ப் ஸ்ரீவித்யா, சென்னை.
சொந்தத் தொழில் அமையுமா? கடன் தொல்லை தீர என்ன பரிகாரம்?
விருச்சிக லக்னம், மீன ராசி, உத்திரட் டாதி நட்சத்திரம். 27-9-1977-ல் பிறந்தவர். லக்னாதிபதி செவ்வாய் 8-ல் மறைவு. எந்த ஜாதகருக்கும் லக்னாதிபதி மறைவென் பது ஒரு பின்னடைவு விஷயம்தான். மேலும் அவர் தனாதிபதி குருவுடன் மறைந்து அமர்ந்துள்ளார். எனவே, நீங்கள் வாழ்நாள் முழுவதும் திருச்செந்தூர் முருகனை வணங்குவது நல்லது. உங்கள் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் கேது இருப்பதும், அதன் அதிபதி குரு 8-ல் மறைவதும் பூர்வபுண்ணியக் குறையை சுட்டிக்காட்டுகிறது. உங்கள் 10-ஆமிட அதிபதி சூரியன் லாபத்தில் இருப்பினும், அவர் ராகுவோடு சேர்ந்து கிரகண நிலை எனும் மறைவுத்தன்மை பெறுகிறார். மேலும் இருவரும் ஒரே நட்சத்திரக் காலில் நின்று கிரக யுத்தநிலை அடைந்துள்ளனர். எனவே, உங்களுக்கு சொந்தத் தொழில் சரிப்படாது. மேலும் தங்களுக்கு விரயாதிபதி சுக்கிர தசை நடப்பு. தற்போது சுக்கிர தசையில் ராகு புக்தி ஓடுகிறது. இதில் நீங்கள், உங்கள் பூர்வீக சொத்தை விற்றுக் கடனை அடைக்கலாம். அடுத்து 2022, ஆகஸ்ட் மாதத்திற்குப்பிறகு, குரு புக்தி எதிர்பார்த்த நன்மைகளைத் தரும். உங்களின் 6-ஆம் அதிபதி, குருவுடன் கூடிநிற்பதால், கடன் பெருக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. எதிரிகள் தொல்லை ஏற்படாது. கடன் தொல்லை தீர, திருவாரூர் தியாகேசர் கோவிலில், ஸ்ரீருண விமோசன லிங்கத்திற்கு அபிஷேகம், அர்ச்சனை செய்யவும். விரயாதிபதி சுக்கிர தசையின் தாக்கமும் விரயமும் குறைய, தாயாரும் பெருமாளும் சேர்ந்திருக்கும் திருவல்லிக் கேணி பார்த்தசாரதி பெருமாளை வணங்கி வரவும். செவ்வாய்க்கிழமைதோறும் ஒரு பொழுது விரதமிருந்து, அருகிலுள்ள முருகரை வணங்க, உங்கள் கையில் ஓரளவு பணப்புழக்கம் இருக்கும்.
ப் மோகன், விருதுநகர்.
எனக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டா?
ரிஷப லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். லக்னாதிபதி உச்சம். லக்னாதி பதி உச்சமடைவது ஜாதகருக்கு பெரும் பலமாகும். லக்னத்தில் கேது; 7-ல் ராகு. சிறுதூரப் பயண அதிபதி சந்திரன் 12-ல் அமர்ந்திருப்பதால் உங்களுக்கு பயணங்கள் செய்வதில் அளவற்ற ஈடுபாடிருக்கும். சனி, செவ்வாய் சேர்க்கை. சனி தனது பத்தாம் பார்வையால் 11-ல் உள்ள சுக்கிரனை நோக்கு கிறார். எனவே, அயல்நாட்டுப் பயண ஆசை தடைப்படுகிறது. உங்களது அனைத்து விருப்பங்களுமே சற்று தடை, தாமதமாகி நடக்கும். நடப்பு ராகு தசை. இந்த, 7-ல் உள்ள ராகு தசையில் ஜாதகரின் வெளிநாட்டுப் பயண ஆவல் நிறைவேறும். ராகு தசையில் குரு புக்தி நடக்கிறது. கோட்சார குரு கும்ப ராசிக்கு மாறியவுடன், உங்கள் வெளிநாட்டுப் பயணம் நடக்கும். ஒருமுறை திருச்சி ஸ்ரீரங்க நாதரையும், பிள்ளையார்பட்டி பாஸ்போர்ட் விநாயகரையும் வழிபடவும்.
ப் சித்ரா, தஞ்சாவூர்.
எனக்கு எப்போது திருமணம் நடக்கும்?
