ப் எஸ். கிரிதரன், சேலம்.

அக்டோபரில் தலை யில் அடிபட்டு கால், கை விளங்காமல் போய்விட் டது. தலையில் பெரிய ஆபரேஷன் செய்து மறு ஜென்மம் எடுத்துள்ளேன். இது ஏழரைச்சனியின் வேலையா? இதற்கு என்ன பரிகாரம்?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஹோமம் செய்தால் ஆரோக்கியம், ஆயுள் தீர்க்கம், வெளிநாட்டு வேலை, வருமானம் போன்ற நன்மைகளைச் சந்திக்க லாம் என்று கூறியிருந்தேன். நீங்கள் அதைச் செய்ய வில்லை. நம்பிக்கையோடு இருங்கள்.

ப் ராஜலட்சுமி, அருப்புக் கோட்டை.

Advertisment

என் மகன் போதைக்கு அடிமையாகி எல்லா வற்றையும் இழந்துவிட்டான். அவனுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டு நான் ஒதுங்கிவிடலாம் என்று நினைக்கிறேன். எப்போது செய்யலாம்?

குடிகாரரை நம்பி யார் பெண்கொடுக்க முன் வருவார்கள்? அக்கம்பக்கம் விசாரிக்கமாட்டார்களா? இப்போதே ஒதுங்கிப்போய் ஏதாவது முதியோர் இல்லத்தில் சேருங்கள்.

ப் கே. தேவிகாராணி, பொள்ளாச்சி.

Advertisment

"பாலஜோதிட'த்தில் எனக்கு ஆண்வாரிசு உண்டு என்று பதில் தந்தீர்கள். அதன்படியே சிசேரி

யன் மூலமாக எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. தங்களின் தேவஜோதிட வாக்கு பலி-த்தது. என் மனமார்ந்த நன்றிகள்! என் மகனின் ஜாதகத்தை அனுப்பியுள்ளேன். அவன் ஆயுள், படிப்பு, எதிர்காலம் எப்படி இருக்கும்? ஒன்றேகால் வயதுப் பையனுக்கு இப்போதே பெண் பார்த்து, பொருத்தம் கேட்பீர்கள் போ-லிருக்கிறது! ஆண்வாரிசு உண்டா என்று கேட்ட உங்களுக்கு, அவனுக்கு ஒரு வயது முடிவில் ஆயுஷ் ஹோமம் செய்யவேண்டுமென்று தோன்றவில்லையா? ஒரு குழந்தை பிறந்து ஒரு வயது முடியும்போது ஆயுஷ் ஹோமம், தன்வந்திரி ஹோமம், நவகிரக ஹோமம் செய்து அந்தக் குழந்தைக்கு கலச அபிஷேகம் செய்யவேண்டும். அப்படிச் செய்தால் 12 வயதுவரை அந்தக் குழந்தைக்கு எந்த பாதிப்பும் சங்கடமும் வராது. இப்போதும் கெட்டுப்போகவில்லை. உங்கள் பையனுக்கு ஆயுஷ் ஹோமம், தன்வந்திரி ஹோமம், ஹயக்ரீவர் ஹோமம், தட்சிணாமூர்த்தி ஹோமம், நீலு சரஸ்வதி ஹோமம் செய்யவும். மகனுடைய ஜென்ம நட்சத்திரம் விசாகத்தன்று செய்யவேண்டும்.

ப் எம். செந்தில், சோளிங்கர்.

வாழைப்பழ வியாபாரம் செய்கிறேன். பழைய கடையை இடித்து புதிதாகக் கட்டிவிட்டேன். என் ஜாதகத்தில் நாகதோஷம் உண்டா? சர்ப்ப தோஷம் உண்டா? களஸ்திர தோஷம் உண்டா? புத்திரதோஷம் உண்டா? எப்போது திருமணமாகும்?

உங்கள் ஜாதகத்தில் ஒரு தோஷமல்ல; இரண்டு தோஷமல்ல. பல தோஷம் உள்ளது. இதற்கு 21 விதமான ஹோமம் செய்து உங்களுக்குக் கலச அபிஷேகம் செய்யவேண்டும். வயது 52 முடியப் போகிறது. கடன் உடன் வாங்கியாவது உங்களுக்கு வசதிப்பட்ட இடத்தில் ஹோமம் செய்யுங்கள்.

