முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: அனுஷம்- 4.
சந்திரன்: அனுஷம்- 3.
செவ்வாய்: பூசம்- 3.
புதன்: கேட்டை- 3 (வ).
குரு: ரோகிணி- 4 (வ).
சுக்கிரன்: உத்திராடம்- 1.
சனி: சதயம்- 4.
ராகு: உத்திரட்டாதி- 2.
கேது: உத்திரம்- 4.
கிரக மாற்றம்:
2-12-2024 மகர சுக்கிரன் பகல் 11.57 மணிக்கு.
7-12-2024 செவ்வாய் (வ) ஆரம்பம் அதிகாலை 04.33 மணிக்கு.
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: விருச்சிகம்
2-12-2024 பகல் 3.45 மணிக்கு தனுசு.
4-12-2024 இரவு 11.19 மணிக்கு மகரம்.
7-12-2024 அதிகாலை 5.06 மணிக்கு கும்பம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 11-ல் சனி சஞ்சரிப்பதும், திங்கட்கிழமைமுதல் 10-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்ய இருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் உங்களுக்கு உள்ள பிரச்சினைகள் எல்லாம் குறைந்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு இருக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். ராசியாதிபதி செவ்வாய் 4-ல் இருப்பதாலும், 8-ல் சூரியன் இருப்பதாலும் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. கூட்டாளிகள்மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். புதிய யுக்திகளை பயன்படுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்கள் வேலையை இணைத்து செய்யவேண்டிய ஒருநிலை இருந்தாலும் பணியில் சிறப்பாக செயல்பட்டு நல்லபெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஒருசில நேரங் களில் உணர்ச்சிவசப் படாமல் நிதானத்தோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் கல்வி யில் சிறப்பாக செயல்பட்டு பெரியோர்களுடைய பாராட்டுதலை பெறக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெறுவதற்கு துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 5, 6, 7.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல் ராகு சஞ்சரிப்பதாலும், வரும் திங்கட்கிழமைமுதல் பாக்கிய ஸ்தானத்தில் ராசியாதிபதி சுக்கிரன் சஞ்சாரம் செய்ய இருப்ப தாலும் நீங்கள் நினைத்ததெல் லாம் நடக்கும். நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு லாபகரமான பலன்களைப் பெறுவீர்கள். உங்களுக்கு உள்ள சட்ட சிக்கல்கள் எல்லாம் விலகுவதால் எந்த ஒரு விஷயத்திலும் நிம்மதியுடன் செயல்படமுடியும். வேலையாட்கள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சுலபமாக செய்து முடிக்கக் கூடிய பலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். ஒருசிலருக்கு பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் அதன்மூலம் அனுகூலங்களும் உண்டாகும். குருபகவான் வக்ரகதியில் இருப்பதால் சுபகாரிய முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் நல்ல ஆதரவு கிடைக்கக்கூடிய யோகம் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கு பெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 1, 7.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் பாக்கிய ஸ்தானமான 9-ல் சனி சஞ்சரிப்பதாலும் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு உங்களுடன் நட்புடன் பழகுவார்கள். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேசுகின்றபொழுது யோசித்துப் பேசுவது நல்லது. நீங்கள் நல்லதாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக புரிந்துகொள்ளலாம் என்பதால் பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். குரு வக்ரகதியில் இருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கக்கூடிய அமைப்பும், மங்கள நிகழ்வுகள் கைகூடக்கூடிய அதிர்ஷ்டங்களும் உண்டு. தொழில், வியாபாரத்தில் முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. ஒரு சிலருக்கு தேவையில்லாத பயணங்களும் அதன்மூலம் சுபச்செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களால் முடிக்க முடியாத பணிகளைக்கூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக முடித்து நல்லபெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் நீங்கள் நன்கு செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்களை வேற்றுபாதைக்கு அழைத்துச் செல்லக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 1, 2, 3, 4.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
ஜென்ம ராசியில் செவ்வாய், 5-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. உங்களது முன்கோபத்தை குறைத்துக்கொள்ளவேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. உங்கள் ராசிக்கு 3-ல் கேது, திங்கட்கிழமைமுதல் 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத பணஉதவிகள் கிடைத்து உங்களுக்கு உள்ள நெருக்கடிகள் குறையும். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒரு நல்ல முன்னேற்றத்தை அடையக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு இருக்கிறது. உடன்பிறந்தவரிடம் பேசுகின்றபொழுது சற்று பொறுமைக் கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் எந்தவித கடினமான பணியையும் உங்களின் தனித் திறமையால் சிறப்பாக கையாண்டு அதிகாரியிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய பலம் உங்களுக்கு இருக்கும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் வளமான பலன்களைப் பெறுவதற்கு காலபைரவரை வழிபாடு செய்வது, வெங்கடேசப் பெருமாளைத் தரிசிப்பது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 3, 4, 5, 6.