தனுசு லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். லக்னாதிபதி குரு நீசம். எனினும் சனியின் பரிவர்த்தனையால் நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். உங்கள் வாழ்வில் எந்தச் செயலும் முதலில் தடங்கல் ஏற்பட்டு, பின் சரியாக நடக்கும். சூரியன், செவ்வாய் பரிவர்த்தனை. சூரியன் உச்சம்; சுக்கிரன் ஆட்சி. சனியும், குருவும் 6 மற்றும் 10-ஆமிடங் களைப் பார்வையிடுகிறார்கள். வேலை கிடைப்பது தாமதமானாலும், நல்லவேலை கிடைக்கும். சனியின் பார்வை சுக்கிரன்மேல் விழுவதால் திருமணம் சற்று தாமதமாக நடக்கும். மேலும் மிதுன ராசிக்கு அஷ்டமச்சனியும் நடக்கிறது. அது விலகட்டும். மேலும் நடப்பு சனி தசை; சனி புக்தி 2024, ஜுலை வரை. எந்த தசையும் தன் சுயபுக்தி யில் நன்மை தராது. எனவே சனி தசை, புதன் புக்தியில் உங்களது 25 வயதிற்குமேல் திருமணம் நடக்கும். அனேகமாக விருப்பத் திருமணமாக இருக்கும். அஷ்டமச் சனி முடியும்வரை பைரவருக்கு 19 மிளகைப் பொட்டலம் கட்டி, புது அகல் விளக்கில் வைத்து திரிபோட்டு விளக்கேற்றி வணங்க வும். ஒவ்வொரு சனிக்கிழமையும் செய்யவும். உங்கள் ஜாதகத்தில் சனி, கேது, ராகு சம்பந்தம் இருப்பதால் பரிகாரம் அவசியம். சனி தசையில் சந்திர புக்தி நடக்கும்போது சிவனுக்கு பாலாபிஷேகம் செய்வது அவசியம். தங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷமோ, நாகதோஷமோ கிடையாது.
ப் ஆர்.கே. விண்ணவர்கோன், அரக்கோணம்.
என் தம்பிமகள் பொறியியல் படித்துள்ளார். அவர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார். அவரும் தம்பி மகளை விரும்புகிறார். நாங்களும் திருமணம் செய்துகொடுக்க எண்ணுகிறோம். அவர்களது மணவாழ்வு எப்படியிருக்கும்?
தம்பிமகள் 17-05-1999-ல் பிறந்த வர். துலா லக்னம், மிதுன ராசி, மிருகசீரிட நட்சத்திரம். ராசிக்கு 2-ல் ராகு; 8-ல் கேது. எனவே நாக தோஷ ஜாதகம். 7-ல் சனி நீசம். எனினும், அந்த இடத்து அதிபதி செவ்வாய் சனியைப் பார்ப்பதால், சனி நீசபங்கம் அடைகிறார். மேலும், 5-ஆம் அதிபதி சனியும், 7-ஆம் அதிபதி செவ்வாயும் பார்வை. எனவே காதல் திருமணமே நடக்கும். இந்தப் பெண் ஜாதகத் தில் 11-ஆம் அதிபதி சூரியன் 8-ல் அமர்ந்துள் ளார். மேலும் 8-ஆமிடமான மாங்கல்ய ஸ்தானத்தை செவ்வாய் தனது எட்டாம் பார்வையால் நோக்குகிறார். எனவே என்னதான் காதல் திருமணம் நடந்தாலும், குலதெய்வக் கோவிலில் தாலி காணிக்கை செலுத்தவும். மேலும் திருச்சி அருகே திருப் பைஞ்ஞீலி என்ற கோவிலில் கல் வாழைக்குப் பரிகாரம் செய்யவும். நடப்பு குரு தசை குரு புக்தி 2022, ஜூன் வரை. எனவே அடுத்து வரும் சனி புக்தியில் திருமணம் செய்யவும். எந்த தசையும் தன் புக்தியில் நற்பலன் கொடுக்காது. பரிகாரம் செய்தபிறகுதான் திருமணம் நடத்த வேண்டும். இதை அவசியம் செய்யவேண்டும்.
ப் ஆர். நிர்மலா, ஆதம்பாக்கம்.
என் மகளுக்குத் திருமணம் எப்போது நடக்கும்?
மகள் 8-9-1999-ல் பிறந்தவர். கடக லக்னம், கடக ராசி. லக்னத்தில் ராகு; 7-ல் கேது. 2-ல் சூரியன் ஆட்சி; 5-ல் செவ்வாய் ஆட்சி. 10-ஆமிடத்திலுள்ள குரு, சனியை நீச பங்க ராஜயோகம் பெறச் செய்கிறார். இவருக்கு நாக தோஷமுள்ளதால், அதே நாக தோஷமுள்ள வரனையே தேர்ந்தெடுக்க வேண்டும். இவரின் 2-ஆம் அதிபதி சூரியன் அம்சத்தில் நீசம். 7, 8-ஆம் அதிபதி சனி, அம்சத் தில் உச்சம். இவருக்கு வரும் வரன் சற்று வயோதிக தோற்றம் கொண்டவராக இருக்கக் கூடும். எனினும் நல்ல உழைப்பாளியாக இருப் பார். நடப்பு சுக்கிர தசை. பெண்ணின் 7-ஆமிடத்தை சனி பார்ப்பதால், திருமணம் சற்று தாமதமாகும். 22-5-2024-க்குப்பிறகு திருமணம் நடக்கும். சனிக்கிழமைதோறும் வெள்ளை மலர்மாலை சாற்றி பெருமாளை வணங்கவேண்டும். கும்பகோணம் அருகே யுள்ள திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் ஜாதகத்தை வைத்து அர்ச்சனை செய்யவும்.
செல்: 94449 61845
______________________________________
வாசகர்கள் தங்கள் கேள்விகளை, பெயர், பிறந்த தேதி, நேரம், ஊர் ஆகியவற்றை தெளிவாகக் குறிப்பிட்டு,
பாலஜோதிடம்,
76, 14-ஆவது தெரு,
அம்பத்தூர் தொழிற்பேட்டை தெற்கு,
சென்னை-58
என்னும் முகவரிக்கு அனுப்பவும்.