Skip to main content

ஊபரில் பாதுகாப்பற்ற பயண அனுபவம்... கொந்தளித்த ரஜினி பட நடிகை...

Published on 07/11/2019 | Edited on 07/11/2019

பாலா இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான படம் பரதேசி. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் ஈர்த்தவர் நடிகை ரித்விகா. இவர் இந்த படத்திற்கு பின் மெட்ராஸ், ஒருநாள் கூத்து, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
 

uber

 

 

இதுமட்டுமல்லாமல் தமிழ் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்குபெற்று, அந்த வருடத்தின் வின்னரானார். இந்நிலையில் நடிகை ரித்விகா ட்விட்டரில் ஊபர் டிரைவர் குறித்து புகார் வைத்திருக்கிறார். 

அதில், ஊபர் ஓட்டுநர் ஜெய்னுலாப்தீன் மிகவும் பாதுகாப்பற்ற முறையில் காரை ஓட்டுகிறார். காரின் கண்டிஷனும் மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவித்து காரின் நம்பர் முதற்கொண்டு ஊபர் நிறுவனம் இது சம்மந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.
 

miga miga avasaram


மேலும் இதற்கு ரிப்ளை செய்துள்ள ஊபர் நிறுவனம், அந்த ட்ரைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

இறுதிக்கட்ட பணியில் கருணாஸின் 'ஆதார்'

Published on 17/02/2022 | Edited on 17/02/2022

 

aadhar film update out now

 

அம்பாசமுத்திரம் அம்பானி, திருநாள் ஆகிய படங்களை இயக்கிய ராம்நாத் பழனி குமார் தற்போது கருணாஸ், அருண் பாண்டியன் நடிக்கும் ஆதார் படத்தை இயக்கி வருகிறார். ரித்விகா, இனியா உமா ரியாஸ்கான், திலீபன் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.  

 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது.  எளிய மனிதர்களின் வலியை பேசும் யதார்த்த படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர், ட்ரைலர் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

 

 

Next Story

"எந்த நடிகர்களும் அப்படி செய்ய முடியாது" - நடிகை ரித்விகா 

Published on 28/01/2022 | Edited on 28/01/2022
hfhdfjfj

 

இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இதில் ரித்விகா, ரீயா, பானுப்ரியா, கே.எஸ் ரவிக்குமார், நாசர், மணிகண்டன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன்  எழுத்தில் உருவான 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற  நாவலின் தலைப்பை இப்படத்திற்கும் படக்குழு வைத்துள்ளது. தற்போது ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிக்பாஸ் புகழ் நடிகை ரித்விகா தன்னுடைய கனவு கதாபாத்திரம் குறித்து நமக்கு அளித்த பிரத்தேக பேட்டியில் கூறியபோது....

 

"எந்த நடிகர்களும் அப்படி செய்ய முடியாது. பழம்பெரும் நடிகர்களை கேட்டால் கூட, நான் அந்த கதாபாத்திரத்தை செய்திருக்கலாம் என இப்போதும் ஏக்கத்தோடு சொல்லுவார்கள். அன்று நான் அந்த கதாபாத்திரத்தை செய்திருக்க வேண்டும், தேதி இல்லை, அந்த நடிகரோடு நடித்திருக்க வேண்டும் என பல்வேறு காரணங்களால் அவர்களால் நினைத்த பாத்திரத்தை செய்திருக்க முடியாது. இது எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும். இது எப்போதும் முழுமை அடையாது. எனக்கும் அப்படியே" என கூறியுள்ளார்.