இன்றைய இரவின் கனவில்தான் நாளைய மனிதன் உருவாகிறான். இரவில்தான் தாவரங்கள் வேகமாக வளர்கின்றன. வாழ்க்கையின் இருட்டான தோல்வி அனுபவங்களே மறுமலர்ச்சியான வெற்றியின் வெளிச்சத்திற்கு இட்டுச் செல்கின்றன. அதனால்தான் ராசி சக்கரத்தில் பன்னிரண்டாம் வீட்டைக்கொண்டு களவு, கனவு, முதலீடு, தோல்வியின் நீட்சியும், மீட்சியும் கண்டறியப்படுகின்றன என்ற உண்மையை கிருஷ்ணன் நம்பூதிரி புரிந்துகொண்டார்.
பிரசன்னம் பார்க்க வந்தவரின் சோர்வான முகத்தில், அறிவின் ஒளி பிரதிபலித்தது. தான் உயர்கல்வி முடித்து ஆராய்ச்சித் துறையிலிருப்பதாகத் தெரிவித்தார். மூன்றாண்டுகள் முயன்றும் ஆராய்ச்சியில் வெற்றிபெறமுடியவில்லை என்ற வருத்ததைப் பகிர்ந்துகொண்டார். பிரசன்னத்தின்மூலம் பிரச்சினை தீர வழிதேடி வந்திருந்தார். வயில்யம்குன்னு பகவதியை வணங்கி பிரசன்னத்தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.
சோழி லக்னத்திற்கு பன்னிரண்டுக் குடையவன் ரிஷபத்தில் இருந்ததால், பிரசன்னம் பார்க்க வந்திருப்பவர் சிறந்த கல்வியாளர் என்பதும், மேதைகளுடன் தொடர்பிலுள்ளவர் என்பதும் தெரிந்தது. பன்னிரண்டாம் வீட்டதிபதி, லக்ன திரிகோணத் தொடர்பிலிருந்ததால், ஆராய்ச்சி வெற்றிபெறும் என்பது உறுதியானது. ஆனாலும், மூன்றாமிடத்தில், மந்தனாகிய சனிபகவான் இருப்பதால் எந்த முயற்சியெடுத்தாலும் தடை இருக்கும். விடாமுயற்சி செய்தால் முடிவில் வெற்றிகிடைக்கும். ஆடுதுறை சென்று, சூரிய பகவானை வழிபடுவதால் தடை விலகும் என்ற பரிகாரம் கூறப்பட்டது. பிரசன்னம் பார்க்க வந்தவர் சூரியனின் அருள்பெற்றார். இருள் நீங்கியது.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
ஒரு ஜாதகத்தை ஆராயும்போது, ராசி சக்கரத்திலுள்ள லக்னத்தை மட்டும் ஆராயாமல், துவாதச லக்னங்களையும் பரிசீலிக்கவேண்டும் என்பதே ஜோதிடத்தின் அடிப்படை விதி. துவாதச லக்னங்களை ஆராய்ந்து பலன்கூறுவதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. ஜென்ம லக்னம், ஓரா லக்னம், கடிகா லக்னம், ஆரூட லக்னம், நட்சத்திர லக்னம், காரக லக்னம், ஆதரிச லக்னம், ஆயுர் லக்னம், திரேகாண லக்னம், அம்ச லக்னம், நவாம்ச லக்னம், பாவ லக்னம் ஆகியவையே துவாதச லக்னங்கள். இதுதவிர, பதா லக்னம், உப பதா லக்னம், இந்து லக்னம் போன்ற விசேஷ லக்னங்களையும் ஆராய்ந்தால் மட்டுமே துல்லியமான பலன்களைக் காணமுடியு மென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.
மணவாழ்வு நிலைக்குமா?
கேள்வி: திருமணமாகி மூன்றாண்டுகளில் என் மனைவி யைப் பிரிந்துவிட்டேன். மறுபடியும் ஒன்றுசேரும் வாய்ப்பு வருமா? அதற்குப் பரிகாரம் உண்டா?
(சுரேஷ், தருமபுரி)
(எண்: 108; ரேவதி-4; நட்சத்திராதிபதி- புதன்; ராசியாதிபதி- குரு.)
* சோழி லக்னம் புதன் நட்சத்திரத்தில் அமைந்துள் ளது. அதன் அதிபதி லக்னத் திற் குப் பாதகாதிபதியாகிறார்.
* லக்னத்திற்கு எட்டா மிடத்தில் பிரசன்ன லக்னம் அமைவதும் பிரச்சினையின் கடுமையைக் காட்டுகிறது.
* சோழி லக்னத்திற்கு ஏழாம் வீட்டில் சூரியன், சந்திரன், செவ்வாய் மூவரும் இருப்பதால் திருமணவாழ்வு நரக வேதனை தரும். இல்லற ஸ்தானமான ஏழாம் வீட்டோடு சூரியன் சம்பந்தப்பட்டு இருப்பதாலும், திருமண வாழ்க்கையில் அமைதி குறையும்..
* சனிபகவானின் மூன்றாம் பார்வை, சோழி லக்னத்தில் விழுவதும் தீய பலனையே தரும்.
* ஒன்பதில் கேது இருந்தால், ஜாதகரின் முன்கோபத்தால் இந்த பிரச் சினை உண்டானது. சுக்கிரன், கேது சேர்க்கை தாம்பத்தியம் சார்ந்த விஷயங்களில் குறைபாட்டையும் காட்டுகிறது.
பரிகாரம்
பௌர்ணமியில் சிவன் கோவிலுக் குச்சென்று வழிபட்டுவர இல்லற வாழ்வின் அணைத்து பிரச்சினைகளும் நீங்கும். திண்டுக்கல் அருகேயுள்ள, தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் கோவில் ரதி மன்மதன் பூஜை செய்தால் பிரிந்த தம்பதிகள் கூடுவார்கள்.