ப் கே. சிவகுமார், ஓசூர்.

என் மகன் விக்னேஷின் திருமணம் பற்றி முன்பு கேட்டபோது 30 வயது முடிந்தபிறகு திருமணமாகும் என்றீர் கள். இப்போது 30 வயது முடிந்து 31 ஆரம்பம். தற்போது திருமண முயற்சி களைத் தொடங்கலாமா? ஒரு பெண் ஜாதகம் வந்துள்ளது. அது பொருந்துமா?

விக்னேஷ்வர் விசாக நட்சத்திரம், விருச் சிக ராசி, மேஷ லக்னம். ஏழரைச்சனி கடந்த டிசம்பருடன் முடிந்துவிட்டது. நீங்கள் அனுப்பியுள்ள பெண் ஜாதகம் பொருத்த மில்லை. வேறு ஜாதகம் பார்க்கவும். விரைவில் மணவாழ்வு அமையும்.

ப் ஆர். சங்கர்பாபு, சேலம்.

என் மகனுக்கு 35 வயது. இன்னும் திருமணமாகவில்லை. எப்போது நடக்கும்? மருந்து, மாத்திரை சாப்பிடும் நோயாளியாகக் கஷ்டப்படுகிறான். எப்போது குணமாகும்?

மகன் ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசிக்கு 2020 வரை அஷ்டமச் சனி நடந்தது. அதனால் வைத்தியச் செலவு வந்தது. செலவைப் பார்க்காமல் கடன் உடன் வாங்கியாவது கந்தர்வராஜ ஹோமம் உள்ளிட்ட ஹோமம் செய்து, மகனுக்குக் கலச அபிஷேகம் செய்யவும். அப்படியே அவர் தாயும், தந்தையும் அபிஷேகம் செய்துகொள்ளலாம். ஹோமம் செய்த ஆறு மாதத்திற்குள் நல்ல மருமகள் வீடுவந்து சேருவாள்.

ப் சண்முகம், திருநெல்வே-.

என் மகன் +2 படிக்கிறான். மேற் படிப்பு எந்தத் துறையில் படிக்கலாம்? அரசு வேலை கிடைக்குமா?

10-க்குடைய சனி லக்னத்தில் சூரிய னோடு சம்பந்தம். எதிர்காலத்தில் அரசு வேலைக்கு இடமுண்டு. 2023 வரை ராகு தசை. ராகு லக்னத்தில் இருக்கிறார். மருத்துவத்துறை அல்லது இஞ்சினியரிங் துறையில் அட்மிஷன் கிடைக்கும். நீட் தேர்விலும் பாஸாகலாம். இந்த இருதுறையும் அவருக்குப் பிரியமில்லையென்றால் எம்.பி.ஏ. அல்லது கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட கல்வி படிக்கலாம்.

ப் மணிகண்டன், கரூர்.

என் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்? உடல் ஆரோக்கியம், ஆயுள், மனைவி, மக்கள் யோகம் பற்றியும் விளக்கவும்!

கும்ப லக்னம், உத்திர நட்சத்திரம், கன்னி ராசி. சனி தசை நடக்கிறது. சனி 12-க்குடைய விரயாதிபதி. சனி தசை முற்பகுதிவரை விரயம்; பிறகு நிம்மதி. ஒழுக்கமாக வாழ்ந்தால் ஆயுள், ஆரோக்கியம் பற்றிக் கவலையில்லை. இல்லையென்றால் வைத்தியச்செலவு ஏற்படும். மனைவி, மக்கள் யோகத்துக்குக் குறைவில்லை.

ப் முத்துக்குமார், தூத்துக்குடி.

என் மகள் மேல்நிலைக்கல்வி படிக்கிறாள். எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ் ஆக விரும்பு கிறாள். முடியுமா? அல்லது வேறு எந்தத் துறையில் மேற்படிப்பு படிக்கலாம்?

