Skip to main content

'அரண்மனை 4'-ம் பாகத்துக்காக தயாராகும் இயக்குநர் சுந்தர் சி! 

Published on 26/07/2021 | Edited on 26/07/2021
vdgdsbs

 

சுந்தர். சி இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘அரண்மனை’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் பாகத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதும், படம் மாபெரும் வெற்றிபெற்றது. இவ்விரு பாகங்களுக்கும் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘அரண்மனை’ படத்தின் மூன்றாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில், கதாநாயகனாக ஆர்யா நடிக்க, அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் என 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் சுந்தர். சி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, விவேக், யோகி பாபு, சம்பத், மனோபாலா, வின்சென்ட் அசோகன், மதுசூதன ராவ், வேல. ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

 

இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ள படக்குழு, தற்போது  இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. அண்மையில் 'அரண்மனை 3' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்நிலையில், இப்படத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும் 'அரண்மனை 3' படத்தின் தணிக்கை அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இதையடுத்து இப்படத்தை வரும் செப்டம்பர் மாதம் நேரடியாக திரையரங்குக்கு கொண்டுவர படக்குழு திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அரண்மனை 4-ம் பாகத்தையும் எடுக்க சுந்தர்.சி முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான திரைக்கதையை அவர் தயார் செய்துவிட்டதாகவும் விரைவில் இதன் படப்பிடிப்பை அவர் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

மீண்டும் மிரட்ட வரும் சுந்தர்.சியின் அரண்மனை - 4

Published on 29/09/2023 | Edited on 29/09/2023

 

aranmanai 4 fist look released

 

சுந்தர்.சி இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான 'அரண்மனை' படம் சூப்பர் ஹிட்டடித்தது. அதில் ஹீரோவாகவும் சுந்தர்.சி நடித்திருந்தார். மேலும் ஹன்சிகா, ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெற்றியடைந்ததால் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகின. 

 

'அரண்மனை 2' படத்தில் சுந்தர்.சியுடன் சித்தார்த், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தைத் தொடர்ந்து வெளியான 'அரண்மனை 3' படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்த நிலையில், கலவையான விமர்சனமே இப்படம் பெற்றது. இதையடுத்து அரண்மனை படத்தின் நான்காம் பாகம் உருவாகவுள்ளதாக இந்த வருட தொடக்கத்தில் தகவல் வெளியானது. அதில் விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஹன்சிகா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளதாகவும் லைகா தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பளம் பிரச்சனை காரணமாக விஜய் சேதுபதி விலகியதாகவும் கூறப்பட்டது. 

 

இந்த நிலையில், அரண்மனை - 4 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. சுந்தர்.சி இயக்கி நடிக்கிறார். தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார். போஸ்டரை பார்க்கையில், ஒரு பெண்மணி இரு குழந்தைகளுடன் அரண்மனையை நோக்கி நிற்கிறார். இதில், அடுத்தாண்டு பொங்கலன்று படம் வெளியாகவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பொங்கல் ரேஸில் சிவகார்த்திகேயனின் அயலான் படம் இருக்கிறது. இப்போது இதுவும் இணைந்துள்ளது.  

 

 

 

Next Story

"அஜித்தின் இந்த உயரத்திற்கு முக்கியக் காரணமே அவர் தான்" - மேடையில் எமோஷனலான இயக்குநர்

Published on 12/06/2023 | Edited on 12/06/2023

 

durai speech at thalainagaram 2 audio launch

 

கடந்த 2006ம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் சுந்தர்.சி, வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தலைநகரம் படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்திலும் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குநர் துரை இயக்கியுள்ள இப்படத்தில் பாலக் லால்வானி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். 

 

இதில் இயக்குநர் துரை பேசுகையில் படத்தைப் பற்றி பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்தார். மேலும், "என்னை இயக்குநராக அறிமுகப்படுத்தியவர் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி சார். அவர் இப்போது மறைந்துவிட்டார்" எனப் பேசிக்கொண்டிருக்கையில் திடீரென எமோஷனலாகி கண்கலங்கிவிட்டார். பின்பு சமாதானமாகி அவருக்கு 1 நிமிடம் அஞ்சலி செலுத்தும் விதமாக அனைவரையும் எழுந்து நிற்க கேட்டுக்கொண்டார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், "சக்கரவர்த்தி சார் எனக்கு மட்டும் முகவரி கொடுக்கவில்லை. அஜித்துக்கும் தான். அஜித் இந்தளவுக்கு உயர்ந்த இடத்தில் இருக்கிறார் என்றால் சக்கரவர்த்தி சார் ஒரு மிகப்பெரிய காரணம். அஜித்தை வைத்து பல படங்களைத் தயாரித்துள்ளார். அதற்கு சினிமா மீது சக்கரவர்த்தி சார் வைத்திருந்த காதல் தான் காரணம்" என்றார்.

 

எஸ்.எஸ்.சக்கரவர்த்தி அஜித்தை வைத்து ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜீ, வரலாறு ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.