8-சனி
8, 17, 26, 35, 44, 53, 44, 53, 62, 71, 80, 89, 98, 107 ஆகிய எண்களில் பெயர் அமைந்தவர் களும்; 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் களும் சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள்.
எட்டு என்ற எண் சனியின் ஆதிக்கத் தைக் குறிக்கும். அளவுக்கு மிஞ்சிய மனோசக்தி யும், தெளிந்த அறிவும் உடையவர்கள். எப்பொழுதும் எதையாவது யோசித்துக் கொண்டே, எதையோ பறிகொடுத்தவர்போல் இருப்பார்கள். மனதில் உற்சாகம் இருக்காது. சுகங்களை அனுபவிக்கமாட்டார்கள். தன்னம் பிக்கை குறைவு. கஷ்டங்களைத் தாங்களே விலைகொடுத்து வாங்குபவர்கள். பிறரை எளிதில் நம்பமாட்டார்கள். தனிமையை விரும்புவர்கள். எதிலும் நிதானத்தைக் கடைப் பிடிப்பவர்கள். கஞ்சத்தனம் உண்டு. உலகி லேயே தன்னை மட்டும் தனிமனிதராகக் கருதுபவர்கள். மிகச்சில நண்பர் களைப் பெற்றிருப்பார்கள். நண்பர்களால் ஆதாயம் இல்லை. வாழ்வதற்கு அஞ்சி வாழ்க்கையை முடித்துக்கொள்ள எண்ணுபவர்கள். சிறுவயதிலேயே வியாதி உண்டு. இவர்கள் வாழ்க் கையில் ஏதாவது இடையூறுகள் மாறிமாறி வந்து கொண்டே இருக் கும். யாரோ செய்த குற்றத்திற்கு இவர்கள் தண்டனையை அனு பவிப்பார்கள். மிக நல்ல வராகவும், மேதாவியாகவும் இருந்தாலும், இவர்களுக்கு அருகில் இருப்போர் இவர்களைப் புரிந்துகொள் வதில்லை. பிறர் உதவியை எதிர்பார்க்க மாட்டார்கள்.
மற்ற எண்களைப் போன்றே 8-ஆம் எண்ணும் மனிதனைத் தூண்டிவிட்டு, அவனை லௌகீக வாழ்க்கையின் சுகங்களில் ஈடுபடுத்திவிடுகிறது. மனிதனும் தனக்கு அதிர்ஷ்டம் வந்துவிட்டதென்று மகிழ்கிறான்.
ஆனால் சனிபகவான் முன்ஜென்ம வினைகளை ஆராய்ந்து, அவனது செயல்களுக்கேற்ப முதலில் தீய பலன்களையும், பின்பு நல்ல பலன்களையும் தவறாமல் கொடுத்து விடுகிறார்.
8-ஆம் எண்ணில் பிறக்கும்போதே, மனிதன் விதியின் வசப்படுகிறான். 8-ஆம் எண் பிறவி எண்ணாக வரும்போது வாழ்க்கையில் கடும் போராட்டத்தையும், உடலில் அல்லது மனதில் ஏதாவது சிறிய நோயையும் கொடுத்து விடுகிறது.
அவரது முயற்சிகளை யும், ஊக்கத்தையும் தடுமாற வைத்து விடுகிறது. அவரது சொந்தங்கள், உறவு கள், நண்பர் களிடம் கெட்ட பெயர் அல்லது அவமானம் அடையச் செய்கி றது. புதிய சூழ் நிலை, புதிய மனிதர் கள், புதிய ஊர் என்று ஒரு புதிய அற்புத வழியைத் திறந்துவிடு கிறது. தங்களது கடுமையான உழைப்பால்- முயற்சியால் வாழ்க்கையின் உச்சியை 45 வயதுக்குமேல் எப்படியும் அடைந்துவிடுகிறார்கள். இவர்கள் எவ்வளவு வசதிமிகுந்த நிலையில் பிறந்தாலும் வாழ்ந்தாலும், மனதில் ஏதாவதொரு சோகத்தையும், வியாதி யையும் வைத்துக்கொண்டு, மனநிம்மதிக்கு அலைவார்கள்.
