Skip to main content

"நீண்ட நாட்களுக்குப் பிறகு நன்றாக ரசித்து பார்த்தேன்" - எஸ். எஸ்.ராஜமௌலி பரிந்துரை

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

ss rajamouli praised mem famous movie

 

தெலுங்கில் அனுராக் ரெட்டி, சரத் சந்திரா, சந்துரு மனோகரன் ஆகியோர் தயாரிப்பில் கடந்த 26ஆம் தேதி வெளியான படம் 'மேம் ஃபேமஸ்' (Mem Famous). இப்படத்தை சுமந்த் பிரபாஸ் என்பவர் இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் மணி ஏகுர்லா, மௌரியா சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கல்யாண் நாயக் இசையமைத்திருந்தார். ஒரு கிராமத்தில் வாழும் சில இளைஞர்களின் வாழ்க்கையை காமெடி, காதல் என கலந்த ஒரு படமாக உருவாகியிருக்கிறது. மேலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

 

இந்நிலையில் இப்படத்தை இயக்குநர் எஸ்,எஸ்.ராஜமௌலி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையரங்கில் ஒரு படத்தை நன்றாக ரசித்து பார்த்தேன். நடிகராகவும் இயக்குநராகவும் பணியாற்றிய சுமந்துக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. அனைத்து கதாபாத்திரங்களும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் நடித்த நடிகர்கள் இயல்பாக நடித்துள்ளனர். குறிப்பாக அஞ்சி மாமா. அனைவருக்கும் பார்க்க வேண்டும் என பரிந்துரைக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். 

 

அண்மையில் இப்படத்தை பார்த்த மகேஷ்பாபு, "புத்திசாலித்தனமான படம். படத்தில் ஒவ்வொரு நடிகரின் குறிப்பாக எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நடிகர்களின் நடிப்பால் அசத்தியுள்ளார். சுமந்த் பிரபாஸ் திறமையான மனிதர். காட்சிகள், பின்னணி இசை என அனைத்தும் கச்சிதமாக இருந்தது. படத்தின் தயாரிப்பாளர்களை நினைத்து பெருமை கொள்கிறேன்." என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஆஸ்கரில் சந்திப்போம்” - வார்னரால் டென்ஷனான ராஜமௌலி  

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
ss rajamouli david warner ad viral

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், இந்தியாவிலும் ரசிகர்களை வைத்துள்ளார். முன்னதாக அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படம் பிரபலமடைந்த சமயத்தில் அல்லு அர்ஜுன் போல் வசனம் பேசி மற்றும் படத்தில் இடம்பெற்ற ‘ஸ்ரீ வள்ளி’ பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் செய்தும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இது இந்திய ரசிகர்கள் மத்தியில் பரவலாக ரசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நிறைய இடங்களில் புஷ்பா படத்தில் இடம்பெறும் அல்லு அர்ஜுன் ஸ்டைலை செய்து மகிழ்ந்து வந்தார். மேலும், கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் பிறந்தநாளுக்கு புஷ்பா பட ஸ்டைலில் தனது குழந்தையுடன் சமூக வலைத்தளப் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலியோடு இணைந்து ஒரு யுபிஐ விளம்பர படத்தில் நடித்துள்ளார். அந்த விளம்பரத்தில், வார்னரிடம் ஃபோன் பேசும் ராஜமௌலி, அவரின் மேட்ச் டிக்கெட்டுக்கு டிஸ்கவுன்ட் கிடைக்குமா என கேட்கிறார். அதற்கு பதிலளித்த வார்னர், உங்களிடம் சம்மந்தப்பட்ட யுபிஐ செயலி பெயரைச் சொல்லி, அது இருந்தால் கேஷ்பேக் கிடைக்கும் என்கிறார். உடனே, ராஜமௌலி, “என்னிடம் வழக்கமான யுபிஐ இருந்தால்...” என கேட்க, “அப்போது டிஸ்கவுன்ட் கிடைக்க நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்” என வார்னர் சொல்கிறார். 

உடனே வார்னரை வைத்து ராஜமௌலி படமெடுப்பதாக காட்டப்படுகிறது. அவரை நடிக்க வைக்க படாத பாடு படுகிறார் ராஜமௌலி. அதை ஜாலியாக வெவ்வேறு காட்சிகளைக் கொண்டு காட்டப்படுகிறது. ஒரு காட்சியில், “ஆஸ்கரில் சந்திப்போம்” என ராஜமௌலியிடம் வார்னர் சொல்கிறார். அதற்கு டென்ஷனாகி ராஜமௌலி வார்னரை பார்க்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

Next Story

காவல் நிலையத்தை நாடிய விஜய் தேவரகொண்டா

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
vijay devarakonda family star trol complaint issue

கீதா கோவிந்தம் பட இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் மீண்டும் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள தெலுங்கு படம் ஃபேமிலி ஸ்டார். விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்திருக்க திவ்யன்ஷா கவுசிக், அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். 

இப்படம் கடந்த 5ஆம் தேதி தெலுங்கு, தமிழ், இந்தியில் வெளியான நிலையில் கலைவையான வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சமூக வலைத்தளங்களில் ட்ரோல்களுக்கும் உள்ளாக்கப்பட்டது. வசூல் ரீதியாகவும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் ட்ரோல்களுக்கு எதிராக விஜய் தேவரகொண்டா தரப்பில் காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

விஜய் தேவரகொண்டாவின் மேலாளர் அனுராக் மற்றும் அவரது ரசிகர் மன்ற தலைவர் நிஷாந்த் குமார் அளித்த புகாரில், “விஜய் தேவரகொண்டாவின் வளர்ச்சியை விரும்பாதவர்கள் இப்படத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தனிநபராகவும் குழுக்களாகவும் இதை செய்து வருகின்றனர். இதன் காரணமாக படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் விஜய் தேவரகொண்டா தன் தரப்பில் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.