Skip to main content

‘உடன்பிறப்பே’ படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான புதிய தகவல்!

Published on 16/09/2021 | Edited on 16/09/2021

 

udanpirappe

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த ஜோதிகா, தற்போது பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டும் நடித்துவருகிறார். அந்த வகையில், ‘கத்துக்குட்டி’ பட இயக்குநரான இரா. சரவணன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘உடன்பிறப்பே’ படத்தில் தற்போது நடித்துள்ளார். சசிகுமார், சமுத்திரக்கனி, கலையரசன், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைக்க, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.

 

2டி நிறுவனம், அமேசான் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, இந்த மாதம்முதல் மாதம் ஒரு படம் என அடுத்த நான்கு மாதங்களுக்கு மொத்தம் 4 படங்கள் வெளியாகவுள்ளன. இதில், ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘உடன்பிறப்பே’ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளதாக அமேசான் நிறுவனம் முன்னரே அறிவித்திருந்தது. இந்த நிலையில், ‘உடன்பிறப்பே’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு அக்டோபர் மாதம் 13ஆம் தேதி ‘உடன்பிறப்பே’ திரைப்படம் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.    

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என் துணையே, என் பலமே...” - சூர்யா பெருமிதம்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
suriya wishes on jyotika Shaitaan movie release

தமிழை தாண்டி மற்ற மொழி படங்களில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார் ஜோதிகா. அந்த வகையில் மலையாளத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக காதல் - தி கோர் படத்தில் நடித்திருந்தார். கடந்த வருட நவம்பரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்தியில் 'ஸ்ரீ' என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆந்திராவைச் சேர்ந்த பார்வையற்ற பிரபல தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கையைத் தழுவி உருவாகிறது. மே 10ஆம் தேதி திரைக்கு வருகிறது. 

இதனிடையே விகாஸ் பால் இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடித்துள்ள சைத்தான் படத்தில் நடித்துள்ளார். இதில் அஜய் தேவ்கன், மாதவன் ஆகியோரோடு இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்துள்ளார். பனோரமா ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படம் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. நேற்று நடந்த இப்பட ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் ஜோதிகாவுடன் கலந்து கொண்டார். இப்படம் மகளிர் தினமான இன்று வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில் ஜோதிகாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் சூர்யா. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “என்னவளே... என் துணையே, என் பலமே. சைத்தான் படம் மூலம் மீண்டும் உன்னுடைய புதிய பயணத்தை தொடங்குகிறாய். நீ செய்யும் அனைத்திலும் நான் பெருமை கொள்கிறேன். நிறைய அன்பும் மரியாதையும்” என குறிப்பிட்டுள்ளார். இந்தியில் ஜோதிகா நடிப்பில் 'டோலி சஜா கே ரக்கீனா' மற்றும் 'லிட்டில் ஜான்' ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. அதை தொடர்ந்து 23 வருடங்கள் கழித்து இந்தியில் சைத்தான் படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

தமிழ்நாடு அரசுத் திரைப்பட விருது விழா - பரிசு பெற்ற திரைப் பிரபலங்கள்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024

 

தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ்ப் பேரவை டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் விழாவிற்குத் தலைமையேற்று விருது அறிவித்தவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கினார். மேலும் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விருது அறிவிக்கப்பட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டு விருது, சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையைப் பெற்றுக் கொண்டனர்.