வாழ்க்கையை வெறுத்து முதியோர் இல்லம், ஆன்மிக மடங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவற்றில் இருப்பவர்களும், அதனை ஆரம்பிப்பவரர்களும் 8-ஆம் எண்காரர்களேயாவர்.
இவர்கள் 1, 4 ஆகிய தேதிகளில் பிறந்தவர் களை மணந்துகொள்ளலாம். 2, 7, 8-ஆம் எண்காரர்களைத் திருமணம் செய்யக் கூடாது. 9-ஆம் எண்காரர்கள் இவர்களை அடக்கியாள நினைப்பார்கள். அடங்கா விட்டால் விவாகரத்து நடக்கும். திருமணம் செய்யும் நாளின் கூட்டு எண் 1, 6 வந்தால் மிகவும் நல்லது. 1, 4, 5, 6 ஆகிய எண்காரர்களை நண்பர்களாகவும் தொழில் கூட்டாளிகளாகவும் சேர்த்தால் நன்மையடையலாம்.
ஜனன ஜாதகத்தில் சனி அசுபத்தன்மை யுடன் இயங்கினால் எலும்பு, மூட்டு, நரம்பு, வாதம், வயிற்றுவலி, ஆஸ்துமா, மூச்சுவிடுதல் பிரச்சினை அடிக்கடி உண்டாகும்.
சனி வலிமை பெற்றவர்கள் ஆன்மிக மடாதிபதிகள், கோவில் தர்மகர்த்தா, பஞ்சாயத்துத் தலைவர் புவியியல் ஆராய்ச்சி, நீதிபதிகள், வக்கீல்கள், பெரிய நிலக்கிழார்கள், பெரும் விவசாயிகள் போன்றவர்களாகவும் புகழ்பெறுவார்கள். சுரங்கப் பொருட்கள் எடுத்தல், வியாபாரம் செய்தல், கிரானைட், கடப்பா கற்கள் வியாபாரம் போன்றவை வெற்றி தரும். லாரி, பஸ் உரிமையாளர்கள் அல்லது ஒட்டுநர்கள், லேத், இரும்பு சம்பந்த மான அனைத்து தொழில்களும், சோப், எண்ணெய் தயாரிக்கும் ஆலைகள், சாதாரண எடுபிடி தொழிலாளிகளாகவும், கம்பளித் துணிகள், ஆயுதங்கள் உற்பத்தி, வியாபாரம், மீன், இறைச்சி, மதுக்கடை வியாபாரம், இரும்புப் பட்டறை, வாகனங்கள் பழுது பார்த்தல், தோல் சம்பந்தப்பட்ட தொழில்கள் செய்யலாம்.
பெயரெண்- 8: முழுமையான சனியின் ஆதிக்கம் பெற்ற எண். இவர்களுக்கு மிகுந்த தெய்வ நம்பிக்கையும், மதப்பற்றும் உண்டு. அமைதியான வாழ்க்கையை விரும்புவார்கள். பொருளாதாரத்தில் சிறந்த அறிஞர்களாக இருப்பார்கள். கற்பனைவளம் மிக்கவர்கள். நல்ல சிந்தனையாளர்கள். அடுத்தவர்களைத் தங்களது கருத்துகளுக்கு உட்படுத்தும் திறமை கொண்டவர்கள். சமூகசேவையில் மிகவும் நாட்டம் இருக்கும். கடுமையான உழைப்பாளிகள். உலக இன்பங்களை அனுபவிப்பதில் விருப்பமிருக்காது.
பெயரெண்- 17: சூரியன் மற்றும் கேதுவின் ஆதிக்கம் நிறைந்த எண். ஆன்மிக வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும், அரசியலிலும் நிலையான இடத்தைப் பிடித்துவிடுவார்கள். ஆன்மிக இயக்கங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை நடத்துவார்கள் அல்லது இணைந்து செயல்படுவார்கள். மிகுந்த சோதனைகளிலும் சலிக்காமல் உழைக்கும் இயல்பினர்.
வயோதிகத்தின் இறுதியில் பெருமைமிகு வாழ்க்கையை அடைவார்கள். வறுமையான குடும்பத்தில் பிறந்தாலும், தங்கள் உழைப்பி னால் பெரும் செல்வத்தை சம்பாதிக்கும் யோகமும் உண்டு. துணிந்து எடுக்கும் சில முடிவுகள் தோல்வியும் அடையும். இருந்தாலும் அதை வெளியே தெரியாமல் வெற்றியாக மாற்றும் சாதுர்யம் உண்டு.
