முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026.
தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: சுவாதி- 4.
செவ்வாய்:
மிருகசீரிடம்- 3 (வ).
புதன்: சுவாதி- 4.
குரு: உத்திரட்டாதி- 1 (வ).
சுக்கிரன்: விசாகம்- 1.
சனி: அவிட்டம்- 1.
ராகு: பரணி- 2.
கேது: சுவாதி- 4.
கிரக மாற்றம்:
ஐப்பசி 25 (11-11-2022)
விருச்சிக சுக்கிரன் (இரவு 8.29).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மீனம்.
6-11-2022 இரவு 12.03 மணிக்கு மேஷம்.
9-11-2022 காலை 7.58 மணிக்கு ரிஷபம்.
11-11-2022 மாலை 6.17 மணிக்கு மிதுனம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியில் ராகு, 7-ல் சூரியன், கேது சஞ்சரிப்ப தால் நீங்கள் எதிலும் சற்று பொறுமை யோடு செயல்படுவது நல்லது. முன் கோபத்தைக் குறைத்துக்கொண்டு உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன்மூலமாக பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். கணவன்- மனைவி யிடையே விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய நேரமாகும். ராசியாதிபதி செவ்வாய் 3-ல் சஞ்சரிப்பதாலும், 12-ல் குரு வக்ரகதியில் இருப்பதாலும் உங்களு டைய அனைத்து பொருளாதாரத் தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய வாய்ப்புண்டு. எதிர்பாராத உதவிகள் கிடைத்து கடன் பிரச்சினைகள் குறையும். இவ்வாரம் 7-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிர்நீச்சல் போட்டா வது இலக்கை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் சில இடர்ப்பாடுகள் இருந்தாலும் உங்களின் தனித்திறமை யால் எதையும் சமாளிப்பீர்கள். வேலையாட்கள் சில நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும் கிடைக்கவேண்டிய லாபங்கள் கிடைக்கும். உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். வேலைக்குச் செல்பவர்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு நல்லபெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகளுண்டு. நீண்டநாட்களாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு தற்போது நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இவ்வாரத்தில் திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய யோகமுண்டாகும். சிவன் தலங்களுக்குச் சென்று வருவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நன்று. 11-ல் குரு வக்ரகதியில் இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும். உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், கேது சஞ்சரிப்பது சிறப் பான அமைப்பென்பதால் உங்களின் தனித்திறமையால் இலக்கை அடைவீர்கள். எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளக்கூடிய பலமுண்டாகும். 9-ல் சனி சஞ்சரிப்ப தும் நல்ல அமைப்பென்பதால் வெளியூர் மூலமாக மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சற்று பொறுமையோடு செயல் பட்டால் நல்ல லாபத்தை அடையலாம். வேலை யாட்கள் ஒத்துழைப்பு சிறப் பாக இருப்பதால் எடுத்த ஆர்டர்களைக் குறித்த நேரத்தில் டெலிவரி செய்வீர் கள். பெரிய முதலீடு கொண்ட செயல்களில் சற்று யோசித்து செயல்படுவது நன்மை தரும். வேலைக்குச் செல்பவர் களுக்கு அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்ப தால் மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். உடன்பிறந்தவர்களிடம் பேச்சில் பொறுமை யோடு இருப்பது நல்லது. இவ்வாரத்தில் ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் புதிய முயற்சிகளை மேற்கொண்டால் அதில் பரிபூரண வெற்றியடைய முடியும். செவ்வாய்க் கிழமை முருக வழிபாடு மேற்கொள்வது, ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் தீபமேற்றுவது நன்மை தரும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் செவ்வாய், அஷ்டம ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, முன்கோபத்தைக் குறைத்துக்கொள்வது நன்மை தரும். குறிப்பாக 5-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருக்கவும். உங்கள் ராசிக்கு 5-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதாலும் பண வரவுகள் சிறப்பாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமல்லாமல் கடந்தகால கடன் பிரச்சினைகளையும் பைசல் செய்யமுடியும். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். மற்றவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றும் பலமுண்டா கும். குடும்பத்தில் தடைப் பட்ட சுபகாரியங்கள் கை கூடும். தொழில், வியாபாரத் தில் பிறர் பார்த்து ஆச்சரியப் படுமளவுக்கு நல்ல லாபத்தை அடைவீர்கள். வேலையாட்கள் சிறுசிறு இடர்ப்பாடுகளை ஏற்படுத்தி னாலும் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு அனைத்துப் பணிகளையும் குறித்த நேரத்தில் முடித்து விடுவீர்கள். இருக்குமிடத் தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகரீதியாக சிறப் பான வாய்ப்புகள் கிடைக்குமென்றாலும், உடல் நிலை ஒத்துழைக்காத காரணத்தினால் எடுத்த பணியில் மட்டும் கவனம் செலுத்தினால் விரைவில் ஒரு நல்ல நிலையை எட்டமுடியும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் வளமான பலன்கள் கிடைக்கும். சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்று வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவி செய்வது, சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது நன்று.