முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: மிருகசீரிடம்- 2.
செவ்வாய்: மகம்- 2.
புதன்: திருவாதிரை- 4.
குரு: திருவாதிரை- 1.
சுக்கிரன்: பரணி- 1.
சனி: உத்திரட்டாதி- 2.
ராகு: பூரட்டாதி- 3.
கேது: உத்திரம்- 1.
கிரக மாற்றம்:
15-6-2025 மிதுன சூரியன் காலை 6.44 மணிக்கு
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: மகரம்
16-6-2025 பகல் 1.10 மணிக்கு கும்பம்
18-6-2025 மாலை 6.35 மணிக்கு மீனம்
20-6-2025 இரவு 9.45 மணிக்கு மேஷம்
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியில் சுக்கிரன், 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். குருபார்வை 7-ஆம் வீட்டுக்கு இருப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு 11-ல் ராகு சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் சாமர்த்தியமாக செயல்பட்டு கடந்தகால பிரச்சினைகளை சமாளித்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். வேலையாட்களால் சில இடையூறுகள் இருந்தாலும் உங்கள் தனித் திறமையால் எதையும் சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். வெளியூர் தொடர்புகள்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நெருக்கடி இருந்தாலும் எடுத்தப் பணியை குறித்த நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய பலம் உங்களுக்கு இருக்கும். மாணவ- மாணவியர்கள் எதிலும் சிறப்பாக செயல்பட்டு பெற்றோர்- ஆசிரியர்களின் பாராட்டுதலை பெறக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 15, 16, 17, 18.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, புதன், 11-ல் சனி சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகவும் சாதகமாக இருந்து அனைத்துவிதமான தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது விலகி ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்கள்மூலமாக ஒரு சில வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில்ரீதியாக சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய யோகமானது உங்களுக்கு இருக்கிறது. புதிய யுக்திகளை பயன்படுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உடல்ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய கடன்களை குறைத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்கள்மீது இருந்த பழிச்சொற்கள் எல்லாம் தற்போது விலகுவதால் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவ- மாணவியர்கள் முன்பைவிட தற்போது உற்சாகத்தோடு செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வதன்மூலம் வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 16, 17, 18, 19.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் புதன், 3-ல் செவ்வாய், கேது, 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொண்டு எதிலும் சிக்கனத்தோடு இருக்கவேண்டும். அதிலும் குறிப்பாக உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் எடுத்த காரியத்தை குறித்த நேரத்தில் செய்துமுடித்து நல்ல லாபத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கும். அரசு அதிகாரியிடம் பேசுகின்ற பொழுது பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. ஒருசிலருக்கு பயணங்கள்மூலமாக அனுகூலமான பலன்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமை களை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். உடன் இருப்பவர்களிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படலாம் என்பதால் பிறர் விஷயத்தில் தலையிடாமல் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் போட்டித்தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய காலமாகும். ஒருசில விஷயங்களில் சிந்தித்துச் செயல்படுவதன்மூலமாக வளமான பலன்களை அடையமுடியும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவதற்கு காலபைரவரை வழிபாடு செய்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 19, 20, 21.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 9-ல் சனி, 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பெண்கள்மூலமாக அனுகூலமான பலன்களை பெறக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு இருக்கிறது. உங்கள் ராசிக்கு 12-ஆம் வீட்டில் சூரியன், குரு, புதன் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. பொதுவாக நீங்கள் பேச்சில் சற்று பொறுமையோடு இருந்தால்தான் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை எளிதில் சமாளிக்கக்கூடிய ஒருபலம் உண்டாகும். தொழில், வியாபாரத் தில் தற்போது கிடைக்கக் கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையினை அடையக்கூடிய யோகமானது உங்களுக்கு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் மேலதிகாரிகளிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது உத்தமம். மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்களுக்கு தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்தக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது நிதானம் தேவை. வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெறுவதற்கு தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வதுமூலம் நல்லது நடக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 15, 21.