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகி மனக் கவலையை ஏற்படுத்தும். ஒருசில நேரங்களில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தற்போது குருபகவான் வக்ரகதியில் இருப்பதால் பொருளாதார நிலையானது சாதகமாக அமைந்து எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் வேலையாட் கள் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது. சில விஷயங்களில் நீங்கள் நேரடியாக இருந்து செயல்பட்டால்தான் இருக்கக்கூடிய நெருக்கடிகளை சமாளித்து அனுகூலங்களை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் வேலை செய்பவர்கள் உங்கள் மீது வீண் பழிச்சொற் களை சொல்வார்கள். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். மாணவ- மாணவியர்களுக்கு படிப்பில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஞாபக மறதி காரணமாக நல்ல மதிப்பெண்களை எடுக்க தேவையில்லாத இடையூறுகள் ஏற்படும். வரும் நாட்களில் வளமான பலன்களை அடைய முருக வழிபாடு மேற்கொள்வது, சரபேஸ்வரருக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 5, 6, 7.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன் சூரியன் சேர்க்கைப்பெற்று 3-ல் சஞ்சரிப்பதும், 6-ல் சனி, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் மிகவும் சிறப்பான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து அனைத்து விதமான தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லா மல் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டமானது உங்களுக்கு உண்டு. உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். பூர்வீக சொத்துவகையில் இருந்துவந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது மறைந்து உங்களுக்கு சாதகமான ஒரு நிகழ்வு நடக்கும். தொழில், வியாபாரத்தில் அதிகப்படியான லாபத்தை ஈட்டுவது மட்டுமில்லாமல் தொழில் முன்னேற்றத்திற்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். அதிகாரியிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் முழுமையாக விலகி சுமூகநிலை உண்டாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறந்து விளங்குவது மட்டுமில்லாமல் திறனை வெளிப்படுத்தக்கூடிய போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது நன்று.
வெற்றி தரும் நாட்கள்: 1, 2, 7.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், திங்கட்கிழமைமுதல் ராசியாதிபதி சுக்கிரன் 4-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் பணவரவுகள் தாராளமாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். மனைவி, பிள்ளைகள் விரும்பிய நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத் தையும் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்பு களும் வரும் நாட்களில் இருக்கிறது. திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழி-ல் இணைவதால் நீங்கள் நிம்மதியுடன் செயல்படமுடியும். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களால் முடிக்கமுடியாத பணியைகூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நீண்டநாட்களாக வேலை வாய்ப்பு எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு வரும் நாட்களில் நல்லவாய்ப்புகள் கிடைக்கும். ஒருசிலருக்கு வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய ஒரு அதிர்ஷ்டமானது இருக்கிறது. பிள்ளைகள் வழியில் இருந்துவந்த மனகவலைகள் எல்லாம் மறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் எந்தவித இடையூறுகளையும் தாண்டி நல்ல மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெறுவதற்கு பைரவர் வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 3, 4.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ஜென்ம ராசியில் சூரியன், 4-ல் சனி, 9-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். குடும்பத் தில் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு செயல்பட்டால் தான் தேவையற்ற செலவுகளை சமாளிக்க முடியும். ஒருசிலருக்கு தேவையில்லாத வெளியூர் பயணங்கள்மூலமாக மன நிம்மதிக்குறைவு உண்டாகலாம். தொழில், வியாபாரத்தில் நீங்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட்டாலும் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்லவாய்ப்புகள்கூட கடைசி நேரத்தில் தடைப்படும். முடிந்தவரை அரசு அதிகாரி யிடம் பேசுகின்ற பொழுது பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலைப்பளு காரணமாக ஓய்வுநேரம் குறையும். உடன் வேலை செய்யக்கூடிய நபர்களுடைய ஒத்துழைப்பு சற்று சாதகமாக இருப்பதால் எந்தவித நெருக்கடியையும் சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங் களில் நேரத்தை செலவிடுவதைவிட பயனுள்ள விஷயத்திற்கு நேரத்தை செலவிடுவது தற்போதைக்கு நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 1, 2, 5, 6.