ப் ஏ. குமாரராஜா, ராசிபுரம்.
எங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டா? நோய், எதிரிகள் அதிகமாக இருப்பது ஏன்?
உங்களுக்கு ஏழரைச்சனி. 2023-ல் குழந்தை பாக்கியம் உண்டாகும். மனைவியின் ஏழரைச் சனி முடிந்தாலும் உங்களுடைய ஏழரைச் சனிதான் பகை, நோய், வைத்தியச் செலவுக்கு காரணம்! தினசரி சத்ரு சங்காரவேல் பதிகம் பாராயணம் செய்யும். அல்லது கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யவும்.
ப் எஸ். கலிவரதன், ஹைதராபாத்.
எங்களுக்கு திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆகின்றன. குழந்தை பாக்கியம் உண்டா? மனைவியின் ஜாதகத்தில் 4-ஆம் வீட்டில் செவ்வாய் இருப்பதால், குழந்தைகள் பிறந்தாலும் ஆரோக்கியமாக இருப்பார்களா?
உங்களுக்கு கும்ப லக்னம், துலா ராசி, சுவாதி நட்சத்திரம். துலா ராசிக்கு 5-ல் செவ்வாய். அவருக்கு ரிஷபச் சனி பார்வை. கடுமையான புத்திர தோஷம். மனைவிக்கு ரிஷப லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். ராசிக்கு 7-ல் செவ்வாய், சனி, ராகு சேர்க்கை. இருவர் ஜாதகத்திலும் லக்னத் துக்கு 5-ஆம் இடத்துக்கு குரு மறைவு; பார்வையில்லை. எனவே முக்கியமான சில ஹோமங்கள் செய்து உங்கள் இருவருக்கும் கலச அபிஷேகம் செய்தால் வாரிசு உண்டாகும்.
ப் எம். கிருஷ்ணமூர்த்தி, கும்பகோணம்.
என் மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?
மகன் ரிஷப லக்னம். 7-ல் சனி, 8-ல் செவ்வாய். அதனால் 30 வயதுக்குமேல் திருமணமாகும். கந்தர்வராஜ ஹோமம் செய்தால் 30 வயது நடப்பில் திருமணம் கூடும். இல்லாவிட்டால் 30 முடிந்து 31 வயதில் திருமணம் செயல்படும். அதுவரை திருமண முயற்சிகளை ஒத்திப்போடவும்.
ப் வி. குமரவேல், நாமக்கல்.
எனது மகனுக்கு திருமணம் எப்போது நடக்கும்? பணியிலுள்ள பெண் அமைவாரா?
கடக லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். நடப்பு வயது 29. குரு 7-ல் நீசம். ராசிக்கு 7-ஆம் இடத்துக்கு உச்ச சனி பார்வை. 29 வயது முடியவேண்டும். 30 வயதில் திருமணம் கூடும். பணியிலுள்ள பெண் அமைய வாய்ப்புண்டு.
ப் எஸ். பொன்னரசன், பொன்னேரி.
ஜோதிட ஆர்வம் அதிகம் உள்ளது. ஜோதிடத் தொழில் செய்யலாமா? ஐ.டி.ஐ. முடித்துள்ளேன். அரசு வேலை கிடைக்குமா?
ரிஷப லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லக்னத்துக்கு 2-க்குடைய புதன் 4-ல் சூரியனோடு சம்பந்தம். ராசிக்கு 2-ல் கேது. ஜோதிடம் படிக்கலாம்; ஜோதிடத் தொழிலும் செய்யலாம். அரசு வேலைக்கு இடமில்லை. தனியார் துறையில் மிஷினரி சம்பந்தமான தொழில் செய்யலாம்.
ப் வி. கிருஷ்ணகுமார், வேலூர்.
கடந்த ஒன்பது வருடங்களாக தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, நானும் தாயாரும் தங்கையும் தனியாக இருக்கிறோம். தந்தை தனியாக இருக்கிறார். தங்கையின் திருமணம் முடிந்துவிட்டது. தற்போது தந்தை தனிமையில் துன்பப்படுவதாகக் கேள்விப்பட்டேன். நாங்கள் ஒன்று சேரலாமா? வேண்டாமா? எனக்கு வெளிநாட்டு வேலை அமையுமா?
