agathiyar

கணவன்- மனைவி இருவர், நாடியில் பலன்கேட்க வந்திருந்தனர். அவர்களை அமரவைத்து, "என்ன விஷயமாகப் பலன்கேட்க வந்துள்ளீர்கள்' என்றேன்.

அந்த அம்மாள், ""எனது மகளுக்கு 32 வயதாகின்றது. திருமணம் தடையாகிக் கொண்டே போகின்றது. சில ஜோதிடர்கள், அவள் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு இவளின் திருமண சம்பந்தமான கிரகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் இவளுக்கு இரண்டாம் தாரமாக ஒருவனுக்கு திருமணம் முடிந்து வாழ்க்கை அமையுமென்று கூறுகின்றார்கள். இன்னும் சில ஜோதிடர்கள், இவளைவிட அதிகமான வயது கொண்டவன்தான் மாப்பிள்ளையாக அமைவான். "கிழவனை மாலையிடுவாள்' என்று கூறுகின்றார்கள்.

Advertisment

ஜோதிடர்கள் கூறுவதுபோன்று, இரண்டாம் தாரமாகத்தான் திருமணம் நடைபெறுமா? 32 வயதுவரை, எவ்வளவோ, மாப்பிள் ளைகளைப் பார்த்தும், ஒரு வரனும் சரியாக அமையவில்லை. என் மகளின் திருமணம் எப்படி நடக்குமென்பதை அறிந்து கொள்ளவே அகத்தியரை நாடி வந்துள் ளோம்'' என்றார்.

ஜீவநாடி ஓலைக்கட்டைப் பிரித்துப் படிக்கத் தொடங்கி னேன். ஓலையில் அகத்தியர், எழுத்து வடிவில் தோன்றி, பலன்கூறத் தொடங்கினார்.

இவள், மகள் இரண்டாம் தாரமாகத்தான் வாழ்க்கைப் படுவாள் என்று கூறி ஜோதிடர்கள் அதிகமாக இவர்களைப் பயமுறுத்தி உள்ளார்கள். கலிகாலத்தில் ஜோதிடத்தில், பல தவறான பலன்களும், பொய்யான கருத்துகளும், பழமொழிகளும், ஜோதிடர்கள், அவரவர் மனதில் தோன்றிதையெல்லாம், பலனாகவும், பரிகாரங்கள் என்று கூறிவிடுகின்றார்கள்.

Advertisment

இந்த தாய், ஜோதிடர்கள் கூறியதை நினைத்துப் பயப்படவேண்டாம். இவள் மகள் இரண்டாம் தாரமாக ஒருவனுக்கு மனைவியாக மணமுடித்து செல்லமாட்டாள்.

இந்தப் பெண்ணைப் பற்றியும், தாய், தந்தை வம்ச நிகழ்வுகள் சிலவற்றைப் பற்றியும் கூறுகின்றேன். அவை சரியாக இருந்தால், இவள் மகள் முதல் தாரமாக, ஒருவனை திருமணம்செய்து வாழ்வாள் என்று அறிந்துகொள்ளட்டும்.

இவள் மகள் வீட்டிற்கு மூத்த பெண் ணாக இருப்பாள். இவளுக்கு அண்ணன் இருக்கக்கூடாது. இந்தப் பெண்ணிற்கு மூத்த சகோதரன் பிறந்திருந்தால் அவன் இறந்துவிடுவான்.

அண்ணன் பிறக்க வில்லை யென்றால், இந்த தாய்க்கு இவள் பிறப்பிற்கு முன்பு, ஒரு கரு கூடி, கர்ப்பம் கலைந்திருக்கும். அது ஆண் கரு.

இவள் தந்தைக்கு, முன்னோர் சம்பாதித்து வைத்த பூர்வீக சொத்துகளில், இவன் குடும்பத்தார், முறையாக பங்கு சொத்தை பிரித்துக்கொடுத்து இருக்க மாட்டார்கள். இவள் தந்தை, தன் உழைப்பிலேயே சம்பாதித்து, வீடு, வாகனம் சொத்துகளை வாங்கி இருப்பான்.

இந்தப் பெண்ணின் தந்தை வம்சத்தில், பாட்டனார் காலத்தில், அக்காள், தங்கை இருவரும் ஒருவனுக்கோ அல்லது ஒரே குடும்பத்திலே மணமுடித்து வாழ்க்கைப்பட்டு இருப்பார்கள்.

இவள் தாய் பிறந்த வீட்டில், திருமணமாகாமல், ஒரு ஆணோ அல்லது பெண்ணோ, தாய்மாமன் வீட்டில் துர்மரணம் அடைந்திருப்பார்கள்.

இவள் தாய் வம்சத்தில், அவள் பிறந்த வீட்டில், மனநோயால் பாதிக்கப்பட்டு ஒரு பெண் இறந்து போய் இருப்பாள்.

அவர்கள் வசிக்கும் வீட்டிற்கு, வடக்கு திசையில், காலி இடமோ, மனை (பிளாட்) இருக்கும். அல்லது பழைய வீடோ, பாழடைந்த யாரும் குடி இல்லாத வீடு இருக்கும்.

இந்த மகள் கல்வியில் தடை ஏற்பட்டு, சிறிது காலம் சென்று, மறுபடியும் படிப்பினை தொடர்ந்து பட்டம் பெற்றிருப்பாள்.