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 3-ல் சனி, திங்கட்கிழமைமுதல் 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பது அனுகூலமான பலன்களை தரக்கூடிய அமைப்பாகும். ராசியாதிபதி குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து குடும்பத் தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக் கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு இருக்கிறது. இந்த வாரத்தில் உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, நெருங்கியவரிடம் பேசுகின்றபோது பொறுமையைக் கடைபிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு நல்ல ஒரு நிலையினை அடைவீர்கள். உங்கள் பொருட்களுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைவிட நல்லவிலை கிடைத்து போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தற்போது ஒருசில நெருக்கடிகள் இருந்தாலும் எந்த ஒரு வேலையையும் நீங்கள் சிறப்பாக கையாண்டு மற்றவர்களுடைய பாராட்டுதலை பெறுவீர்கள். அதிகாரியிடம் வீண்வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் எதிலும் உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் செயல்படக்கூடிய பலம் உண்டாகும். இந்த வாரத்தில் வளமான பலன்களைப் பெறுவதற்கு மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, முருகன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 3, 4, 7.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு செயலுக்கும் நல்ல ஆதரவு கிடைத்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் உங்கள் தேவைக்கு ஏற்ப இருந்து பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது, உற்றார்- உறவினரிடம் பேசுகின்ற போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஒருசில நேரங்களில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் போட்ட முதலை எடுக்கக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது பணியில் சிறப்பாக செயல்பட்டு இருக்கும் இடத்தில் ஒரு கௌரவமான நிலையினை அடையமுடியும். பெண்கள்வழியில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். ஒருசிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது உத்தமம். மாணவ- மாணவியர்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது, படிக்கும் ஏழை மாணவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 1, 2, 5, 6.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 10-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் உங்களின் நீண்டநாளைய பிரச்சினைகளுக்கு எல்லாம் ஒரு தீர்வு கிடைத்து ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். உங்களுக்கு இருந்த மறைமுக சிக்கல்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். பெரிய மனிதர் களுடைய நட்பு கிடைப்பதால் பொருளாதார ரீதியாக மேன்மையை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் சட்டரீதியாக இருந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகுவதால் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றியடையும். ராகு உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது தற்போதைக்கு நல்லது. உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது உங்கள்மீது இருந்த பழிச் சொற்கள் எல்லாம் விலகி பணியில் நிம்மதியுடன் செயல்படக்கூடிய நேரமாகும். உடனிருப்பவர்கள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான பணியைக்கூட சுலபமாக செய்து முடிப்பீர்கள். மாணவ- மாணவியர்கள் உடல்சோர்வு இருந்தாலும் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 1, 2, 3, 4, 7.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ராசியாதிபதி குருபகவான் தற்போது வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதாலும் பல்வேறு வளமான பலன்களை நீங்கள் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வரும் திங்கட்கிழமைமுதல் லாப ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிக்க இருப்பதால் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குழந்தை பாக்கியமில்லை என்று ஏங்கியவர்களுக்கு வரும் நாட்களில் மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி ஒன்று கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடந்த காலங்களில் நீங்கள்பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது அனுகூலங்களை அடையக்கூடிய நேரமாகும். ஒருசில நேரங்களில் உங்களது முன்கோபத்தை குறைத்துக் கொண்டு பொறுமையோடு செயல்படுவது நல்லது. பெண்கள்வழியில் எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடையக்கூடிய நேரமாகும். உங்களுக்கும் அதிகாரிக்கும் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது மறைந்து மனநிம்மதி உண்டாகும். மாணவ- மாணவியர்கள் வீண் பேச்சை குறைத்துவிட்டு கல்வியில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெறுவதற்கு பாம்பு புற்றுக்குப்பால் விடுவது, ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 3, 4, 5, 6.