Skip to main content

உ.பி மாநிலத்திற்கு  வரமாட்டேன் என்றாரா ஹிருத்திக் ரோஷன்? 

Published on 04/07/2022 | Edited on 04/07/2022

 

vikram vedha team explained hrithik roshan shooting spot rumor

 

புஷ்கர், காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான படம் 'விக்ரம் வேதா'. இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க, சசிகாந்த் தயாரித்திருந்தார். தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தமிழில் இயக்கிய புஷ்கர் மற்றும் காயத்ரியே இந்தியிலும் இயக்குகின்றனர். 

 

‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்கில் வேதாவாக ஹ்ரித்திக் ரோஷனும், விக்ரமாக  சயிஃப் அலிகானும் நடித்துள்ளனர். சமீபத்தில் படப்பிடிப்பு பணிகள் அனைத்தையும் முடித்த படக்குழு செப்டம்பர் 30 ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி படப்பிடிப்பை உத்தரப்பிரதேசத்தில் நடத்த திட்டமிட்டதாகவும், ஆனால் ஹ்ரித்திக் ரோஷன் உத்தரப்பிரதேசத்திற்கு வர மறுத்ததாகவும் தகவல் வெளியாகியது.  இதனால் துபாயில் செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தியதால் படத்தின் பட்ஜெட் அதிகமானதாக செய்திகள் வெளியானது.

 

இந்நிலையில் இதனை மறுத்துள்ள படக்குழு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், "‘விக்ரம் வேதா’ படப்பிடிப்பு தொடர்பாக பரவிய செய்திகள் போலியானவை. இப்படம்  இந்தியாவில் லக்னோ உள்ளிட்ட பல இடங்களில் தான் அதிகளவில் படமாக்கப்பட்டுள்ளது. விக்ரம் வேதா படத்தின் ஒரு பகுதி மட்டும், கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் அமீரகத்தில் படமாக்கப்பட்டது. ஏனென்றால் அங்கு தான் பயோ பபுளுடன் பணியாட்களை வைத்து படப்பிடிப்பு நடத்தும் சூழலுக்கு அனுமதி கிடைத்து. அத்துடன் படக்குழுவினரின் உடல் நலம் கருதியும் அங்கு படப்பிடிப்பு நடத்தப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது


 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் துவங்கும் ஹிரித்திக் ரோஷனின் வார் - 2

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
hrithik roshan war 2 update

யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான படம் வார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது. 

இப்படம் குறித்து சமீபத்திய நேர்காணலில் பேசிய ஹிரித்திக் ரோஷன், “வார் 2 படம் விரைவில் துவங்க இருக்கிறது. படப்பிடிப்பு ஏற்கனவே திட்டமிட்டதை விட முன்கூட்டியே துவங்க உள்ளது” என்று தெரிவித்தார்.  இப்படத்தின் ஜுனியர் என்.டி.ஆர். இணைவது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 23 ஆம் தேதி துவங்குகிறது. தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. 

இதற்காக ஹிரித்திக் ரோஷன் கடந்த சில வாரங்களாக பயிற்சி எடுத்து வருகிறார். இந்த படம் குறித்து சமீபத்தில் பேசிய ஹிரித்திக் ரோஷன், "கபீர் குறிப்பிடத்தக்க தடத்தை பதித்துள்ளான். இதனால் மீண்டும் கபீராக மாறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் கபீரை இந்த முறை வித்தியாசமான தோற்றத்தில் வெளிப்படுத்த எனக்கு சவாலாக இருக்கும். அவனின் மற்றொரு கோணம் வித்தியாசமாக இருக்க போகிறது," என்று தெரிவித்தார். இந்த படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Next Story

முத்தக் காட்சி - படக்குழுவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Fighter gets legal notice from IAF officer over kissing scene

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன், தீபிகா படுகோன், அனில் கபூர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் 25 ஆம் தேதி வெளியான படம் ‘ஃபைட்டர்’. வியாகாம் 18 ஸ்டுடியோஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு விஷால் மற்றும் ஷேகர் இருவரும் இசையமைத்துள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம், மோசமான விமர்சனங்களையே பெற்றது. வசூல் ரீதியாகவும் பெரிதாக வரவேற்பு பெறவில்லை. 

இதையடுத்து படத்தின் மீதான விமர்சனம் குறித்துப் பேசிய இயக்குநர் சித்தார்த் ஆனந்த், “90 சதவீத இந்தியர்கள் விமானத்தில் பயணித்ததே கிடையாது. பலர் விமான நிலையத்திற்குக் கூட போனதில்லை. அப்படியிருக்கும் சூழலில் இப்படத்தில் காட்டப்பட்டுள்ள வான்வெளி பயணம் அவர்களுக்கு எப்படி புரியும்” என்றிருந்தார். இது சர்சைக்குள்ளானது.

இந்த நிலையில் இப்படத்தில் விமானப்படையை அவமதித்து விட்டதாக அசாமைச் சேர்ந்த விமானப் படை அதிகாரி சவுமியா தீப் தாஸ் படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். படத்தின் இறுதியில் விமானப்படை சீருடன் ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோன் இருவரும் முத்தக் காட்சியில் நடித்து அவமதித்து விட்டதாக கூறியுள்ளார். மேலும் இதற்கு விளக்கம் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

இதேபோல் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே நடித்த 'பதான்' படத்தில், 'பேஷரம் ரங்' பாடலில் காவி நிற உடையை மிகவும் கவர்ச்சியான முறையில் தீபிகா படுகோனே அணிந்திருப்பதாக இந்துத்துவா ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். இது பெரும் சர்ச்சையானது. இதையடுத்து இப்படம் தற்போது சர்ச்சையாகியுள்ளது.