Skip to main content

"அதுக்காகத் தான் எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்க...."- 'வாரிசு' படத் தயாரிப்பாளரைச் சாடிய கே.ராஜன்! 

Published on 23/11/2022 | Edited on 23/11/2022

 

"They have protested for that..." - K. Rajan hit the producer of 'Warisu'!

 

நடிகர் விஜய்யின் 'வாரிசு' திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர்கள் வெளியிட மாட்டோம் என்று முடிவு செய்துள்ளார்களே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நடிகரும், திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவரும், தயாரிப்பாளருமான கே.ராஜன், "விஜய் ஒரு பெரிய ஹீரோ; அஜித் ஒரு பெரிய ஹீரோ; இரண்டு பேரும் சமமான ஹீரோக்கள். அதுல விஜய்க்கு 300 தியேட்டரு, இங்க 800 தியேட்டர்லாம் கொடுக்க மாட்டாங்க. அது மனசாட்சி இல்லாத செயல். 50:50 கண்டிப்பா கிடைக்கும். இரண்டு பேரும் பவர்ஃபுல் ஹீரோஸ். அது தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும். 

 

அங்க ஆந்திராவுல, அந்த தெலுங்கு திரைப்பட தொழில காப்பாத்துற ஊர். அதனால அந்த ஹீரோ, அந்த முதலாளி, அவன் போட்ட முதல காப்பாத்தணும்னு அவன் நினைக்கிறான். விஜய் படம் இங்க ரிலீஸு. அங்கயும் ரிலீஸு. ஆனா பாலகிருஷ்ணா படம் இங்க ரிலீஸா? அப்ப அந்த முதலீட்டைக் காப்பாத்தணும்னு அந்த அசோசியேஷன் நினைக்குது. படம் வேணாம்னு சொல்லல. வாரிசு பட புரொடியூசர் தெலுங்கு; டைரக்டர் யாரு, தெலுங்கு டைரக்டர். தெலுங்கு படத்துல ஹீரோஸ் நல்லா ஒத்துழைப்பு தராங்க. அத பண்ணனும். தமிழ் ஹீரோவுக்கு சம்பளத்தை உயர்த்திக் கொடுத்து, 25 கோடியை கூட கொடுத்துட்டு என் தமிழ் சினிமா மார்க்கெட்ட கெடுத்தா, இனி இந்த ஹீரோ 25 கோடி கம்மியா வாங்குவாரா இங்க. 

 

இங்க வாங்குன சம்பளத்தை விட எதுக்கு 25% கூட்டுனீங்க. அப்ப அடுத்த ஹீரோ இங்க, எங்க தமிழனால இந்த சம்பளம் கொடுக்க முடியுமா? என் கவலை அதுதான்; வேற ஒண்ணுமில்லை. எங்க ஹீரோ விஜய் படம் நல்லா ஓடணும். அஜித் படம் நல்லா ஓடணும். தெலுங்குக்கு போய் அவங்க மார்க்கெட்ட கெடுத்துக்க, அந்த அசோசியேஷனும், அந்த கவுன்சிலும் விரும்பவில்லை. அதுக்காக எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்க. விஜய் படம் வாரிசு அங்கு நிச்சயம் ரிலீஸ் ஆகுது. 35% விஜய்க்கு அங்க மரியாதை அவ்ளோதான். 

 

இங்க 50:50. அஜித்துக்கு 50. விஜய்க்கு 50. இரண்டு படமும் இங்க நல்லா ஓடும். ஆந்திராவ கொண்டாந்து வந்து இங்க சேக்காதீங்க. அங்க போனதே தப்பு தமிழ் ஹீரோக்கள். தமிழ் புரொடியூசரைக் காப்பாற்றுங்கள். நீங்க ஒன்னும் தெலுங்கு போய் காப்பாத்த வேண்டிய அவசியம் இல்ல. அங்க ஹீரோஸ் நல்லாருக்காங்க. புரொடியூசருக்கு நல்லா ஒத்துழைப்பு தராங்க. நீங்க இங்க ஒத்துழைப்பைத் தர கத்துக்கோங்க.” என்று காட்டமாகப் பேசினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உண்மைக்குப் புறம்பானது” - ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்கும் தயாரிப்பாளர்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
producer abdul malik jaffar sadiq case issue

