சில ஆண்களும் பெண்களும் ஒருவரை யொருவர் விரும்பித் திருமணம் செய்து கொள்கிறார்கள். பெற்றவர்கள் பேசி நல்ல நாள், நட்சத்திரம், முகூர்த்த நேரம் பார்த்து, மந்திரம் கூறி சாஸ்திர சம்பிரதாயப்படி தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்கின்றனர். இவ்வாறு திருமணம் செய்துகொண்ட அனைவரும் மகிழ்ச்சியான- முழுமையான குடும்ப வாழ்வை அடைந்தார்களா என்னும் கேள்விக்கு இல்லை என்பதே உண்மையான பதிலாக உள்ளது.

husband-wife

தங்கள் விருப்பப்படி திருமணம் செய்துகொண்டவர்கள், பெற்றோர் பார்த்துத் திருமணம் செய்துகொண்ட வர்கள் என யாராயினும் சரி- வாழவந்த குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஏதாவது ஒரு காரணத்தால் கருத்து வேறுபாடு, பிரிவு, வழக்கு என ஏற்பட்டுப் பிரிந்து தனிமையில் வாழும்நிலை சிலருக்கு ஏற்பட்டுவிடுகிறது. இது போன்ற நிலை அவர்கள் பிறக்கும் போதே நிச்சயக்கப்பட்ட விடுகிறது. இத்தகைய அமைப்பில் பிறந்துள்ள ஆண்- பெண் ஜாதகங்களை அவர்களது பிறப்பு ஜாதகத்தைக் கொண்டு, சித்த ஜோதிட முறைமூலம் அறியலாம்.

உதாரண பெண் ஜாதகம் 1-ல், ஜாதகி யைக் குறிக்கும் கிரகம் சுக்கிரன் மகர ராசி யில் உள்ளது. இவளது கணவனைக் குறிப்பிடும் கிரகம் செவ்வாய் விருச்சிகத்தில் உள்ளது. கணவன்- மனைவியைக் குறிப்பிடும் காரக கிரகங்களான ddசெவ்வாய், சுக்கிரனுக்கு இடையே, பிரிவினையை உண்டாக்கும்- முற்பிறவி சாபத்தை இப்பிறவியில் அனுபவிக்கச் செய்யும் சாப கிரகமான கேது உள்ளது. இதுபோன்று செவ்வாய், கேது, சுக்கிரன் என்ற நிலையில் கிரகங்கள் பிறப்பு ஜாதகத்தில் அமைந்திருந்தால் திருமணம் முடிந்ததும் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு, பிரச்சினை, பிரிவு ஏற்படும். இந்தப் பெண் தன் கணவனுடன் கருத்து வேறுபாடு கொண்டு விலகிச் செல்வாள். கணவன்- மனைவி பிரிவிற்கு இந்த பெண்ணே காரணமாவாள். கணவனது வம்சத்தில் உண்டான சாபம் அவனைத் தன் மனைவியுடன் வாழவிடாமல் தடுத்துவிடும்.

Advertisment

உதாரண பெண் ஜாதகம் 2-ல், ஜாதகியைக் குறிக்கும் சுக்கிரன் ரிஷப ராசியில் உள்ளது. அவளது கணவனைக் குறிக்கும் செவ்வாய் கடக ராசியில் உள்ளது. சுக்கிரனுக்கும் செவ்வாய்க்கும் இடையில் மிதுன ராசியில், முற்பிறவி சாபத்தைக் குறிப்பிடும் கேது உள்ளது.

இவ்வாறு சுக்கிரன், கேது, செவ்வாய் என்னும் நிலையில் பிறப்பு ஜாதகத்தில் கிரகங்கள் இருந்தால் கணவன், மனைவியுடன் கருத்து வேறுபாடுகொண்டு, குடும்பத் தில் பிரச்சினையை ஏற்படுத்தி அல்லது தன் குடும்பத்தாரின் பேச்சைக்கேட்டு தன் மனைவியைவிட்டுப் பிரிந்து விடுவான். கணவன்- மனைவி பிரிவுக்குக் காரணம் கணவனே ஆவான். மனைவியின் வம்சத்தில் உண்டான சாபம் இந்தப் பெண்ணைக் கணவனுடன் வாழவிடாமல் தடுத்துவிட்டது.

உதாரண ஆண் ஜாதகம் 3-ல், ஜாதகனைக் குறிக்கும் குரு மகர ராசியில் உள்ளது.

Advertisment

அவனது மனைவியைக் குறிக் கும் சுக்கிரன் மீன ராசியில் உள்ளது. கணவன்- மனைவி யைக் குறிப்பிடும் குரு, சுக்கிரன் ஆகியவற்றுக்கிடையில், கும்பராசியில் சாப கிரகமான கேது உள்ளது.

ஒரு ஆணின் பிறப்பு ஜாதகத்தில் குரு, கேது, சுக்கிரன் என்ற நிலையில் கிரகங்கள் இருந்தால், இவனது மனைவி குடும்பத்தில் கலகத்தை ஏற்படுத்தி, கருத்து வேறுபாடுகளை உருவாக்கி கணவனை விட்டுப் பிரிந்து சென்றுவிடுவாள். இந்தப் பிரிவுக்கு மனைவியே காரணமாவாள்.

ஆண் உதாரண ஜாதகம் 4-ல், ஜாதகனைக் குறிக்கும் குரு சிம்மத்திலும், அவன் மனைவியைக் குறிக்கும் சுக்கிரன் மிதுனத்திலும் உள்ளன. கணவன்- மனைவி யைக் குறிப்பிடும் குரு, சுக்கிரன் ஆகிய இரண்டு கிரகங்களுக்கிடையில், கடகத்தில் சாப கிரகமான கேது உள்ளது.

இவ்வாறு ஒரு ஆண் ஜாதகத் தில் சுக்கிரன், கேது, குரு என்னும் நிலையில் கிரகங்கள் இருந்தால், குடும்பத்தில் கணவன் பிரச்சினையை உருவாக்கி மனைவியை ஒதுக்கிவிடுவான். கணவன்- மனைவி பிரிவுக்கு கணவனே காரணமாவான்.

பெண்களின் ஜாதகத்தில் 12 ராசிகளில், கணவனைக் குறிக்கும் செவ்வாய்க்கும், ஜாதகியைக் குறிக்கும் சுக்கி ரனுக்குமிடையில் பிரிவினையைதத் தரும் கேது இருந்தால், கணவன்-மனைவியிடையே கருத்துவேறுபாடு உருவாகும்.

ஆண்களின் ஜாதகத்தில், ஜாதகனைக் குறிக்கும் குரு வுக்கும், மனைவியைக் குறிப்பிடும் சுக்கிரனுக்கு மிடையில் கேது இருந் தால் கணவன்- மனைவி ஒற்றுமையைக் குலைத்து விடும்.

பொதுவாக ஆண்- பெண் ஜாதகத்தில், பாவ கிரகங் களான ராகு- கேதுவின் அச் சுக்கு ஒருபுறம் செவ்வாயும், மறுபாதியில் சுக்கிரனும் இருந் தாலும்; ராகு- கேது அச்சுக்கு ஒருபகுதியில் குருவும் மறுபகுதியில் சுக்கிரனும் இருந்தா லும், குடும்ப வாழ்வில் கருத்து வேறுபாடு, பிரிவு, இழப்பு என, அவரவர் முற்பிறவியின் வினைப்பதிவுக்கேற்ப அமைந்து அனுபவிக் கச் செய்யும்.

செல்: 99441 13267