முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாத சாரம்:

சூரியன்: கிருத்திகை- 4.

செவ்வாய்: ஆயில்யம்- 2.

Advertisment

புதன்: கிருத்திகை- 3.

குரு : மிருகசீரிடம்- 3.

சுக்கிரன்: ரேவதி- 3.

Advertisment

சனி: உத்திரட்டாதி- 1.

ராகு: பூரட்டாதி- 3.

கேது: உத்திரம்- 1.

ww

கிரக மாற்றம்:

31-5-2025 மேஷ சுக்கிரன் பகல் 11.34 மணிக்கு

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்: மேஷம்

26-5-2025 பகல் 1.40 மணிக்கு ரிஷபம்.

28-5-2025 பகல் 1.36 மணிக்கு மிதுனம்.

30-5-2025 பகல் 3.42 மணிக்கு கடகம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் நல்லதாக பேசினா லும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக் கொள்வார்கள் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. குரு 3-ல் இருப்பதால் பணவரவில் ஒரு ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும். சக்திக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்ப தால் எதிலும் சிக்கனத்தோடு இருக்கவேண்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமையானது சிறப்பாக இருக்கும் என்பதால் அதன்மூலம் ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தவிர்த்துவிட்டு தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒருநல்ல நிலையை அடையமுடியும். முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு மற்றவர்களுடைய பணியும் சேர்த்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருக்கும் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருக்கவேண்டும். மாணவ- மாணவியர்கள் உடன் பழகக்கூடிய நண்பர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உடன்பிறந்த வர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். வரும் நாட்களில் வளமான பலன்களை பெற மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, மாற்றுத் திறனாளி களுக்கு உங்களால் முடிந்த உதவி களைச் செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 25, 29, 30.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் செவ்வாய், 11-ல் சனி, சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கும். எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். பணவரவுகள் சிறப் பாக இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகள் குறையும். தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு உங்களது வளர்ச்சியானது மிகவும் சிறப்பாக இருக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பது மட்டும் இல்லாமல் திறமை வாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவதால் வாடிக்கையாளர்களுடைய தேவையை எளிதில் பூர்த்தி செய்யமுடியும். அரசாங்கவழி யில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகளை வரும் நாட்களில் பெறக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு இருக்கிறது. வேலைக்கு செல்பவர்களுக்கு கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது விடிவுகாலம் பிறந்து ஒரு கௌரவமான நிலையினை அடைவீர்கள். மாணவ- மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக் கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவதும், விநாயகர் வழிபாடு மேற்கொள்வதன்மூலம் வளமான பலன்களை பெறமுடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 26, 27, 30, 31.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் காரணமாக மன அமைதியானது குறையும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றுவதில் இடையூறுகள் ஏற்படும். வயது மூத்தவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எந்த ஒரு விஷயத்திலும் யோசித்து செயல்படவேண்டிய காலமாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் நிதானத்தோடு செயல்படவேண்டும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் கடினமாக உழைத் தாலும் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக தடைப் படும். வேலையாட்களை அனுசரித்துசெல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். ஒரு சிலருக்கு தொழில்ரீதியாக சட்ட சிக்கல்கள் ஏற்படக் கூடிய காலம் என்பதால் தொழில் தொடர்பான கணக்கு களை சரிவர பராமரிப்பது நல்லது. உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலைப்பளு காரணமாக ஓய்வுநேரம் குறைவது மட்டுமில்லாமல் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் பேசுகின்றபொழுது பொறுமையோடு இருப்பது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற சிவன் ஸ்தலங் களுக்கு சென்று வருவது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது மூலம் உங்களுக்கு இருக்கக்கூடிய தேவையற்ற பிரச் சினைகள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள்: 25, 28, 29.

