தோடு இருப்பது, படிப்பில் கவனம்செலுத்துவது உத்தமம். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நற்பலனைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 23, 24, 25, 28, 29a