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி சூரியன், குரு, புதன் சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதும், 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கும். எடுத்த காரியத்தை குறித்த நேரத்தில் செய்து முடிக்கக் கூடிய பலம் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி அதிகப் படியான லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. கடந்தகாலங்களில் உங்களுக்கு இருந்துவந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் தற்போது இருந்த இடம் தெரியாமல் மறையும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் சுறுசுறுப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் நீங்கள் விரும்பிய இடமாற்றத்தை பெறக்கூடிய நேரமாகும். புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத்தி-ருந்து அழைப்புகள் வரும். ஜென்ம ராசியில் செவ்வாய், 8-ல் சனி சஞ்சரிப்பதால் கோபத்தை குறைத் துக்கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு நல்லபெயர் எடுக்க முடியும். முருக வழிபாடு மேற்கொள்வது, மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதுமூலம் வளமான பலன்களைப் பெறமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 15, 16, 17.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக, ஸ்தானமான 6-ல் ராகு, 10-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். கடந்த சில நாட்களாக இருந்துவந்த பிரச்சினைகள் தற்போது குறையும். நண்பர்கள்மூலமாக ஒரு வளமான பலன்களைப் பெறுவீர்கள். ஒருபெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் ஏற்றமிகுந்த பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில், வியாபாரத்தில் சற்று பொறுமையோடு செயல் பட்டால் அனுகூலமான பலன்களை அடையக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு உண்டு. சில விஷயங்களில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன்மூலமாக அனுகூலமான பலன்களை அடையமுடியும். உத்தியோகத் தில் இருப்பவர்கள் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையினை அடையக்கூடிய அதிர்ஷ்ட மானது உங்களுக்கு உண்டு. உடன்பிறந்தவரிடம் பேசுகின்றபொழுது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்களுக்கு தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்தக்கூடிய காலம் என்பதால் எதிலும் கவனத்தோடு இருக்கவேண்டும். மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வதன்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு.
வெற்றி தரும் நாட்கள்: 16, 17, 18, 19, 20.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 6-ல் சனி, 9-ல் குரு, புதன், 11-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதாலும், கடந்த ஒரு மாதகாலமாக 8-ல் சஞ்சரித்த சூரியன் இனி 9-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். உடல் ஆரோக்கிய ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் இனி படிப்படியாக குறையும். குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் எல்லாம் விலகி வளமான பலன்களை அடையக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு உண்டு. தொழில், வியாபாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடையக்கூடிய யோகமும், தொழிலை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்புகளும் வரும் நாட்களில் ஏற்படும். அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை பெறக்கூடிய நேரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சுறுசுறுப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் கடந்தகாலங்களில் நீங்கள்பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது ஒரு விடிவு காலம் பிறந்து பொருளாதாரரீதியாக மிகப்பெரிய ஒரு அனுகூலத்தை பெறுவீர்கள். மாணவ- மாணவியர்கள் எதிலும் சிறப்பாக செயல்பட்டு படிப்பில் சிறந்து விளங்கக்கூடிய அமைப்பும், திறனை வெளிப்படுத்தக்கூடிய போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற துர்க்கையம்மனை தரிசிப்பது, அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 19, 20, 21.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு 4-ல் ராகு, 8-ல் சூரியன், குரு, புதன் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று பொறுமையோடு இருக்கவேண்டும். சக்திக்கு மீறியச் செலவுகள் ஏற்படக்கூடிய ஒரு நேரமென்பதால் பணவிஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருக்கவேண்டும். நீங்கள் பெரிதும் நம்பியவர்களே உங்களுக்கு தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட தடைப்படக்கூடிய நேரமாகும். வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது. வேலைக்குச் செல்பவர்கள் வீண் பேச்சை குறைத்துவிட்டு எதிலும் நிதானத்தோடு செயல்படவேண்டும். ஒருசிலருக்கு அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருக்கவேண்டும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குக்கூட தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்படவேண்டும் என்று நினைத்தாலும் ஞாபக மறதி ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் நிதானத்தோடு இருப்பது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்வதன்மூலம் அனுகூலங்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 15, 21.