ஒரு திரைப்படத்தில், நகைச்சுவை நடிகர் ஒருவரை, "இவர் இதற்கு சரிப்பட்டு வரமாட்டார்' என்று அனைவரும் கூறுவார்கள். ஆனால் அவர் எதற்கு சரிப்பட்டு வரமாட்டார் என எவரும் கூறமாட்டார்கள்.
ஆனால் ஜோதிடத்தில், ஒரு கிரக பாவகத்தில் அசுபத் தன்மையடைந்த கிரகம் சென்று சேரும்போது, அதனைக் கணக்கீடு செய்து, "இந்த ஜாதகர் இதற்கு சரிப்பட்டு வரமாட்டார்' என தெளிவுபடக் கூறிவிடலாம். இதில் ராகு- கேது தவிர மற்ற கிரகங்கள் 12 பாவகங்களிலும் கெட்டுப்போய் இருந்தால் ஜாதகர் எதற்கு சரிப்பட்டு வரமாட்டார் என கூறப் பட்டுள்ளது.
ராகு- கேதுக்கள் ஜாதகத்தில் எந்த வீட்டில் இருப்பினும் அந்த பாவகம் சம்பந்தப்பட்ட செயலுக்கு ஜாதகர் சரிப்பட மாட்டார் என தெளிவாகக் கூறிவிடலாம். எனவே ராகு- கேதுவைப் பற்றி குறிப்பிடவில்லை. ஏனெனில் மற்ற கிரகங்கள் சுப- அசுபத் தன்மை பெறும் வாய்ப்புள் ளவை. ஆனால் ராகு- கேது அசுபத் தன்மை மட்டும் உடையவர்கள்.
இனி 12 பாவ கங்களுக்கும் கிரகம் அசுபத் தன்மை அடைவதால் ஜாதகருக்கு சரிப்பட்டு வராதவை எவை என காண்போம்.
லக்னமும் அசுப கிரக சம்பந்தமும்
லக்னம்+சூரியன்: சூரியன் அசுபராகி லக்ன சம்பந்தம் பெற்றால், ஜாதகர்கள் நல்ல கண் பார்வைக்கும், கம்பீரமான தோற்றத் திற்கும் சரிப்பட மாட்டார்கள். இவர்கள் சென்னை- காஞ்சிபுரம் வழி மதுரமங்கலம் சென்று வழிபடவேண்டும். ஞாயிறுதோறும் சூரிய காயத்ரி பாராயணம் செய்வது நன்று.
லக்னம்+சந்திரன்: சந்திரன் கெட்டு லக்ன தொடர்புபெற, ஜாதகர் ஆரோக்கியத்திற்கு சரிப்பட்டு வரமாட்டார். அவ்வப்போது திருப்பதி சென்று வழிபடுவது சிறப்பு.
லக்னம்+செவ்வாய்: செவ்வாய்
அசுபத் தன்மை பெற்று லக்னத்தைத் தொட, அமைதியான- சாத்வீக வாழ்க்கைக்கு சரிப்பட்டு வர மாட்டார். அடிக்கடி பழனி சென்று வழிபடு வது நல்லது.
லக்னம்+புதன்: புதன் கெட்டு லக்னம்
மேவிட, நல்ல ஞாபக சக்திக்கும் புத்திக் கூர்மைக்கும் சரிப்பட்டு வரமாட்டார். திரு வெண்காடு சென்று வழிபடவும்.
லக்னம்+குரு: குரு அசுபராகி லக்னம் ஏறிட, பெருந்தன்மையான செயல்களுக்கு ஜாதகர் சரிப்பட்டு வரமாட்டார். ஆலங்குடி சென்று வணங்கவேண்டும். வியாழக்கிழமை விரதம் நன்று. லக்னம்+சுக்கிரன்: சுக்கிரன் கெடுநிலை பெற்று லக்ன சம்பந்தம் பெற, ஜாதகர் அழகுபடுத்திக்கொள்ள சரிப்பட மாட்டார். கும்பகோணம்- கஞ்சனூர் சென்று வழிபடவும்.