மகள் ரிஷப லக்னம், உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி. 2023 வரை புதன் தசை. 10-க்குடைய சனி 2-ல். ராசிநாதன் குரு 3-ல் உச்சம். லக்னத்தில் சூரியன். அவர் விரும்பியபடி ஐ.ஏ.எஸ் ஆகவும், நீட்தேர்வில் பாஸாகவும் (லக்னத்தில் சூரியனோடு ராகு சேர்ந்திருப்பதால்) சூ-லினிதுர்க்கா ஹோமம் உட்பட 20 வகையான ஹோமம் செய்து கலச அபிஷேகம் செய்யவேண்டும். மாற்றுத்துறையாக இஞ்சினியரிங் தேர்ந்தெடுக்கலாம்.

ப் எஸ். கிருஷ்ணவேணி, சென்னை-4.

இதுவரை எந்த யோகமும் இல்லை. கணவருடன் வெளிநாடு சென்றுள்ளேன். கடினமாக உள்ளது. யோகம் உண்டா?

வெளிநாடு போயிருப்பதே ஒரு யோகம் தானே! பிறகு ஏன் எந்த யோகமும் இல்லை என்கிறீர்கள்! நேரம் வரும்போது யோகம் வரும்.

ப் எம். பெருமாள், விழுப்புரம்.

எனக்கு தாய்- தநதையில்லை; வேலை யும் இல்லை; வருமானமும் இல்லை. எதிர்காலம் எப்படி இருக்கும்?

அப்படியென்றால் எப்படி சாப்பாட்டுக்கு செலவு செய்கிறீர்கள்? ரூம் வாடகை எப்படிக் கொடுக்கிறீர்கள்? 46 வயதுவரை எப்படி நாள் ஓடியது? ப் கே. சாமி, திருநெல்வே-.

எனக்கு 36 வயது நடக்கிறது. பூக்கட் டும் தொழில் செய்கிறேன். உடல் ஊனமுற்ற வன். திருமண ஆகவில்லை. திருமணம் நடக்குமா? இதுவரை எந்த யோகப்பலனும் இல்லை. பரிகாரம் உண்டா?

கன்னி லக்னம். அதில் சுக்கிரன் நீசம். 2-ல் சனி. உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி. 9-ல் கேது, செவ்வாய். பூர்வபுண்ணிய தோஷம் உண்டு. கிருஷ்ணாபுரம் ஜெயவீர அபய ஹஸ்த ஆஞ்சனேயரை சனிக்கிழமை தோறும் வழிபடுங்கள். (19 சனிக்கிழமை). அத்துடன் அமாவாசையிலும் வழிபடவும். உங்கள் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்

ப் கே. ரங்கசாமி, ராசிபுரம்.

நான் என்ன தொழில் செய்தால் விருத்தியடையும்? நிலம், வீடு எப்போது வாங்குவேன்? வீட்டில் சுபகாரியம் எப்போது நடக்கும்? மனைவிக்கு உடல்நிலை எப்போது சரியாகும்? கொடுத்த பணம் (கடன்) எப்போது திரும்பக் கிடைக்கும்?

ரிஷப லக்னம், சிம்ம ராசி, பூர நட்சத்திரம். 58 வயது முடிந்து 59 ஆரம்பம். குரு தசை, புதன் புக்தி நடக்கிறது. உங்களுக்கு எந்தத் தொழில்துறையில் அனுபவமும் ஆர்வமும் இருக்கிறதோ அதைச் செய்யலாம். "செய்த தொழிலை விட்டவனும் கெட்டான். செய்யாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான்' என்பது பழமொழி. உதாரண மாக நான் உங்களை சலூன் அல்லது லாண்டரிக்கடை வைக்கச் சொன்னால் செய்வீர்களா? கையில் லட்சக்கணக்கில் இருப்பு வைத்திருந்தால் நாளைக்கே வீடு, நிலம் வாங்கலாம். அதேபோல ஏற்பாடுகள் செய்தால் வீட்டில் சுபகாரியம் செய்யலாம். மாதம் ஒருமுறை, வசதியிருந்தால் வாரம் ஒருமுறை நாமக்கல் அருகில் சேந்தமங்கலம் சென்று தத்தாத்ரேயரையும் குருநாதர் ஸ்வயம்பிரகாச சுவாமிகளின் ஜீவசமாதி யையும் வழிபடவும். ஒருமுறை அபிஷேக பூஜை செய்யவும். உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் நல்ல விடையும் தீர்வும் உண்டாகும்.