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன், 7-ல் குரு, புதன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகள் தாராளமாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உங்கள் ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எந்த ஒரு காரியத்திலும் சாமர்த்தியமாக செயல்படக்கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக் கூடிய வாய்ப்புகள் உண்டு. கூட்டாளிகள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய அதிர்ஷ்ட மானது உங்களுக்கு இருக்கிறது. ஒருசிலருக்கு தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் மனைவி, பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கி தரக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கமுடியும். ஒருசிலருக்கு விரும்பிய பதவி உயர்வுகள் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். மாணவ- மாணவியர்களுக்கு கடந்த காலங்களி-ருந்து வந்த உடல் சோர்வு எல்லாம் தற்போது விலகி படிப்பில் சிறப்பாக செயல்படக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, காலபைரவரை தரிசிப்பதன் மூலம் அனுகூலங்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 16, 17.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி சனி 3-ல் சஞ்சரிப்பதாலும், 4-ல் சுக்கிரன், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் எல்லாவகையிலும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய பெயர், புகழ் அதிகரிக்க கூடிய நேரமாகும். நீங்கள் எதிர்பார்த்த பண உதவிகள் தக்க நேரத்தில் கிடைத்து உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைப்பதால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழி-ல் இணைவதால் தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். தொழில் முன்னேற்றத் திற்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது நல்ல ஒரு வளர்ச்சியினை பெறுவீர்கள். ஒருசிலருக்கு பயணங்கள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட படிப்பில் கவனமுடன் செயல்பட்டால் ஒரு நல்ல நிலையை அடையமுடியும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமை யோடு இருப்பது, ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வதும், தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வதும் நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 15, 19, 20.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சூரியன், குரு, புதன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சாதகமாக இருந்து ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த அலைச்சல், டென்ஷன் எல்லாம் தற்போது குறையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் கௌரவம் பார்க்காமல் விட்டுக்கொடுத்து செல்வதன்மூலமாக வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஒருசிலருக்கு உடன்பிறந்தவர்களிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படலாம் என்பதால் சூழலுக்கு ஏற்றவாறு பொறுமையோடு செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒரு சில நெருக்கடிகள் இருந்தாலும் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. ஒருசில விஷயங்களில் வேலையாட்களை நம்பாமல் நீங்கள் நேரடியாக செயல்பட்டால் அதிகப்படியான அனுகூலங்களை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியரிடம் வீண்பேச்சை குறைத்துவிட்டு உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தினால் நல்லபெயர் எடுக்கலாம். மாணவ- மாணவியர்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் வீண் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது உத்தமம். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் அர்ச்சனை செய்வது, காலபைரவரை வழிபாடு செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 17, 18, 21.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசியில் சனி, 4-ல் குரு, சூரியன் சஞ்சரிப்பதால் தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக்கொள்வது நல்லது. எது எப்படியிருந்தாலும் உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 4-ல் புதன், 6-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடையவேண்டியதை அடையக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒருநல்ல நிலையினை அடைய முடியும். ஒருசிலருக்கு சட்ட சிக்கல்கள் ஏற்படக்கூடிய ஒரு நேரமென்பதால் தொழில் தொடர்பான கணக்குகளை சரியாக பராமரிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு கூடுதல் வேலைப்பளு ஏற்படுவது மட்டு மில்லாமல் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர் கள் உங்கள்மீது வீண்பழிச் சொற்களை சொல்வார்கள். எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல் பட்டாலும் சக நண்பர்கள் உங்களை வேற்றுபாதைக்கு அழைத்துச் செல்லலாமென்பதால் எதிலும் எச்சரிக்கை யோடு இருப்பது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற சனிபகவானுக்கு எள் தீபமேற்றுவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 15, 16, 19, 20.
ப்