இந்தப் பெண்ணின் தந்தைவழி குலதெய்வம் எது? என்பது இவர்களுக்கு இன்னும் தெரியாது. குலதெய்வத்திற்கு பூஜை வழிபாடு செய்தால், இந்தப் பெண்ணிற்கு திருமணம் நடக்கும். யாரோ ஒரு ஜோதிடர் கூறியதால், இப்போது இவர்கள் தங்கள் குலதெய்வத்தை தேடிக்கொண்டு இருக்கின்றார்கள். தங்கள் குலதெய்வம் எது? என்று அகத்தியனிடம், கேட்டு அறிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணமும், இப்போது ஒரு கேள்வியாக, அவர்கள் மனதில் உள்ளது. நான் கூறிய அனைத்தும் அவர்கள் வாழ்வில் நடந்துள்ளதா? என்று கேள்.

அம்மா, அகத்தியர் கூறிய நிகழ்வுகள், உங்கள் குடும்பத்தில் நடந்துள்ளதா? தெரிந்தால் கூறுங்கள்.

இவள்தான் மூத்த மகள். இவள் பிறப்பதற்குமுன்பு, எனக்கு கர்ப்பம் கூடி, நான்கு மாதத்தில், கரு கலைந்தது.

என் கணவருக்கு, அவரின் பூர்வீக குடும்ப பொது சொத்துகளில், அவர் குடும்பத்தார் நியாயமாக பாக சொத்தினை தரவில்லை. எங்கள் உழைப்பு, சம்பாதியத்திலேயே வாழ்ந்துவருகின்றோம். எங்கள் வீட்டிற்கு வடக்குப் பக்கம் காலியிடம், பொது விளையாட்டு மைதானம் உள்ளது. எனக்கு அடுத்து பிறந்த ஒரு தம்பி, பாம்பு கடித்து துர்மரணம் அடைந்தான். என் கணவரின் பாட்டனார் முதல் மனைவிக்கு குழந்தையில்லையென்று, முதல் மனைவியின் தங்கையை இரண்டாம் தாரமாக மணந்துகொண்டார். இரண்டாம் தாரத்திற்குப் பிறந்தவர்தான், என் கணவரின் தந்தை, என் மாமனார். நான் பிறந்த வம்சத்தில், ஒரு பெண் மனநோயால் பாதிக்கப்பட்டு, இறந்துபோனதாக பெரியவர்கள் கூறியுள்ளார்கள்.

அகத்தியர் கூறியது அனைத்தும் உண்மைதான். அனைத்தையும் கூறிய அகத்தியர், எங்கள் குலதெய்வத்தையும் கூறவேண்டும் என்றார்.

இந்த தாயிடம் குலதெய்வ பூஜைசெய்தால் மகளுக்கு திருமணம் நடக்குமென்று கூறிய ஜோதிடனிடமே இவள் கேட்டு தெரிந்துகொண்டு இருக்கலாமே. வேத ஜோதிடமுறையில் பலன்கூறும் ஜோதிடர்கள், தங்கள் பிரச்சினைதீர வழிகேட்டு வருபவர்களுக்கு சரியான வழியைக் கூறாமல், ஏதாவது ஒரு தெய்வத்தை வணங்கி, பரிகாரம் செய் என்று கூறி அனுப்பிவிடுவார்கள். இவள் குலதெய்வத்தை கும்பிட்டாலும், மகள் திருமணம் நடக்காது. இவள் எந்த தெய்வத்தையும் தேடி அலைந்து கொண்டு இருக்கவேண்டாம்.

அகத்தியர் என் மகளுக்கு வரனாக வரக்கூடியவனைப் பற்றி, ஏதாவது அடையாளம், கூறி, அவளுக்கு திருமணம் எப்படி? செய்யவேண்டும் என்ற வழிமுறையையும் கூறி எங்கள் குழப்பத்தை போக்கவேண்டும்.

இந்த தாயின் மூத்த மகளுக்கு முதல் தார கணவனே அமைவான். ஆனால் மூத்த மகள் திருமணத்திற்குமுன்பு இளைய மகளுக்கு திருமணம் செய்துவிடவேண்டும். இளைய மகளுக்கு திருமணம் முடிந்தபின்புதான், மூத்த மகளுக்கு திருமணம் நடக்கும். இது மாற்றமுடியாத விதி.

இவள் மூத்த மகளுக்கு கணவனாக அமையப் போகின்றவன், இவள் மகளைவிட, இவர்கள் குடும்பத்தைவிட ஏதாவது ஒருவகையில் படிப்பு, செல்வம், வசதி, அந்தஸ்து என ஏதாவது ஒருவகையில் குறைந்தவனாக இருப்பான். அவன் கல்வி, வங்கி, வருவாய்துறை, செய்தி தொடர்புத்துறை இதில் ஏதாவது ஒன்றில் உத்தியோகம் செய்வான்.

கணவனின் வசிக்கும் இடம் வடக்கு சார்ந்த திசையில், சுமார் 20 மைல் தொலைவிற்குள் இருக்கும். அவன் வீடு வடக்கு, தெற்கு வீதியில் கிழக்கு, மேற்கு வாசற்படி உள்ள வீடு என்று கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.

அகத்தியர் கூறியதைக் கேட்டவர்கள், எங்கள் மகளைப் பற்றி குழப்பமும், கவலையும் தீர்ந்தது. பிரச்சினைக்கு தீர்வும் கிடைத்தது என்று கூறி, அகத்தியரை வணங்கிவிட்டு, விடைபெற்றுச் சென்றார்கள்.

செல்: 99441 13267