ss

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சனி, சுக்கிரன், லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கும். எந்த ஒரு காரியத்தி லும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாக உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் தற்போது குறைந்து அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன் மூலமாக ஒருசில ஆதாயங்கள் கிடைக்கும். வண்டி, வாகனங் களில் செல்கின்றபொழுது பொறுமையோடு இருக்க வேண்டும். உடல் ஆரோக் கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத் தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் அதிகாரி யிடம் இருந்துவந்த மனஸ்தாபங்கள் எல்லாம் தற்போது விலகி மன நிம்மதி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் எதிர்பார்த்த மதிப்பெண் களைப் பெறக்கூடிய நேரமாகும். உங்கள் வாழ்வில் வளமான பலன்களைப்பெற அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபமேற்றுவதன் மூலம் நற்பலன் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள்: 25, 26, 27, 30, 31.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசியாதிபதி சூரியன்- புதன் சேர்க்கைப் பெற்று 10-ல் சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதாலும் உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணவரவுகள் தாராளமாக இருந்து குடும்பத் தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். பூர்வீக சொத்துவகையில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகளுக்கு தற்போது ஒருநல்ல தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் தடைப்பட்டுவந்த மங்களகரமான சுபகாரியங்கள் தற்போது கை கூடி மனமகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ் நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட எளிதில் செய்து முடிக்கமுடியும். இரவு நேரப் பயணங்களைத் தற்காலிக மாக தள்ளிவைப்பது மிகவும் நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் சிறப் பாக செயல்படக்கூடிய பலமும் அதிகாரியுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கக் கூடிய நிலையும் வரும் நாட்களில் உண்டு. மாணவ- மாணவியர்களுக்கு மன மகிழ்ச்சி தரக்கூடிய அளவிற்கு நல்ல செய்தி ஒன்று கிடைக்கும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள்: 27, 28, 29, 30.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 7-ல் சுக்கிரன், 9-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். லாப ஸ்தானத் தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்பாராத தன சேர்க்கை ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பெரிய மனிதருடைய ஆதரவானது உங்களுக்கு கிடைப்பதால் நீண்ட நாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்த பிரச்சினைகளுக்குத் தற்போது ஒருநல்ல தீர்வு கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். சர்ப கிரகமான ராகு பகவான் 6-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் முனைப் புடன் செயல்பட்டு போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு உங்களுடன் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களால் முடிக்கமுடியாத பணிகளைக்கூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் சிறப்பான மதிப்பெண்கள் எடுப்பது மட்டுமில்லாமல் விரும்பிய உயர்கல்வியை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற காலபைரவரை வழிபாடு செய்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவதன்மூலம் அனுகூலங்களை அடையமுடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 29, 30, 31.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 6-ல் சனி, 9-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகி ஏற்ற மிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் மதிப்பு மிகுந்த பதவி ஒன்று உங்களைத் தேடிவரும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில்ரீதியாக இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் வரும் நாட்களில் கிடைக்கும். பிள்ளைகள்வழியில் இருந்துவந்த மனக்கவலைகள் எல்லாம் வரும் நாட்களில் இருந்த இடம் தெரியாமல் மறையும். அசையும், அசையா சொத்துவகையில் அனுகூலமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு நல்லபெயர் எடுக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். மாணவ- மாணவியர்கள் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியரிடம் பாராட்டுதலை பெறக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைத் பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 25, 30, 31.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், புதன், 8-ல் குரு சஞ்சரிப்பதால் எதிலும் சற்று நிதானத் தோடு இருக்கவேண்டும். சக்திக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச்செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. ஒருசில விஷயங்களில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன்மூலமாக வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். அசையும், அசையா சொத்துவகையில் சுபச்செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்கள் சொல்லக்கூடிய ஆசை வார்த்தைகளை நம்பி தற்போது இருக்கக்கூடிய நல்லவாய்ப்புகளை இழந்துவிடாமல் இருப்பது மிகவும் நல்லது. சக ஊழியர்களிடம் பேசுகின்ற பொழுது பேச்சில் பொறுமையோடு இருக்கவேண்டும். மாணவ- மாணவியர்கள் பெற்றோர்களிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய நேரம் என்றாலும் சக நண்பர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது உத்தமம். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 25, 26, 27.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். ராசியாதிபதி குருபகவான் 7-ல் சஞ்சரிப்பதாலும், 3-ல் ராகு சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். கடந்தகாலத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உங்களுக்கு உண்டு. கணவன்- மனைவியிடையே ஒற்றுமையானது மிகவும் சிறப் பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பான லாபத்தை வரும் நாட்களில் பெறமுடியும். கடந்தகாலங்களில் உங்களுக்கு இருந்துவந்த தொழில் முடக்கங் கள் எல்லாம் தற்போது விலகி படிப்படியான வளர்ச்சிகளை அடைவீர்கள். தொழில்ரீதியாக இருந்துவந்த வம்பு, வழக்குகளுக்கு எல்லாம் தற்போது ஒரு முடிவு கிடைத்து மன நிம்மதி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் மற்றவர்களால் முடிக்கமுடியாத பணியைக்கூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான மதிப்பெண்களைப் பெற்று மற்றவருடைய பாராட்டுதலை பெறுவீர்கள். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 27, 28, 29.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி சனி, சுக்கிரன் சேர்க்கைப்பெற்று 3-ல் சஞ்சரிப்பதாலும், 5-ல் புதன் சஞ்சரிப்பதாலும் சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. நீண்டநாட்களாக நீங்கள் எண்ணிய காரியங்கள் எல்லாம் தற்போது கைகூடி மனமகிழ்ச்சி ஏற்படும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் தற்போது குறைந்து ஏற்றமிகுந்த பலன்கள் ஏற்படும். கூட்டாளிகளை சற்று அனுசரித்துசெல்வதன்மூலமாக வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். ஒருசிலருக்கு விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கக்கூடிய யோகங்கள் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட பயனுள்ள காரியங்களுக்கு நேரத்தை செலவிடுவது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற துர்க்கை வழிபாடு மேற்கொள்வது, முருகருக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 29, 30, 31.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் சுக்கிரன், 5-ல் குரு, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்ப தால் பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைக்கூடும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். உங்களுக்கு இருந்துவந்த மறைமுக பிரச்சினைகள் தற்போது விலகும். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தற்போது கிடைக்கும். உங்கள் ராசிக்கு 2-ல் சனி சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். அதிகாரியுடைய ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடந்த காலங்களில் உங்களால் முடிக்க முடியாத பணிகளை வரும் நாட்களில் எளிதில் முடிக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறக் கூடிய நேரமாகும். அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வதன்மூலமாக உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள்: 25, 26, 31.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ஜென்ம ராசியில் சுக்கிரன், 3-ல் சூரியன், 6-ல் கேது சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடையவேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். பெண்கள்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. ஜென்ம ராசியில் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, எதிலும் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது மிகவும் நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத் தோடு இருப்பதன்மூலமாக வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒருநல்ல நிலையினை அடையக்கூடிய யோகமானது உங்களுக்கு உண்டு. வேலையாட்களை அனுசரித் துச் செல்வதன்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருந்தால் வளமான பலன்களை அடையலாம். உத்தியோகரீதியாக நல்லவாய்ப்புகள் கிடைக்கக்கூடிய நேரமென்றாலும் உடன் வேலைச் செய்பவர்களுடைய வேலையும் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். மாணவ- மாணவியர்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் பேசுகின்றபொழுது பொறுமையோடு இருப்பது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவதன்மூலமாக அனுகூலங்கள் ஏற்படும்.

வெற்றி தரும் நாட்கள்: 27, 28.