Skip to main content

ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் தனுஷ் ரோல் என்ன? - பார்த்திபன் பதில்

Published on 30/09/2022 | Edited on 30/09/2022

 

which role is played by dhanush oin aayirathil oruvan 2  paarthiban answer in ponniyin selvan  show

 

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் இன்று பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே பார்த்திபன் இப்படத்தை தஞ்சாவூரில் உள்ள ஒரு திரையரங்கிற்கு சென்று பார்த்துள்ளார். பிறகு தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று தரிசனம் மேற்கொண்டார். 

 

பின்பு செய்தியாளர்களை சந்தித்த பார்த்திபன், "இந்த தஞ்சை மண்ணுக்கு என்னுடைய முதல் மரியாதையான வணக்கம். ராஜ ராஜ சோழன் பெருமையை சொல்லி மாளாது. கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்களுக்கு மேலாக சொல்லிவருகிறோம். நான் இப்பவும் ஆச்சர்யப்படுற விசயம், இந்த ராஜா செய்த சாதனை இன்னும் எத்தனை ஆயிரம் வருடங்கள் ஆனாலும் அப்படியே நிலைச்சு நிற்கும். நான் உள்ளுக்குள்ள ஒரு ராஜாதான். நான் மட்டும் இல்ல நாம் எல்லாரும் ஒரு ராஜா தான். இந்த வாழ்க்கை ஒரு ரசனைக்குரியதாக இருக்கணும். இந்த பெரிய கோவிலை பார்க்கும் போது அவர்கள் எவ்வளவு ரசனையோடு வாழ்ந்திருப்பார்கள் என்று உணரமுடிகிறது. அப்படி ஒரு ரசனையான படம் தான் இந்த பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வனில் ரொம்ப பாராட்டக்கூடியவர் முதலில் கல்கி. 

 

ரொம்ப முன்னாடியே கற்பனையா ஒரு கதை எழுதி அந்த கதையை, நாம் எழுவது வருஷம் கழித்து படமாக்கி பார்ப்பது மிக பெருமையான விசயம். அதுல என்னுடைய பெருமை, இந்த தஞ்சாவூர் மண்ணில் வந்து நான் படம் பார்க்கணும்னு ஆசைப்பட்டது. படக்குழுவினர் அனைவரும் ஒவ்வொரு வேளையில் பிசியாக இருக்கிறார்கள். நான் உலகத்தை சுற்றி வருவதற்கு பதில் தஞ்சாவூர் மண்ணில் இந்த படத்தை பார்த்துவிட்டு, உலகத்தையே சுத்துன பெருமை என்ன இருக்கிறதோ அந்த பெருமை இந்த படத்தில் எனக்கு கிடைத்திருக்கு. போன ஜென்மத்தில் நான் சோழனா பிறந்திருப்பேனா என்று தெரியவில்லை. தொடர்ந்து இது போன்ற வாய்ப்புகள் அமைந்து வருகிறது" என பேசினார்.

 

மேலும், "ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் மறுபடியும் வரும். ஆனால் எனக்கு பதில் தனுஷ் அந்த ரோலில் நடிப்பார். முதல் பாகத்திலே தனுஷ் நடிப்பதாக இருந்தது. அதற்கு பதில் தான் நான் நடித்தேன். இப்ப இரண்டாம் பாகத்தில் நான் நடிப்பதற்கு பதில் தனுஷ் நடிப்பார். தனுஷ் நடித்தால் அது சிறப்பாகவே இருக்கும்." என கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனுஷ் படத்திற்கு எழுந்த சிக்கல்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
dhanush kubera title issue

தனுஷ் தற்போது தனது 50 ஆவது படமான ராயன் படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார். மேலும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். ஹீரோவாக சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா, அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் இளையராஜா பயோ-பிக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார். 

இதில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் படம் தனுஷின் 51ஆவது படமாக உருவாகிறது. படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி பின்பு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பூஜை நடைபெற்றது. இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.  

இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் பூஜையுடன் தொடங்கியது. முதற்கட்டமாக திருப்பதியில் படப்பிடிப்பு நடந்தபோது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதால் பரபரப்பானது. மேலும் அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, படப்பிடிப்பிற்கு தடை விதிக்கக் கோரி பாஜகவினர் திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து படப்பிடிப்பிற்காக வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வேறொரு இடத்தில் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பும் மும்முரமாக நடந்து வருகிறது. 

இதனிடையே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் கடந்த மாதம் வெளியானது. குபேரா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த படக்குழு, டைட்டில் லுக் வீடியோவையும் வெளியிட்டது. போஸ்டரில் தனுஷ் முடி கலைந்து, தாடியுடன் அழுக்கான வித்தியாசமான தோற்றத்தில் இடம்பெற்றிருந்தார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர் கர்மிகோண்டா நரேந்திரா என்பவர், தெலுங்கானா ஃபிலிம் சேம்பரில் ஏற்கனவே குபேரா என்ற தலைப்பை பதிவு செய்திருப்பதாகவும், அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தான் தலைப்பை பதிவு செய்த போதிலும் தனுஷ் நடிக்கும் படத்திற்கு தனது படத்தின் பெயரை சேகர் கம்முலா பயன்படுத்தியதாகவும், இது குறித்து தெலுங்கானா பிலிம் சேம்பரிடம் பேச முயற்சித்தும் சரியாக பதில் வரவில்லை என்றும் குற்றம் சாட்டுவதாக கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர் சட்ட நடவடிக்கை மூலம் பிரச்சினையை தீர்க்க முயல்வதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Next Story

தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
dhanush aishwarya divorce case update

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து 18 நவம்பர் 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர். ஆனால் கடந்த 2022 ஜனவரி 17 அன்று இருவரும் பிரிய முடிவெடுத்துள்ளதாக அறிவித்திருந்தனர். இது திரையுலகில் பரபரப்பையும்,  ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.  

இதையடுத்து இருவரும் அறிவித்தது போல், தனித்தனியே வாழ்ந்து வந்தனர். மேலும் அவரவர் திரை பயணங்களில் கவனம் செலுத்தி வந்தனர். இவர்களது இரு மகன்களும் தனுஷ் பட விழா மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பட விழாவிலும் கலந்து கொண்டனர்.  

இந்தச் சூழலில் கடந்த 8ஆம் தேதி, இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் 2004ல் நடைபெற்ற திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த மனு சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.சுபா தேவி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரத்த அவர், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் அக்டோபர் 7ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தார்.