கோட்சாரரீதியாக கிரகங்கள் ராசி சக்கரத்தைச் சுற்றிவரும்போது ஒவ்வொரு கிரகமும் சில இடங்களில் தோஷமடைந்து கெடுதலுக்கு வழிவகுக்கின்றன. இப்படியாக தோஷமடையும் காலத்தை அறிந்து, அதற்கான பரிகாரங்களைச் செய்தால் கெடுதலின் வேகம் குறைவதோடு, நல்லவை நாடிவரும்.

சூரியன்

சந்திரன் இருக்கும் ராசியிலிருந்து 2, 4, 5, 8, 12 ஆகிய இடங்களில் சூரியன் வரும் பொழுது கெடுதலான பலன்களைக் கொடுக்கிறது.

பரிகாரம்: ஆலயங்கள் இப்போது அநேகமாக அடைபடுவதால், எளிய பரிகாரம் செய்வதே போதுமானது. ஞாயிற்றுக்கிழமை ஒருபொழுது விரதம் கடைப்பிடிப்பது நன்று. நெறிதவறிய செயல்களில் ஈடுபடக்கூடாது. நான்கு செம்பு உலோக வளையங்களை திருஷ்டி சுற்றி நீர்நிலையில் போடுதல் நன்று. மாணிக்கம் பதித்த மோதிரம் அணியலாம். கிழக்கு நோக்கிய வாசலுள்ள வீடுகள் சுபிட்சமடையும். வியாபாரிகள் பதுக்கல் செய்யக்கூடாது. அரசுப் பணியாளர்களில் கடைநிலை ஊழியர்களுக்கு உதவிபுரிதல் நன்று. பார்வையற்றோருக்கு தானதர்மம் நற்பலன் தரும்.

Advertisment

vv

சந்திரன்

2, 4, 5, 8, 9, 12 ஆகிய இடங்களில் சந்திரன் இருந்தால் கெடுதல்களே பரிசாகக் கிடைக்கப்பெறும்.

பரிகாரம்: திங்கட்கிழமை ஒருபொழுது விரதம் கடைப் பிடிக்கலாம். சிவபெருமானை வணங்கவேண்டும். வெள்ளி உலோகம், அரிசி (பச்சரிசி), பால் தானம் ஆலயத்திற்குத் தருதல் நன்று. ஓடும் ஆற்று நீரில், அருவியில் குளிப்பது மிக நன்று. வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை மூன்று மாதத்திற்கு ஒருமுறை தூய்மை செய்தல்வேண்டும். வட்டமான கிணற்றை மூடி வைப்பது கூடாது. பெற்றதாய், பாட்டி மற்றும் வயதில் மூத்தவர்களை வணங்குதல் நன்று. திங்கட்கிழமை ராகுகாலத்தில் (7.30-9.00) சுத்தமான பச்சைத் தண்ணீர் பருகுதல் கூடாது.

செவ்வாய்

ராசியிலிருந்து 1, 2, 5, 8, 10, 12 ஆகிய இடங் களில் செவ்வாய் வரும் காலத்தில் கெடுத லான பலன்களை அனுபவிக்க நேரிடும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை உபவாச மிருப்பது நன்று. சிவப்புநிற முகமுடைய ஆஞ்சனேயரை வணங்கவேண்டும். ஒரு மண்குடுவையில் தேனை நிரப்பி, மேலே குங்குமம் தூவி, திருஷ்டி சுற்றி நீர்நிலையில் போடுவது நன்று.சகோதரர்களிடம் பகைப்பது கூடாது; உதவிபுரிதல் நன்று. செவ்வாயன்று சிவப்புநிற ஆடையணிதல் மிக நன்று. இடக்கையில் சுத்தமான வெள்ளி வளையல் அணியலாம். ஆப்பிள் போன்ற சிவப்புநிறப் பொருள் தானம் நன்று.

புதன்

ராசியிலிருந்து 3, 5, 6, 7, 12 ஆகிய இடங்களில் வரும்போது கெடுபலன் வரும்.

பரிகாரம்: புதன்கிழமை ஒருபொழுது உபவாசம் நல்லது. பச்சைநிறப் பயறை ஊறவைத்து பசுமாட்டிற்குத் தருதல் நல்ல பரிகாரம். ஆடுகளுக்குப் பச்சிலை கொடுக்கலாம். வெள்ளியிலான கழுத்துச் சங்கி- அணிவது நன்று.கங்கைநீரை வீட்டின் வெளிப்புற பூமியில், மேற்குப் பகுதியில் புதைப்பது நல்லது. கூட்டு வியாபாரம் கூடாது. கடன் தொல்லை மிகுதியானால் மண் குடுவையில் தேனை ஊற்றி ஓடும் நீரில் மிதக்கவிடுதல் நன்று.