பெயரெண்- 26: சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆதிக்கம் இணைந்த எண். இளம்வயதில் சாதகமான வாழ்க்கையும், வயோதிகத்தில் வறுமையும் நோயும் உண்டு. காதல் விவகாரங்கள் சிக்கல்களை ஏற்படுத்தும். நண்பர்களால் பெரும் கஷ்டம். தொட்டதெல்லாம் தோல்வியில் முடியும். பணம் சேர்ப்பதில் கில்லாடிகள். பணம், பதவிக்காக எதைவேண்டுமானாலும் செய்பவர்கள். முன்னோர் சேர்த்துவைத்த சொத்துகள் விரயமாகும். விதியின் சதியால் அடிக்கடி தோல்விகளைச் சந்திப்பார்கள்.
பெயரெண்- 35: குரு, புதனின் ஆதிக்கம் சேர்ந்த எண். ஏற்றமும் இறக்கமும் மாறிமாறி ஏற்படும். கற்பனை சக்தியும், கூர்மையான அறிவும் உண்டு. நுண்ணிய அறிவு படைத்த சாமர்த்தியசாலிகளாக இருந்தபோதிலும் நிலையான வாழ்க்கையை திட்டமிட்டு வாழ முடியாது. குற்றங்களை மன்னிக்கும் கருணை மனமுண்டு. அடுத்தவர்களால் அடிக்கடி ஏமாற்றம் அடைவார்கள். இருப்பினும் மனோ தைரியம் மிக்கவர்கள். எப்போதும் உயர் வான சிந்தனைகள் நிறைந்தவர்கள். பிறரால் அடிக்கடி வீண்பழி சுமத்தப்படுவார்கள். பொருளாதார விஷயத்தில் குறைபாடு உடைய வர்கள். பண விரயங்களும் அதிகமுண்டு. இருப்பினும் இறுதிக் காலத்தில் பொன்னும், பொருளும், கீர்த்தியும் கிடைத்துவிடும்.
பெயரெண்- 44: ராகுவின் ஆதிக்கத்தால் உருவாகும் சனியின் எண். ஒரு ராகுவை சமாளிப்பதற்கே பெரிய சாமர்த்தியம் வேண்டும். இதில் 4+4 என இரட்டை ராகுவை சமாளிக்க வாழ்நாள் முடிந்துவிடும். சுலபமாக பணம் சம்பாதிக்க குறுக்குவழியை நாடுபவர்கள். தொழில் முயற்சிமூலம் நல்ல வருமானம் உண்டு. அரசாங்க விரோதமும், சிறைவாசமும் நிச்சயம் ஏற்படும். சிறைப் படாவிட்டால் தீராத- தீர்க்கமுடியாத நோயால் அவதி உண்டாகும்.
பெயரெண்- 53: புதன் மற்றும் குரு வின் ஆதிக்கம் இணைந்த எண். பொதுச் சேவைக்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருப்பார்கள். தங்களது வாழ்க்கை யிலும் எப்போதும் உழைத்துக்கொண்டே தான் இருப்பார்கள். தங்களின் வசதிகளையும், பதவிகளையும், உறவினர்களையும் திடீரென ஒருநாள் ஒதுக்கிவிட்டு, மக்கள் சேவைக்கென ஓடிச்செல்பவர்கள் இவர்கள்தான். நிதானமாக வாழ்க்கையில் முன்னேற்றம் அமையும்.
அவசரமும் ஆத்திரமும் இவர்களின் விரோதி யாகும்.
பெயரெண்- 62: சுக்கிரன், சந்திரன் ஆதிக்கம் ஒருங்கிணைந்த எண். புகழும் வெற்றியும் சுகவாழ்க்கையும் தரும். வாழ்க்கையின் இடையே பேராபத்தும் தோல்வியும் ஏற்படும். உறவினர்களிடையே மனக்கசப்பு ஏற்படும். குடும்ப வாழ்க்கை சுகப்படாது. ஏதாவதொரு துறையில் ஆராய்ச்சிசெய்து புகழ்பெறுவார்கள். புகழ் சேருமளவிற்குப் பொருள் சேராது. தங்கள் வாழ்வின் பிற்பகுதியில்தான் பெரும்பாலோர் இன்பத்தை அனுபவிக்கின்ற னர். இவர்களுக்குத் தன்னம்பிக்கை குறைவு.