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 4-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவுகள் சற்று சாதகமாக அமையப்பெற்று அனைத்து நெருக்கடி களையும் எதிர்கொள்ளமுடியும். 4-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதாலும், 7-ல் சனி சஞ்சரிப்பதாலும் அலைச்சல், டென்ஷன் ஏற்படும். வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதனை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறு பாடுகள் நிலவும். செவ்வாய் வக்ரகதியில் 12-ல் சஞ்சரிப்பதால் பங்காளி யிடம் பேச்சில் பொறுமை யோடு இருப்பது நல்லது. குரு வக்ரகதியில் இருப்ப தால் பணப் பரிமாற்ற விஷயங் களில் நிதானத்தோடு செயல் படுவது நல்லது. நீங்கள் மிகவும் எதிர்பார்த்த பொருளாதார வரவுகள் தாமதப்படலாம். தொழில், வியாபாரத்தில் சிறுசிறு இடர்ப்பாடுகள் இருக்கக் கூடிய நேரமென்பதால் ஒவ்வொரு செயலிலும் கண்ணும் கருத்துமாக செயல் பட்டால்தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலையாட்கள் செய்யக் கூடிய சில செயல்களால் உங்களுக்கு வீண் செலவு கள் ஏற்படலாம். வெளி நபர்களிடம் தொழில் விஷயங்களைப் பற்றிப் பேசாமலிருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும் அதற் கான ஆதாயங்கள் கிடைக்கும். உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது தற்போதைக்கு நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, முடிந்தவரை வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் மிகவும் சாதகமான நாட்களாக இருக்குமென்பதால் புதிய முயற்சிகளை மேற்கொண்டால் அனுகூலம் உண்டாகும். சூரிய நமஸ்காரம் செய்வது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 6-ல் சனி சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் சுபிட்சமான பலன்களை அடையும் யோகமுண்டு. 3-ல் சூரி யன், கேது, லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். எடுக்கும் முயற்சி களில் வெற்றிமேல் வெற்றி கிடைக்கும். நீண்டநாட் களாக எண்ணிய காரியங்கள் தற்போது நிறைவேறக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல்ரீதியாக நல்ல லாபத்தை அடையக்கூடிய யோகமும், தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படக்கூடிய வாய்ப்புமுண்டு. தொழில் ரீதியாக கடந்த காலங்களில் நீங்கள் செய்த பணிகளுக்குத் தற்போது பொருளாதார வரவுகள் ஏற்பட்டு உங்க ளின் அனைத்துவிதமான பிரச்சினைகளும் படிப்படி யாகக் குறையும். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். அரசுவழியில் எதிர்பார்த்த உத்தரவுகளையும் உதவிகளையும் பெறமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு சிறப்பான நிலை ஏற்படுவது மட்டுமல்லாமல், நீண்டநாட்களாக வேலை தேடிக் கொண்டி ருப்பவர்களுக்கு தற்போது வெளியூர், வெளி மாநிலங்கள் மூலமாக நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கடந்தகால மருத்துவச் செலவுகள் தற்போது குறைவதால் சேமிக்குமளவுக்கு உங்களது வாழ்க்கைத் தரம் உயரும். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் வீடு, மனை, நவீன பொருட்கள் வாங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் அனுகூலமான பலனுண்டாகும். துர்க்கையம்மனுக்கு எலு மிச்சம் பழத்தில் தீபமேற்றுவது, மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன், சுக்கிரனுடன் 2-ல் சஞ்சரிப்பதால் உங்களின் அனைத்துத் தேவைகளும் எளிதில் பூர்த்தியாகும் யோக முண்டு. பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் நிறைவேற்ற முடியும். செவ்வாய் ராசிக்கு 10-ல் சஞ்சரிப்பதால் இருக்கு மிடத்தில் உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ராசிக்கு 2-ல் சூரியன், கேது, 5-ல் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத் தில் கவனம் செலுத்துவது, மனைவி, பிள்ளை களின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது நல்லது. முடிந்தவரை வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படலாம். தற்போது கிடைக்கும் வாய்ப்பு களைப் பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை அடையமுடியும். வேலை யாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எடுத்த ஆர்டர்களைக் குறித்த நேரத்தில் செய்து முடிக்கமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக ஓய்வுநேரம் குறையும். அதிகாரியிடம் தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய நேரமாகும். முடிந்தவரை பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது, உங்கள் பணியில் மட்டும் கவனத் துடன் செயல்படுவது நன்மை தரும். பூர்வீக சொத்துரீதியாக தேவையற்ற நிகழ்வுகள் நடந்து மனக்கவலை உண்டாகும். இவ்வாரத்தில் ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூல மாக சஞ்சரிப்பதால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் பரிபூரண வெற்றி யடைந்து மகிழ்ச்சியைத் தரும். வேங்கடேசப் பெருமாளை வழிபடுவது, பாம்புப் புற்றுக்குப் பால்விடுவது நன்று.