லக்னம்+சனி: சனி லக்னத்தைத் தொட, ஜாதகர் சுறுசுறுப்புக்கு சரிப்பட மாட்டார். திருநள்ளாறு சென்று வணங்க வேண்டும்.
இரண்டாமிடமும் அசுப கிரக சம்பந்தமும்
இரண்டாமிடம்+சூரியன்: சூரியன் கெட்டு இரண்டாமிட சம்பந்தம் பெற்றால், ஜாதகர் அரசு சம்பாத்தியம், தந்தை, தந்தை சொத்துக்கு சரிப்பட மாட்டார். திருக்காளஹஸ்தி சென்று வணங்க வேண்டும்.
இரண்டாமிடம்+சந்திரன்: சந்திரன் அசுபத் தன்மை பெற்று இரண்டாமிடம் சார்ந்திட, தெளிவான பேச்சுக்கு இவர் சரிப்பட மாட்டார். நாச்சியார் கோவில், திருப்பெருந்துறை தலம் சென்று வழிபடவேண்டும்.
இரண்டாமிடம்+செவ்வாய்: செவ்வாய் கெட்டு இரண்டாமிடம் சேர்ந்திட, நல்ல குடும்ப வாழ்க்கைக்கும், மாங்கல்ய பலத்துக்கும் இந்த ஜாதகர் சரிப்பட்டு வரமாட்டார். திருத்தணி சென்று வழிபடவேண்டும்.
இரண்டாமிடம்+புதன்: புதன்
அசுபராகி இரண்டாமிடம் பொருந்தினால், இந்த ஜாதகர் தான் நினைத்ததை பிறருக்குத் தெளிவுபட எடுத்துரைக்க சரிப்பட மாட்டார். குணசீலம் சென்று வணங்குவது நன்று.
இரண்டாமிடம்+குரு: குரு கெட்டுக் குறுகி இரண்டாமிடம் சென்றிட, உண்மை யான- மதிப்பான பேச்சுக்கு இவர் சரிப்பட மாட்டார். திருவொற்றியூர் சென்று வணங்கவும்.
இரண்டாமிடம்+சுக்கிரன்: சுக்கிரன் கெட்டு இரண்டாமிடம் ஏகிட, குடும்பம் என்ற அமைப்புக்கே இவர் சரிப்பட மாட்டார். திருச்செங்கோடு சென்று வழிபடவும்.
இரண்டாமிடம்+சனி: சனி அசுபராகி இரண்டாமிடம் ஆக்கிரமிக்க, செல்வம், குடும்பம், நல்ல வார்த்தைகள் என எதற்குமே இவர் சரிப்பட்டு வரமாட்டார். ஆச்சாள்புரம் சென்று வணங்கவேண்டும்.
மூன்றாமிடமும் அசுப கிரக சம்பந்தமும்
மூன்றாமிடம்+சூரியன்: சூரியன்
அசுபத் தன்மையுடன் மூன்றாமிடத்தில் மூழ்க, ஜாதகர் தைரியத்திற்கு சரிப்பட மாட்டார். திருவண்ணாமலை சென்று வழிபடவும்.
மூன்றாமிடம்+சந்திரன்: சந்திரன்
அசுபத் தன்மையுடன் மூன்றாமிடம் இணைய, இவர் தன்னம்பிக்கைக்கு சரிப்பட மாட்டார். திருவக்கரை சென்று வணங்கவும்.
மூன்றாமிடம்+செவ்வாய்: செவ்வாய் கெட்டு மூன்றாமிடம் கூட, துணிச்சலான செயல்களுக்கு சரிப்பட மாட்டார். இவர்கள் சிக்கல் சென்று வழிபடவேண்டும்.
மூன்றாமிடம்+புதன்: புதன் புஸ்வானமாகி மூன்றாமிட சம்பந்தம் பெற, இவர்கள் சிலபல வீர- வீரிய செயல்களுக்கு சரிப்பட மாட்டார்கள். திருவாரூர்- பூவனூர் கோவில் சென்று வழிபடவேண்டும்.
மூன்றாமிடம்+குரு: குரு அசுபத் தன்மை பெற்று மூன்றாமிடம் அமர, ஞாபகசக்தி, மனதில் உறுதி என இவை எதற்கும் ஜாதகர் சரிப்படமாட்டார். கும்பகோணம் அருகே கொருக்கை சென்று வழிபடவும்.
