thalainagaram 2 shooting wrapped

கடந்த 2006ம் ஆண்டு சுந்தர்.சி - வடிவேலு கூட்டணியில் வெளியான படம் தலைநகரம். இப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவில்ஹீரோவாகஅறிமுகமான சுந்தர் சிரைட்டுஎன்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.காமெடிஆக்சன்கலந்து வெளியான இப்படத்தில் நடிகர் வடிவேலு நாய் சேகர் என்ற கதாபாத்திரத்தில் ரசிகர்களை வயிறுகுலுங்கச்சிரிக்க வைத்திருப்பார். இப்படம் பெற்ற வெற்றியின் காரணமாக தற்போது தலைநகரம் 2 என்ற பெயரில் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்திலும் சுந்தர் சி கதாநாயகனாகநடிக்கிறார். வி.இசட்துரை இயக்கி வருகிறார்.

Advertisment

சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தலைநகரம் 2 படத்தின் அனைத்து படப்பிடிப்புநிறைவடைந்துள்ளதாகபடக்குழு அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து அடுத்த கட்ட பணியை முழுவீச்சில் முடித்து, தலைநகரம் 2 படத்தை விரைவில்வெளியிடபடக்குழு திட்டமிட்டுள்ளது.

Advertisment