Skip to main content

"இதனை மறக்க முடியாது" - மகனை நினைத்து உருகும் விஷ்ணு விஷால்

Published on 02/09/2022 | Edited on 02/09/2022

 

vishnu vishal aaryan movie first look and motion poster released

 

தமிழ் சினிமாவில் 'இன்று நேற்று நாளை', 'ராட்சசன்' என வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஷ்ணு விஷால். அந்த வகையில் முரளி கார்த்திக் இயக்கும் 'மோகன்தாஸ்' படத்தில் நடித்துமுடித்துள்ள விஷ்ணு விஷால் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா தயாரிக்கும் 'கட்டா குஸ்தி' படத்தில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியானது. 

 

இந்நிலையில் விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி 'ஆர்யன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கிறார். பிரவீன்.கே இயக்கும் இந்த படத்தில் செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. கிரைம் திரில்லராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. 
 

இது தொடர்பாக விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், "இப்படத்தின் தலைப்பின் மூலமாக என் படத்தில் என் மகன் இடம்பெற்றிருக்கிறான். இது எனக்கு மறக்க முடியாத தலைப்பாக இருக்கும்"என குறிப்பிட்டுள்ளார். விஷ்ணு விஷால் கடந்த 2010-ஆம் ஆண்டு ரஜினி நட்ராஜ் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பின்பு சில கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இவர்களுக்கு ஆர்யன் என ஒரு பையன் இருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து கடந்த ஆண்டு ஜுவாலா குட்டா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தற்போது அவருடன் வாழ்ந்து வருகிறார் விஷ்ணு விஷால். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“செல்வராகவனை இயக்குவேன் என நினைத்ததில்லை” - தனுஷ்

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
selvaraghavan look from dhanush 50 raayan movie

கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தற்போது தனது 50 ஆவது படப் பணிகளை கவனித்து வருகிறார் தனுஷ். அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். ராயன் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தாண்டிற்குள் இப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, அபர்ணா பாலமுரளி, செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் வட சென்னையை மையமாக வைத்து ஒரு கேங்ஸ்டர் ஜானரில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்பட்டது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு செல்வராகவன் இப்படத்தில் நடித்திருப்பதை எக்ஸ் தளம் வாயிலாக அவர் உறுதிப்படுத்தியிருந்தார். மேலும் இப்படம் தனுஷின் கனவு படம் என குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளதைப் படக்குழு அவரது கதாபாத்திர லுக் போஸ்டரை வெளியிட்டு உறுதி செய்தது. இந்த நிலையில் தற்போது செல்வராகவன் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. புது லுக்கில் செல்வராகவன் இடம்பெற்றிருக்கிறார். இதுவரையில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் பல படங்கள் நடித்த நிலையில் இப்படத்தில் செல்வராகவனை தனுஷ் இயக்கியுள்ளார். செல்வராகவனை இயக்குவது குறித்து தனுஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “உங்களை ஒரு நாள் இயக்குவேன் என்று நினைத்ததில்லை சார்” என குறிப்பிட்டுள்ளார்.  

Next Story

ராயன் - விளக்கம் கொடுத்து சஸ்பென்ஸ் உடைத்த செல்வராகவன்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
dhanush raayan update by selvaraghavan

கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தற்போது தனது 50 ஆவது படப் பணிகளை கவனித்து வருகிறார் தனுஷ். அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். ராயன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தாண்டிற்குள் இப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களாக, அஜித்தை வைத்து செல்வராகவன் இயக்கவிருந்த காசிமேடு பட கதையைத் தான் தனுஷ், தற்போது ராயன் என்ற தலைப்பில் சிறு மாற்றங்கள் செய்து இயக்கி வருவதாக செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. இந்த செய்திக்கு விளக்கம் அளிக்கும் வகையில் செல்வராகவன் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “நண்பர்களே, ராயன் படத்திற்கு நான் ஸ்கிரிப்ட் எழுதியதாக செய்திகள் வந்துள்ளன. ராயன் பட ஸ்கிரிப்ட் அல்லது ஸ்கிரிப்ட் பணிகளிலும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். ராயன் படம் தனுஷின் கனவு ஸ்கிரிப்ட், அதனால் அவரது படமாக எடுத்துள்ளார். இந்த படத்தில் நான் நடிகனாக மட்டுமே இருந்துள்ளேன்” என்றார். 

முன்னதாக இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, அபர்ணா பாலமுரளி, செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த சூழலில் செல்வராகவன் இப்படத்தில் நடிப்பதை சொல்லி உறுதிப்படுத்தியுள்ளார்.