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன், புதனுடன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பது சற்று சாதகமான அமைப்பென்றாலும் உங்கள் ராசியில் சூரியன், கேது சஞ்சரிப்பது, 4-ல் சனி, 7-ல் ராகு சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும். வீண் பிரச்சினைகளால் நிம்மதி குறையும். எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமத மாகும். உடனிருப்பவர்களே உங்களது மன அமைதியைக் குறைப்பார்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் இடையூறு கள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். பண விஷயத்தில் மிகவும் நிதானத் தோடு செயல்படுவது, அதிக முதலீடுகள் கொண்ட செயல்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக் கான பலன் கிடைப்பதில் இடைஞ்சல்கள் ஏற்படும். சில இடைத்தரகர்களின் செயல்களால் வீண் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ள நேரிடும். வேலையாட்களையும், கூட்டாளிகளையும் அனுசரித்துச் செல்வதன்மூலம் நெருக்கடிகளை சமாளிக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு மற்றவர்கள் பணியும் நீங்கள் சேர்த்துச் செய்யவேண்டிய நெருக்கடியான நிலை உண்டாகும். கூடுதல் பணிச்சுமை காரணமாக மன உளைச்சல் அதிகரிப்பதுடன் சிறுசிறு ஆரோக்கிய பாதிப்புகளும் ஏற்படும். சூழ்நிலைக் குத் தக்கவாறு பொறுமையுடன் செயல்பட் டால் நிலைமையை சமாளிக்கமுடியும். ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அதன்மூலம் அனுகூலங்களைப் பெறுவீர்கள். புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. சனி பகவானுக்கு எள் தீபமேற்றுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனை தரிசிப்பது நன்று.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசியாதிபதி செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதாலும், சூரியன் 12-ல் சஞ்சரிப்ப தாலும் தேவையற்ற நெருக்கடிகள் சில ஏற்பட்டாலும், உங்கள் ராசிக்கு 3-ல் சனி சஞ்சரிப்பதும், 6-ல் ராகு சஞ்சரிப்பதும் மிகவும் அற்புதமான அமைப்பென்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது, முடிந்தவரை தூரப்பயணங் களைத் தள்ளிவைப்பது நல்லது. பொதுவாக உற்றார்- உறவினரிடம் பேசுகின்றபொழுது பொறுமையோடு இருப்பது நன்று. பொருளாதாரரீதியாக சிறப்பான நிலை உண்டாகும். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். உங்கள் முயற்சி களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். பகைமை பாராட்டியவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பைப் புரிந்துகொண்டு பகைமையை மறந்து நட்புடன் பழகுவார்கள். பணப்பரிமாற்ற விஷயங்களில் அனுகூலமான பலன்களை அடையும் வாய்ப்புண்டு. தொழில்ரீதியாக நல்ல லாபத்தை அடையும் யோகமும், தொழில் அபிவிருத்திக்காக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கக்கூடிய சூழலும் உண்டாகும். அதிக அலைச்சல் இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை அடைவீர்கள். உத்தியோக ரீதியாக சிறப்பாக செயல்பட்டு நல்லபெயர் எடுக்கமுடியும். வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும் அதற்கான சன்மானங்கள் கிடைக் கும். வேலை நிமித்தமாக தேவையற்ற பயணங் கள் ஏற்படலாம். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். முருகப் பெருமானை தரிசிப்பது, சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது நன்மை தரும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிப்பது, நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. குரு வக்ரகதியில் இருப்பதால் பொருளாதார நிலை மிகச் சிறப் பாக இருக்கும். சூரியன், சுக்கிரன், புதன், கேதுவுடன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எந்த இடர்ப்பாடுகளையும் எதிர்கொண்டு மிகச் சிறப்பான பலன்களை அடையும் யோகமுண்டு. நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கடந்தகாலங்களில் இருந்த கஷ்டங்கள் விலகி நல்ல லாபத்தை அடையமுடியும். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகமுண்டாகும். மருத்துவ சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் குறையும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படுமளவுக்கு நல்ல லாபத்தை அடைவீர்கள். சட்டரீதியாக நிலவிய நெருக்கடி கள் எல்லாம் தற்போது குறையும். வேலைக்குச் செல்பவர்களுக்கு கடந்தகால பணி நெருக்கடி கள் குறைந்து தற்போது வேலையில் நிம்மதி யுடன் பணிபுரிய முடியும். உடன் வேலை செய்பவர்கள் உறுதுணையாக இருப்பதால் கடினமான பணிகளைக்கூட எளிதில் செய்து முடிக்கமுடியும். ஒரு பெரிய மனிதரின் ஆதரவு கிடைப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வுகள் நடக்கும். வரும் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத தனவரவுகள் ஏற்பட்டு அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்புகள் அமையும். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் குங்குமத் தால் அர்ச்சனை செய்வது, மாணவர்களுக்கு கல்விக்காக உதவி செய்வது நன்மை தரும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்மச் சனி நடப்பதும், 4-ல் ராகு சஞ்சரிப்பதும் தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்தும் அமைப்பென்றாலும், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கக்கூடிய பலமுண்டாகும். குருபகவான் வக்ரகதியில் இருப்பதால் உங்களின் பொருளாதார நெருக்கடிகள் சற்று குறைந்து சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைத்து பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். உற்றார்- உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருந்து உங்களுக்குள்ள நெருக்கடிகள் படிப் படியாகக் குறையும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைத்து போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலை யாட்களின் உதவியினை எதிர்பார்க்காமல் சில பணிகளை நீங்களே நேரடியாக செய்தால் வீண் பிரச்சினைகளைத் தவிர்த்து ஆதாயங்களை அடையமுடியும். அரசு அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் உங்களுடைய தொழிலை விரிவுபடுத்தும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை இருந்தாலும் அதற்கான அனுகூலங் கள் கிடைக்கும். ஒருசிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய யோகமும், சிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணையும் வாய்ப்பும் உண்டாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, சனி ஆகியவை அதிகப்படியான அனுகூலங்களைத் தரக்கூடிய நாட்களாக இருக்கும். ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, இல்லாதவர்களுக்கு முடிந்த உதவி செய்வது, சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் ராகு சஞ்சரிப்பதால் அனைத்து விதமான செயல்களுக்கும் முழுமையான அனுகூலங்களைப் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சியில் வெற்றியும் அதன்மூலம் லாபகரமான பலன்களை அடையும் யோகமுண்டு. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தாராள தனவரவுகள் ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாவதுடன் பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். 9-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் ஏற்படும். வெளியூர், வெளிநாடுகள்மூலமாக மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி கிடைக்கும். உற்றார்- உறவினர் கள், பங்காளி வகையில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து நிம்மதி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து படிப்படியான வளர்ச்சியை அடைவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். பணப்பரிமாற்ற விஷயங்களில் சாமர்த்தியமாக செயல்பட்டு நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் ஏற்படும். நீண்டநாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வுகளை அடையக்கூடிய வாய்ப்பு, சிலருக்கு கடந்தகால சம்பள பாக்கிகள் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்பு அமையும். நீங்கள் வாங்கிய கடன்களைத் தற்போது குறைத்துக் கொள்ளமுடியும். வரும் திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, சனி பகவானுக்கு எள்தீபமேற்றுவது, கந்தசஷ்டி கவசம் படிப்பது நன்று.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதாலும், ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் இருப்பதாலும் சகலவிதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். சிறப்பான பொருளாதார நிலை ஏற்பட்டு உங்களுக்குள்ள அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். இந்த வாரத்தில் உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 4-ல் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. அதிக அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். வாகனங்கள்மூலமாக வீண் செலவுகள் உண்டாகலாம். வயது மூத்தவர்களிடம் பேச்சைக் குறைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்குமென்றாலும் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகலாம். வேலையாட்கள் விசுவாசமாக செயல்பட்டாலும் சில சட்டச் சிக்கல்கள் காரணமாக மன அமைதி குறையும். தொழில்தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமலிருப்பது நல்லது. அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் சிந்தித்து செயல்பட்டால் நல்ல லாபத்தைப் பெறமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையால் உங்களது ஓய்வுநேரம் குறையும். சிலருக்கு ஏற்படும் உடல் உபாதைகள் காரணமாக பணியில் கவனம் செலுத்தமுடியாத ஒரு நெருக்கடியான நிலை உண்டாகலாம். முடிந்தவரை பிறர் விஷயத்தில் தலையிடாமல் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி ஆகியவை அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய நாட்களாக இருக்கும். சூரிய நமஸ்காரம் செய்வது, மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.