உங்கள் பிறந்த தேதி எண் 4, கூட்டு எண் 3. இப்போதுள்ள பெயர் எண் 40. இது ராகு எண். தேதியும் பெயர் எண்ணும் ராகு (4) என்பதால், குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் இருக்காது. பெயரில் இன்னொரு 'ஆ' சேர்த்தால் 41 வரும். நன்மையாக அமையும். தகப்பனார் சிம்ம ராசி. தாயாரும் சிம்ம ராசி. அதனால் இருவருக்கும் ஈகோ இருக்கும். அத்துடன் 57 வயது வரை அப்பாவுக்கு ராகு தசை. இப்போது 54 வயதுதான் நடக்கிறது. அம்மாவுக்கு 46 வயது முதல் 64 வயது வரை ராகு தசை. இப்போது 50 வயதுதான். இருவருக்கும் சம ராகு நடப்பது ஆகாது. பிரிவுக்குக் காரணம் சம ராகுதான். இப்போது ஒன்றுசேர்ந்தால் இரண்டு வருடத்தில் அப்பாவுக்கோ அம்மாவுக்கோ கண்டம் ஏற்படலாம். அதனால் விலகியிருப்பது நல்லது. அப்படி ஒன்றுசேரவிரும்பினால் சூலினிதுர்க்கா ஹோமம், திருஷ்டி துர்க்கா ஹோமம், தன்வந்திரி ஹோமம், நவகிரக ஹோமம், ஆயுஷ் ஹோமம் செய்து அப்பா- அம்மா இவருக்கும் அபிஷேகம் செய்துவிட்டு ஒன்றுசேரலாம்; ஆபத்துகள் விலகும்.
ப் எம். சாவித்ரி, திருப்பூர்.
கணவரைப் பிரிந்து வாழ்கிறேன். ஒன்றுசேர வாய்ப்புள்ளதா?
உங்களுக்கு ஏழரைச் சனி நடக்கிறது. கணவர் ஜாதகமும் இருந்தால் தெளிவாக பதில் சொல்லலாம். ஏழரைச் சனி முடியும் வரை பிரிந்திருப்பது நல்லது.
ப் டி. கோகுலகண்ணன், கரூர்.
திருமணம் எப்போது நடக்கும்? சொந்த வீடு எப்போது அமையும்? என் தங்கைக்கு அரசு வேலைக்கு இடமுண்டா? அவளுக்கு திருமணம் எப்போது நடக்கும்?
உங்களுக்கு 25 வயது. புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசி, கன்னி லக்னம். ராசிக்கு 7-ல் (தனுசுவில்) சனி. அவரை ரிஷபச் செவ்வாய் 8-ஆம் பார்வை பார்ப்பதால் 30 வயதில்தான் திருமணம். கன்னி லக்னத்துக்கு 4-ல் சனி. அதற்குடைய குரு 4-ஆம் இடத்துக்கு 6-ல் ரிஷபத்தில், லக்னத்துக்கு 6-க்குடைய செவ்வாய் சம்பந்தம். அதனால் சொந்த வீடு என்பது கனவுதான்! மிதுன ராசிக்கு 4-க்குடைய புதனும் லக்னத்துக்கு 6-ல் மறைவு; ராகு, கேது, சுக்கிரன் சம்பந்தம்! அதனால் சொந்த வீடு சாத்தியமல்ல! ஒருவேளை மனைவி அமைந்து, அவர் ஜாதக யோகத்துக்கு சொந்த வீடு அமைந்தால் ஏற்றுக்கொள்ளலாம். தங்கை மிதுன லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். அவருக்கும் 8-ல் (மகரத்தில்) சனி. அதற்கு கடகச் செவ்வாய் (நீசம்) பார்வை! எனவே அவருக்கும் தாமதத் திருமணம்தான். 27 வயதுக்கு மேல் 30 வயதுகூட ஆகலாம். இப்போது 22 வயதுதான்.
ப் ஆர். நாராயணன், கோவை.
இறைவனையடுத்து ஜோதிட குருவை சரணாகதி அடைந்து எழுதும் கண்ணீர்க் கடிதம்! திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. எல்லாம் தந்த இறைவன் மழலைச் செல்வத்தைத் தரவில்லை; ஏன்? நவீன மருத்துவ சிகிச்சை, இறைவழிபாடு எல்லாம் செய்துவிட்டேன்.
தாமோதரனுக்கு சுவாதி நட்சத்திரம், துலா ராசி, மிதுன லக்னம். மனைவி யசோதாவுக்கு கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, கும்ப லக்னம். இருவரின் திருமணத் தேதி 5, 8, 4, 7 என்றால் வாரிசுக்கு இடமில்லை. அப்படி இருந்தால் அப்போது கட்டிய மாங்கல்யத்தைக் கழற்றி விருப்பமான கோவில் உண்டியலில் செலுத்திவிட்டு, 1, 3, 6 வரும் தேதியில் புது மாங்கல்யம் தயார் செய்து மறுமாங்கல்யம் கட்டவேண்டும். அத்துடன் இருவர் ஜாதகத்திலும் புத்திர தோஷம் கடுமையாக இருப்பதால், வாஞ்சாகல்ப கணபதி புத்திரப்ராப்தி ஹோமம், சந்தானபரமேசுவர ஹோமம், சந்தான கோபால ஹோமம் செய்து தம்பதி இருவரும் கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும்.