குரு

ராசியிலிருந்து 3, 4, 10 ஆகிய இடங்களில் குரு வரும் காலத்தில் கெடுபலன்கள் அதிகமாகும். கல்வித் தடைகளும் வரும்.

பரிகாரம்: வயதுக்கு வராத பத்து வயது நிரம்பாத பெண் குழந்தைக்கு ஆடைதானம் மிகநன்று. பொய் சொல்வது கூடாது. நம்பிக்கை துரோகம் கெடுபலனைத் தரும். வீட்டின் அருகில் அரசமரம் நின்றால் தண்ணீர் பாய்ச்சுதல் வேண்டும். மாட்டுத் தொமுவத்தில், மாட்டை மேற்குநோக்கி கட்டிவைப்பது கூடாது. போதைப் பொருள், புலால் மறுத்தல் வேண்டும். 800 கிராம் பாதாம் பருப்பு சனிபகவான் சந்நிதிக்குத் தருதல் நன்று.

சுக்கிரன்

ராசியிலிருந்து 6-ஆமிடத்தில் சுக்கிரன் வரும் காலத்தில் கெடுதல்களும், பிரச்சினைகளும் உருவாகும்.

பரிகாரம்: வெள்ளி உருண்டையை பர்சில் நிரந்தரமாக வைத்துக்கொள்வது நன்று. மனைவி நெடுநாளாக நோய்வாய்பட்டிலிருந்தால், வெள்ளைநிற சந்தனத்தை நெற்றியில் திலகமாக, வெள்ளிக்கிழமை தவறாமல் அணியவேண்டும். தென்கிழக்கில் சமையல்கூடம் அமையாத வீட்டில், பெண்கள் காலில் சாக்ஸ் அணிந்து, பூமியில் நேரடியாக பாதம் படாதவாறு நடப்பது மிக நல்லது. சனிக்கிழமை வெள்ளைப் பசுவுக்கு புல் கொடுப்பது கூடாது. துக்க வீட்டிற்கு வைரநகை அணிந்து சென்றுவந்தால், அதனை சுத்த நீரில் தூய்மை செய்து அணிதல்வேண்டும். வெள்ளிக்கிழமை பிறரிடம் கல் பதித்த நகைவாங்கி அணிதல் தவிர்த்தல் நன்று.

சனி

ராசியிலிருந்து 1, 2, 4, 5, 12 ஆகிய இடங்களில் சனி வரும் காலம் கெடுதல்கள் தொடராக வந்துவிடும்.

பரிகாரம்: ஆலமர வேரில் தண்ணீர் பாய்ச்சி மண்ணைக் கிளறித் திலக மிடல் நன்று. நீண்ட நாள் எலும்பு சார்ந்த நோய் இருந்தால், மண்ணெண்ணெய் இரும்பு ஸ்டவ் தானம் தருதல் நன்று. சனிபகவான் ஆலயத்திற்கு சனிக்கிழமையில் காலணி அணியாமல் சென்று வணங்கிவருதல் நல்ல செயல். நெற்றியில் எண்ணெய் பூசுதல் கூடாது. எருமை மாட்டிற்குப் புல் அல்லது உணவு தருதல் நன்று. கிணற்றில் பச்சரிசி அல்லது பாலை இடுதல் நல்ல பரிகாரம். கருப்பு அல்லது நீலநிற ஆடை தானம் சிறப்பானது.

கேது

ராசியிலிருந்து 1, 2, 4, 5, 8, 12 ஆகிய இடங்களில் கேது வரும்போது கெடுதல்கள் வரும்.

பரிகாரம்: நன்னடத்தை மிக முக்கியமா னது. குங்குமப்பூ அல்லது மஞ்சளைத் தண்ணீரில் நனைத்து திலகமிடல் நன்று. பெண்கள் தங்க வளையம் காதில் அணிவது சிறப்பு சேர்க்கும். நான்கு எலுமிச்சைப் பழங்கள், நான்கு சென்னிறப் பூக்களை திருஷ்டி சுற்றி நீரிநிலையில் போடலாம். குழந்தைகள்மேல் அதிக கவனம் செலுத்தவேண்டும். மனைவி யின் ஆரோக்கியத்தில் பின்னடைவு வரும்.மலச்சிக்கல், பைல்ஸ் போன்றவை வேதனைதரும். கேட்ஸ்-ஐ வைடூரிய மோதிரம் (மூன்று கேரட்) அணியலாம்.

குறிப்பு: ராகு மிக வலிமையான கிரகமென் பதால், அவரவர் ஜாதக நிலைக்கு ஏற்றவாறு பலன் தரும். எனவே சுய ஜாதகப் பரிகாரம் செய்வதே நன்று.

செல்: 93801 73464