மூன்றாமிடம்+சுக்கிரன்: சுக்கிரன்
அசுபத் தன்மை பெற்று மூன்றாமிடம் சேர, தாம்பத்திய வாழ்க்கை சிறப்புக்கு இவர்கள் சரிப்பட மாட்டார்கள். கஞ்சனூர் சென்று வணங்கவும்.
மூன்றாமிடம்+சனி: சனி கெட்டு மூன்றா மிடம் சேர, எதிர்பாலரிடம் சம்பந்தம் கொள்வதற்கு சரிப்பட மாட்டார்கள். ஆஞ்சனேயரை வணங்கவும்.
மூன்றாமிடம் அசுப கிரக சம்பந்தம் பெற்று மிகவும் கெட்டிருந்தால், அந்த ஜாதகருக்கு திருமணம் செய்துவைக்காமல் இருப்பது மிகப்பெரிய புண்ணியமாகும்.
நான்காமிடமும் அசுப கிரக சம்பந்தமும்
நான்காமிடம்+சூரியன்: சூரியன் கெட்டு நான்காமிட சம்பந்தமுள்ள ஜாதகருக்கு அரசு, அரசியல், தந்தைவழி சொத்து போன்றவை சரிப்படாது. சுசீந்தரம் சென்று வழிபடவும்.
நான்காமிடம்+சந்திரன்: சந்திரன்
அசுபத் தன்மையடைந்து நான்காமிடம் ஏகிட, ஜாதகர்கள் வீட்டிற்கும், வீட்டில் கிணறு மற்றும் தண்ணீர் வசதிக்கும் சரிப்பட மாட்டார்கள். திருப்பதி அல்லது திங்களூர் சென்று வழிபடவேண்டும்.
நான்காமிடம்+செவ்வாய்: செவ்வாய் செறிவில்லாமல் கெட்டு நான்காமிடம் செல்ல, ஜாதகர் மனை, விவசாயத்துக்கு சரிப்பட மாட்டார். நிலம், வீடு, வழக்கு மற்றும் தீ விபத்திலிருந்து மீட்க சரிப்பட மாட்டார். திருச்சி- மண்ணச்சநல்லூர் சென்று வழிபடவும். சிறுவாபுரி சென்றும் வழிபடலாம்.
நான்காமிடம்+புதன்: புதன் நீசம்
அல்லது கெட்டு நான்காமிடம் பொருந்த, ஜாதகர் ஒரே வீட்டிலிருக்க சரிப்பட்டு வராது. நல்ல மேன்மையான வீட்டிலிருக்க இவர் சரிப்பட்டு வரமாட்டார். திருவையாறு, கடுவெளி ஆகாசபுரீஸ்வரர் ஆலயம் சென்று வழிபடவும்.
நான்காமிடம்+குரு: குரு அசுபராகி நான்காமிடம் குறுகி அமர, கிடைக்கும் பூர்வீக வீட்டையோ, இருக்கும் இடத்தையோ தக்கவைத்துக்கொள்ள சரிப்படாதவர். புதுக்கோட்டை- திருக்கோளக்குடி எனும் தலத்தை வணங்கவும்.
நான்காமிடம்+சுக்கிரன்: சுக்கிரன் கெட்டு நான்காமிட சம்பந்தம் பெற்றால், ஜாதகர் சொந்தமான வீடு, அடுக்குமாடி, பங்களா என எதற்குமே சரிப்பட்டு வரமாட்டார். திருவாரூர் மாவட்டம், திருவிற்குடி வீரட்டம் என்னும் கோவில் சென்று வழிபடுதல் சிறப்பு.
நான்காமிடம்+சனி: சனி சரிந்து நான்காமிடம் சாய, புதிய, வெளிச்சமான, பெரிய, வளமான, இடியாத வீட்டிற்கு இவர் சரிப்பட மாட்டார். சிலசமயம் குடிசை வீட்டுக்குக்கூட சரிப்பட மாட்டார். சிறுவாபுரி சென்று வழிபடவேண்டும்.
(தொடரும்)
செல்: 94449 61845