தமிழில் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய "சட்டப்படி குற்றம்' படத்தில் அறிமுகமானவர் கோமல் சர்மா. அதன்பிறகு நாகராஜசோழன் எம்.ஏ., எம்.எல்ஏ, வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களில் நடித்த இவர் தற்போது தமிழகம் தாண்டி மலையாளம், இந்தி என தனது எல்லைகளை விரிவாக்கியுள்ளார்.
மலையாளத்தில் தற்போது மிகப் பிரம்மாண்டமான வரலாற்று படமாக உருவாகி வரும் "மரைக்கார் அரபிக் கடலிண்டே சிம்ஹம்' படத்தில் நடித்துள்ளார் கோமல் சர்மா. பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், பிரபு நடித்துள்ள இந்தப் படம் குஞ்சாலி மரைக் கார் என்கிற கடற்படை தலைவனை பற்றிய படமாக உருவாகியுள்ளது. வரும் மார்ச் மாதம் இந்தப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை தமிழில் கலைப்புலி எஸ். தாணு ரிலீஸ் பண்ணுகிறார்.
இந்தப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து கோமல் சர்மா நம்மிடம் பேசும்போது, ""இந்த படத்திற்காக ஆடிசன் வைத்துதான் என்னை தேர்வுசெய்தார் இயக்குநர் பிரியதர்ஷன். பொதுவாகவே மோகன்லால் மற்றும் இயக்குநர் பிரியதர்ஷன் ஆகியோரின் படங்களில் ஒருமுறையாவது நடித்து விடவேண்டும் என்பது எல்லாருக்குமே ஒரு கனவாக இருக்கும். அந்தக் கனவு எனக்கு ஒரே படத்தில் அதுவும் மிகப் பிரம்மாண்டமான வரலாற்று படத்தில் நடிக்கும் வாய்ப்பாக நிறைவேறியுள்ளது என்பதை இப்போதுகூட என்னால் நம்பவே முடியவில்லை. சொல்லப் போனால் ஒரு லட்டை எதிர் பார்த்த எனக்கு ஒரே படத்தி லேயே மூன்று லட்டு கிடைத்தது.
அந்தப் படப்பிடிப்பில் நடித்த அனுபவமே ரொம்ப வித்தியாசமாக இருந்தது. குறிப்பாக கிட்டத்தட்ட 400 படங்களில் நடித்துவிட்ட மோகன்லால் சார், நான் ஒரு வளர்ந்துவரும் நடிகை என்கிற பாகுபாடு எல்லாம் பார்க்காமல் மிக இயல்பாக பழகினார்.
படத்தில் எனக்கு பெரும்பாலான காட்சிகள் அர்ஜுன் சாருடன்தான் இருந் தாலும், மோகன்லால், நெடுமுடி வேணு உள்ளிட்ட மற்ற அனைத்து நடிகர் களுடனும் நான் நடிக்கும் காட்சிகளும் இருந்தன.
மோகன்லாலை பொருத்தவரை எந்த ஒரு காட்சியையும் ஒரே டேக்கில் ஓகே செய்யக்கூடியவர். அதனால் நானும் அவருடன் இணைந்து நடிக்கும் காட்சிகளுக்கு என்னால் எந்தவித இடைஞ்சலும் வந்துவிடக்கூடாது என்பதால் படப்பிடிப்பிற்கு முன்னதாகவே, ஓரளவுக்கு மலையாளம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். இதற்காக தினசரி 2 மணி நேரம் மலையாளம் பேசி பயிற்சி எடுத்தேன். அது படப்பிடிப்பில் ஒரே டேக்கில் காட்சிகளை ஓகே செய்ய எனக்கு ரொம்பவே உதவியாக இருந்தது. படப் பிடிப்பு தளத்தில்கூட மலையாள புத்தகத்தை வைத்து ஏதாவது கற்றுக்கொண்டுதான் இருந்தேன்.
"மரைக்கார்' படத்தில் நடிக்கும்போதே மோகன்லால் சார் நடித்த இன்னொரு படமான "இட்டிமணி மேட் இன் சைனா' என்கிற படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப்படத்தில் நடிகை ராதிகாவின் மகளாக நடித்து இருந்தேன். அந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இடைவேளை நேரங்களில் நானும் ராதிகாவும் மட்டும் தமிழில் பேசிக்கொண்டே இருப்போம். படக்குழுவினர் எங்களை ஆச்சரியமாக பார்ப்பார்கள்..
"மரைக்கார்' படம் முடிவடைந்ததும் இயக்குநர் பிரியதர்ஷன் இந்தியில் "ஹங்கமா-2' படத்தைத் தொடங்கினார். இது அவர் ஏற்கெனவே 2003-ல் இந்தியில் இயக்கிய "ஹங்கமா' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி உள்ளது. "மரைக்கார்' படத்தில் எனது நடிப்பை பார்த்து வியந்துபோனவர், இந்த "ஹங்கமா-2' படத்தின்மூலம் இந்தியில் நுழையும் வாய்ப்பை யும் எனக்கு ஏற்படுத்தி கொடுத்துள் ளார். இந்தப்படத்தில் ஷில்பா ஷெட்டி, பரேஷ் ராவல் உள்ளிட்ட பாலிவுட் நடிகர் களுடனும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டது.
அந்தவகையில் "மரைக்கார்' படத்தில் நடித்ததன்மூலம் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தயாரித்த இன்னொரு படத்திலும், அந்தப் படத்தின் இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கிய இன்னொரு படத்திலும் நடிக்கும் வாய்ப்பு தானா கவே கிடைத்தது மிகப்பெரிய விஷ யம். கடுமையான உழைப்பு எப்போ தும் வீண் போகாது என்பதை அப்போதுதான் நான் உணர்ந்து கொண்டேன்'' என்கிறார் கோமல் சர்மா.
மலையாளம், இந்தி என திசை திரும்பியதால் தமிழ் படங்கள் இரண்டாம் பட்சம்தானா என கேட்டால் பதறுகிறார் கோமல் சர்மா.. ""தமிழில் சில படங்களில் நடித்துவருகிறேன்.. சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து முறையான அறிவிப்பு வெளியாகும்'' என்கிறார்.