Skip to main content

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் முதல்வர் மு.க ஸ்டாலினிடம் கோரிக்கை

Published on 20/10/2022 | Edited on 20/10/2022

 

Tamil Nadu film exhibitor Association request to CM Stalin

 

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம், தனி திரையரங்குகளின் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில், "மல்டிபிளக்ஸ் மற்றும் தனி திரையரங்குகளுக்கு ஒரே அளவில் மின்சார கட்டணம், சம்பளம் என அனைத்தும் ஒரே வகையில் உள்ளது. எனவே, தனி திரையரங்குகளின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். 

 

தற்போது மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 190 ரூபாய் மற்றும் தனி திரையரங்குகளுக்கு 120 ரூபாய் என சினிமா டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை 190 ரூபாய் ஆக்கி சமநிலைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். 

 

மேலும், ஏசி வசதி கொண்ட திரையரங்குகளில் தற்போது நான்கு ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதை 10 ரூபாய் எனவும் ஏசி அல்லாத திரையரங்குகளில் இரண்டு ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதை ஐந்து ரூபாய் எனவும் மாற்றி அமைக்க வேண்டும் என பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார். சினிமா ஆபரேட்டர்களின் தேர்வு பல ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ளது. எனவே, ஆபரேட்டர்களின் பற்றாக்குறை உள்ளது எனவும் சுட்டிக்காட்டி உள்ளார். 

 

அதோடு பெரிய திரையரங்குகளை சிறிய திரையரங்குகளாக மாற்ற பொதுப்பணித் துறை அலுவலகத்தில் உரிமம் பெற்றால் போதும் என்ற முறையை கொண்டு வர வேண்டும், C படிவ உரிமம் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுபிக்க அனுமதி வேண்டும் எனவும் கூறியுள்ளார். 

 

இதனிடையே முன்னதாக சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்க கோரி திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகளை திரையிட அனுமதி அளித்துள்ளது. அதன் படி வரும் 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 7 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட உள்ளன. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

1857 கி.மீ. சைக்கிள் ஓட்டும் போட்டியில் வென்ற கொரியத் தமிழர்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Korean Tamil wins cycling competition

உலகம் முழுவதும் தமிழர்கள் வேலைக்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், பணிபுரியும் நாட்டில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்து, சாதனை புரிபவர்கள் மிகவும் சிலரே இருக்கிறார்கள். அப்படி பல துறைகளிலும் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் சாதனை புரிந்த தமிழர்களைக் கவுரவிக்க, தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் விழா நடத்தி விருது வழங்குகிறது.

2023 ஆம் ஆண்டுக்கான அயலகத் தமிழர் விருது வழங்கும் விழா 2024 ஜனவரியில், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.  மூன்றாம் ஆண்டாக நடைபெற்ற இந்த அயலகத் தமிழர் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அறிவியல், தொழில், சமூக சேவை, விளையாட்டு என 8 பிரிவுகளின் கீழ் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 14 அயலகத் தமிழர்களுக்கு விருதுகளை வழங்கினார். இதில் 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 218 உலகத் தமிழ்ச் சங்கங்களைச் சேர்ந்த அயலகத் தமிழர்கள் பங்கேற்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விருதுபெற்ற 14 அயலகத் தமிழர்களில், அவர்களில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகேயுள்ள குதிரைகுத்தி கிராமத்தைச் சேர்ந்த முனைவர் குருசாமி ராமன் தனித்த சிறப்புடையவர். இவருக்கு விளையாட்டில் சாதனை புரிந்த தமிழர் பிரிவில், தமிழ்நாடு அரசின் கணியன் பூங்குன்றனார் விருது, தங்கப் பதக்கத்துடன் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டது.

Korean Tamil wins cycling competition

முனைவர் குருசாமி ராமன், கொரியாவில் 1857 கிலோமீட்டர் தூரமுள்ள சைக்ளிங் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் வெற்றிபெற்ற முதல் இந்தியத் தமிழர் என்ற பெருமையைப் பெற்றவர். இதன்மூலம், தமிழ்நாட்டுக்கும், கொரியாவில் வசிக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.குதிரை குத்தி கிராமத்தைச் சேர்ந்த குருசாமி – மாரியம்மாள் தம்பதியின் மகனாக, பின்தங்கிய கிராமத்தில் பிறந்த முனைவர் ராமன் தென் கொரியாவில் உள்ள யெங்ணம் பல்கலைக்கழகத்தில் ஜினோமிக்ஸ் பிரிவில் ஆராய்ச்சியாளராகவும் உதவி பேராசிரியராகவும் தென் கொரியாவில் உள்ள யெங்ணம் பல்கலையில் கடந்த பத்து வருடங்களாக பணிபுரிகிறார். முனைவர் ராமன், மனைவி பொன் அருணா மற்றும் மகள் அதிராவுடன் தென் கொரியாவில் வசித்து வருகிறார்.

Next Story

“பள்ளிவாசல், தர்காக்களுக்கு மானியத் தொகை ரூ.10 கோடியாக உயர்வு” - முதல்வர் அறிவிப்பு

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
Rs. 10 crore increase in grant to schools, dargahs says CM stalin

சென்னை தலைமை செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஒன்றிய அமைச்சர் ஒருவர் திராவிட மாடல் தான் பிரிவினையை தூண்டுவதாக கூறியிருக்கிறார். எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. திராவிட மாடல் பிரிவினையை தூண்டுவதாக கூறுவதைவிட நகைச்சுவை வேறு ஏதும் இருக்க முடியாது. இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க சட்ட இயற்றியது திராவிட மாடல். பள்ளி கல்லூரிகளில் படிக்கும் இஸ்லாமிய பெண்களுக்கான விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு மேம்பாட்டுக் கழகம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

பள்ளிவாசல், தர்காக்களுக்கு வழங்கப்படும் மானியத்தொகையை ரூ.10 கோடியாக உயர்த்தப்பட்டது. உலமா ஓய்வூதியம் பெறுவோர் இறந்தால் அவரது குடும்பத்தினருக்கு குடும்பம் ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.5.45 கோடி செலவில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. திமுக அரசு பதவியேற்றதும் முதல்முறையாக மின் மோட்டார் வசதியுடன் கூடிய ஆயிரம் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் செய்வோருக்கு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது” என்றார்.