எனவே எளிதில் அடுத்தவர்களை நம்ப மாட்டார்கள்.
பெயரெண்- 71: கேது மற்றும் சூரியனின் ஆதிக்கம் சேர்ந்த எண். வாழ்வின் பிற்பாதியில் வெற்றியும், செல்வமும் சேரும். பிறருக்கு புத்தி சொல்லும் அறிவாளிகள். இதனால் வெளியூர், அடுத்த இன மக்கள், வெளிநாடு என அந்நியர்களிடமிருந்தே இவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். இவர்கள் எடுத்துக்கொள்ளும் எந்த செயலானாலும் அவற்றில் எதிர்ப்பும், முட்டுக்கட்டையும் உண்டு. ஆனால் எதிர்ப்பையும் தடைகளையும் பொருட்படுத்தாமல் காரியங்களில் ஈடுபடுவார்கள். வெற்றிபெறுவார்கள். மனதில் இரக்க குணம் இருக்கும். இவர்களில் பெரும்பாலோர் பெரிய சாதனைகளை, கடின உழைப்புடன் செய்துமுடிப்பார்கள்.
பெயரெண்- 80: தனித்த சனியின் ஆதிக்க எண். தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபடுவர். வாழ்க்கையே ஆபத்துகளால் சூழப்பட்டு, பயம் நிறைந்த வாழ்க்கை வாழ்வார்கள். தெய்வ நம்பிக்கை தீவிரமாக இருக்கும் அல்லது இறைநம்பிக்கையே இருக்காது. தாங்கள் நல்லதென்று நினைத்து எடுத்துச்செய்கின்ற காரியங்களை எவ்வளவு எதிர்ப்புகளும் தடைகளும் வந்தாலும், அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் செய்துமுடிக்கும் வலிமை உண்டு. ஓரளவு பிடிவாத குணம் நிறைந்த வர்கள். மேற்பார்வைக்குக் கடின மனமும் பிடிவாதமும் உடையவராகத் தோன்றினா லும், சமூகத்தில் பாதிக்கப்பட்டோரைக் கண்டால், அவர்களை ஆதரித்து வாழ்க்கை யளிக்கத் தயங்கமாட்டார்கள்.
பெயரெண்- 89: சனி மற்றும் செவ்வாயின் ஆதிக்கம் கலந்த எண். சனி மந்த கிரகம். செவ்வாய் விவேகமற்ற வேக கிரகம். விவேகமின்றி காதல் திருமணம் செய்து வாழ்க்கையைத் தொலைப்பவர்கள். ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடக்கும். சொத்துகள் உண்டு. அடிக்கடி விபத்து அல்லது நோய்க்கு அறுவை சிகிச்சை செய்ய நேரும். தங்களது வாழ்வில் பல தோல்விகளை யும், வேதனைகளையும், சில அவமானங்களை யும் சந்தித்தே ஆகவேண்டும். மனம் விரக்தி யடையும்போது தற்கொலை எண்ணங்கள் கூட சிலருக்குத் தோன்றும்.
பெயரெண்- 98: செவ்வாய், சனியின் ஆதிக்கம் சேர்ந்த எண். அடிக்கடி விபத்து அல்லது தீராத நோய் உண்டாகும். பூர்வீக சொத்தால் வாழ்நாள் முழுவதும் வம்பு வழக்கை சந்திப்பவர்கள். உடன்பிறந்தவர்கள், பங்காளிகளிடம் சண்டையிடுபவர்கள். இயந்திரப் பணியாளர்கள். ஒரு படி ஏறினால் நூறு படி சறுக்கும் துரதிர்ஷடமான எண். வாழ்நாள் முழுவதும் தோல்வி தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படாமல், தங்களது கடமை களைத் தீவிர முனைப்புடன் செய்துகொண்டி ருப்பார்கள். இவர்கள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு மக்களுக்கு உண்மையான நன்மை செய்வார்கள்.