மலேஷியாவை சேர்ந்தவர் அப்துல் மாலிக் பின் தஸ்தகீர். தொழிலதிபர், சினிமா தயாரிப்பாளர், சமூக சேவகர் எனப் பன்முகத் தன்மை கொண்டவராக இருந்து வருகிறார். மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் என்ற பெயரில் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருவதோடு, ஆதரவற்ற பல்வேறு மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார். இவருடைய சமூக சேவையைப் பாராட்டி மலேஷிய ராயல் குடும்பம் ‘டத்தோ’ என்ற உயரிய விருதைக் கொடுத்து கெளரவித்துள்ளது.

இந்த நிலையில் அப்துல் மாலிக் பின் தஸ்தகீர், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமீபத்தில் சில யு-டியூப் சேனல்களில் உண்மைக்கு புறம்பாக சில வீடியோ வெளியிடப்பட்டதாக காவல்துறை ஆணையாளரிடம் புகார் கொடுத்துள்ளார். அதில், சமீபத்தில் போதைப் பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டிருக்கும் ஜாபர் சாதிக்குக்கும்  தனக்கும் தொடர்பு உண்டு என்று பிரபல யூட்யூப் சேனல் உண்மைக்குப் புறம்பாக அவதூறு செய்தி வெளியிட்டதாகத் தெரிவித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் 5 கோடி நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“எப்போது அழைத்தாலும் விசாரணைக்குத் தயார்” - அமீர்

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
ameer about producer dmk jaffer sadiq issue

டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த மாத 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அவர் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில், அந்த நபர் திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது. மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநரும் நடிகருமான அமீர் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 2 நாட்களாக எனது ‘இறைவன் மிகப் பெரியவன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாஃபர் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த 22 ஆம் தேதி நான் ‘இறைவன் மிகப் பெரியவன்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்தபோது, திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது? என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்பதை ஊடகங்கள் வாயிலாகவே நான் அறிந்து கொண்டேன். உண்மை எதுவென்று இப்போது வரை எனக்குத் தெரியவில்லை. எதுவாயினும், செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால் அது கண்டிக்கப்பட வேண்டியதும் தண்டிக்கப்பட வேண்டியதுமே” எனத் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் வீடியோ வெளியிட்ட அவர், “என்னுடைய இறைவன் மிகப் பெரியவன் திரைப்பட தயாரிப்பாளர் ஜாஃபர் குறித்த என்னுடைய நிலைப்பாட்டை நான் தெள்ளத் தெளிவாக விளக்கிய பிறகும், என் மீது பேரன்பு கொண்ட சில ஊடகவியலாளர்களும் நண்பர்களும் சமூக வலைதளப் பக்கங்களிலும் ஊடகங்களிலும் குற்றச்செயலோடு என்னை தொடர்புப்படுத்தி வீடியோக்கள் வெளியிடுவதை பார்க்க முடிகிறது. அவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அடிப்படையாகவே மது, விபச்சாரம், வட்டி இதுபோன்ற விஷயங்களுக்கு எதிரான சித்தாந்தத்தையும் மார்க்கத்தையும் கும்பிடக் கூடியவன் நான். அப்படி இருக்கையில் இதுபோன்ற ஒரு குற்றச்செயலில் என்னை தொடர்புப்படுத்தி பேசுவது என்பது எனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த முடியுமே தவிர அல்லது என் குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்த முடியுமே தவிர வேற எந்த பயனையும் நீங்கள் அடைந்து விட முடியாது. நீங்கள் சொல்கின்ற அனைத்து குற்றச்சாட்டுகளையும் விசாரிப்பதற்கு காவல்துறை அதிகாரிகள் இருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் எப்போது என்னை அழைத்தாலும் விசாரணைக்கு தயாராகவே இருக்கிறேன். இந்த சோதனையான காலகட்டத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. இறைவன் மிகப் பெரியவன்” எனப் பேசியுள்ளார்.