Skip to main content

''கடவுளே! அவர்கள் நம்பமுடியாதவர்கள்'' - பிரசன்னா கேள்விக்குப் பதிலளித்த விஜயலக்ஷ்மி!

Published on 03/06/2020 | Edited on 03/06/2020

 

ngcgc


உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் கோடைக்காலம் காரணமாகவும், கரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் வீட்டிலேயே அடங்கியிருப்பதால் மின்சாரப் பயன்பாடு அதிகரித்துள்ளது. 
 


இதற்கிடையே கரோனாவால் திரையுலகமும் முடங்கியுள்ளதால் திரையுலகினர் பலரும் வீட்டிலேயே இருந்துகொண்டு சமூகவலைத்தளங்களில் மற்ற திரையுலகினருடன் உரையாடுவது, பொதுமக்களுக்கு வீடியோக்கள், நேர்காணல் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலம் கரோனா விழிப்புணர்வு என பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில் நேற்று நடிகர் பிரசன்னா, ''இந்தக் கோவிட் லாக்டவுனுக்கு மத்தியில் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு கொள்ளையடிக்கும் செயலில் உற்சாகமாக ஈடுபட்டிருப்பதாக உங்களில் எத்தனை பேர் நினைக்கிறீர்கள்..?'' என மின்சார வாரியம் குறித்து ட்விட்டரில் கேள்வி எழுப்பினார். 

இதற்குப் பலரும் பதில் அளித்து வரும் நிலையில் நடிகை விஜயலக்ஷ்மி இதற்குப் பதில் ட்வீட் செய்துள்ளார். அதில்.. ''கடவுளே! அவர்கள் நம்பமுடியாதவர்கள். அவர்கள் கடந்த இரண்டு தடவை எங்கள் பில் தொகையை இரட்டிப்பாக்கி, தற்போது அதைச் செலுத்தச் சொன்னார்கள். எங்களுக்கு வேறு வழியில்லை. ஏனெனில் அது தமிழ்நாடு மின்சார வாரியம். அங்குப் பதில் சொல்லக் கூட யாரும் இல்லை'' எனப் பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முனிஷ்காந்த், விஜயலட்சுமி நடிப்பில் உருவாகும் 'மிடில் கிளாஸ்'

Published on 24/06/2022 | Edited on 24/06/2022

 

munishkanth and vijay lakshmi starring middle class movie

 

Axess Film Factory சார்பாக டில்லிபாபு தயாரிப்பில் இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் 'மிடில் கிளாஸ்' என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் காமெடி நடிகர் முனிஷ்காந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, விஜயலட்சுமி அகத்தியன், ராதா ரவி, வேல ராமமூர்த்தி, உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். 

 

ஒரு நடுத்தர குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி, அதில் காமெடி கலந்த ட்ராமா படமாக இப்படத்தை இயக்குநர் உருவாக்க உள்ளார்.  இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் போடப்பட்ட நிலையில் படப்பிடிப்பு வரும் 27 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. முழு வீச்சில் படப்பிடிப்பை நடத்தி முடித்து விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

 

 

Next Story

இந்த ஆட்டம் தேவையா? ரசிகரின் கேள்விக்கு கடுப்பான பிரபல நடிகை

Published on 19/05/2022 | Edited on 19/05/2022

 

vijayalakshmi reply for fan trolled

 

சென்னை 28 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான விஜயலட்சுமி அடுத்ததாக அஞ்சாதே, கற்றது களவு, கசட தபற உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிக்களிடையே பிரபலமானார். கடந்த 2015 ஆம் ஆண்டு பெரோஸ் முகமது என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் விஜயலட்சுமி தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்.

 

அந்தவகையில் நடிகை விஜயலட்சுமி தான் நடனமாடிய வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதை பார்த்த ஒரு பெண், அம்மாவாக இருக்கும் உங்களுக்கு இந்த ஆட்டம் தேவையா? எனக் கேள்வி எழுப்பிருந்தார். இதை பார்த்து கடுப்பான விஜயலட்சுமி, "அம்மா ஆகிவிட்டதால் மூலையில் உட்கார்ந்து அழ வேண்டுமா? வாழ்க்கை முடிந்து விட்டது என்று குடும்பத்திற்காக தியாகி ஆக வேண்டுமா? நீங்கள் வேண்டுமானால் அப்படி இருந்துகொள்ளுங்கள். எனக்கு என்று ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதை நான் வாழ்வேன். நடனம் ஆடுவேன், விரும்பிய உடைகளை அணிவேன். உங்களை போன்றவர்களால்தான் தாயான பெண்கள் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். பொறாமையால் இது போன்று கமெண்ட்ஸ் செய்யாதீர்கள்" என பதிலடி கொடுத்துள்ளார்.