பெயரெண்- 107: சூரியன் மற்றும் கேதுவின் ஆதிக்கம் கலந்த எண். பிரசித்தி யும் வெற்றியும் தரும் எண். செல்வம் இருந்தா லும் பயனில்லை. செல்வாக்கால் உலகப் பிரசித்தி உண்டாகும். அயல்நாடுகளில் அரசாங்கம் தொடர்புடைய பெரும் பதவியுண்டு. இது தனிமனித வாழ்க்கைக்கும், சமுதாய வாழ்க்கைக்கும் பொருந்தும். இந்த எண்ணின் ஒரு பக்கம் கடுமையான உழைப்பு, கருணை, ஏற்றம், பெருத்த ராஜயோகம் உண்டு. மறுபக்கம் புரட்சி, எழுச்சி, அராஜகம், ஒழுங்கின்மை போன்றவையும் உண்டு. இவர்களுக்குத் தொடர்ந்து துன்பங்கள் வந்தால், பின்பு தொடர்ந்து யோகம் வரப்போகிறது என்று பொருள். பிறர் படும் துன்பம்கண்டு சகிக்காத மனம் கொண்டவர்கள். தங்களால் முடியாவிட் டாலும், உதவிகிட்டும் இடத்தையாவது காட்டுவார்கள்.
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், 8-ஆம் எண்ணை விதி எண்ணாக உடைய வர்களும், 8-ஆம் எண்ணில் தங்களது பெயரை உடையவர்களும் வாழ்வில் பல தோல்வி களை யும், வேதனைகளையும், சில அவமானங்களை யும் சந்தித்தே ஆகவேண்டும். ஜனனகால ஜாதகத்தில் சனி வலிமை நல்ல நிலையிலிருந்தால் 45 வயதிற்குமேல் பெரும் தனவான் களாகவும், பல்வேறு தொழில்களை உடைய வர்களாகவும், தியாகிகளாகவும், அருளாளர் களாகவும், சிறந்த நீதிபதியாகவும், பேராசிரியர் களாகவும், அமைச்சர்களாகவும், உயரதிகாரி களாகவும், கோடீஸ்வரர்களாகவும் இருப் பார்கள். வெளியுலகப் பார்வைக்கு இவ்வாறு இருந்தாலும் இவர்கள் தங்களது பிரச்சினை களிலிருந்து விடுபடமுடியாமல் வாழ்க்கை முழுவதும் தவிக்கின்றவர்கள். சனி வலிமை யிழந்தவர்கள் பெரும்பாலும் கொலை, களவு, கொள்ளை, கடத்தல், பொய்க் கையெழுத்து, விபச்சாரம், குடி, சூது, நம்பிக்கை துரோகம் போன்ற பல்வகை சூழ்நிலைகளில் சிக்கிக்கொண்டு தவிக்கிறார்கள்.
மிகச் சுருக்கமாக, இந்த எண் விதியின் எண்ணாக இருப்பதால், முற்பிறவிகளில் செய்த கர்மவினைகளுக்கேற்ப அனுசரித்து நல்ல பலன்களையோ தீயபலன்களையோ கொடுக்கிறது என்பதால், 8-ஆம் எண்ணில் பெயர் வைப்பதைத் தவிர்ப்பது உத்தமம்.
சனியின் தாக்கத்தால் அசுபப் பலன்களை மிகுதியாக அனுபவிப்பவர்கள் சிவ வழிபாடு செய்வதால் நிம்மதி பிறக்கும். சனிக்கிழமை ஆஞ்சனேயருக்கு துளசி அல்லது வெற்றிலை மாலை அணிவித்து வழிபட மேன்மை பெறலாம். மேலும் வயது முதிர்ந்தவர்களுக்கு, உடல் ஊனமுற்றோருக்கு உணவு, உடை தானம் தரலாம். அத்துடன் மஞ்சள், பச்சை, நீலநிற ஆடைகள் அணிய அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: 5, 14, 23.
அதிர்ஷ்டக் கிழமை: புதன், வெள்ளி.
அதிர்ஷ்ட ரத்தினம்: நீலம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை.
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன், ஆஞ்சனேயர்.
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட மலர்: கருங்குவளை.
அதிர்ஷ்ட உலோகம்: இரும்பு.
அதிர்ஷ்ட சமித்து: வன்னி.
(தொடரும்)
செல்: 98652 20406