Skip to main content

தான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்! 

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

vdsbdxb

 

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தின் ஜோஷிடம் அருகே நந்தாதேவி பனிப்பாறையின் ஒரு பகுதி, கடந்த 7ஆம் தேதி திடீரென உடைந்ததால் பெரும் பனிச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதனால், அங்கு அமைக்கப்பட்டிருந்த ரிஷிகங்கா நீர்மின் நிலையம் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டது. அங்கு பணியாற்றி வந்த நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், சுரங்கங்களிலும் சிக்கிக்கொண்டனர். இந்தப் பேரிடரில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை ராணுவம், தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப்படையினர் இரவு பகலாக மேற்கொண்டு வருகின்றனர்.

 

vsava

 

இதில் உயிருடன் இருந்தவர்கள் ஏற்கனவே மீட்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், வெள்ளப் பெருக்கில் தப்போவன் ஹைட்ரோபவர் திட்டத்தில் எலக்ட்ரீஷியனாகப் பணிபுரிந்த ஆலம் சிங் புண்டிர் என்பவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தார். இதனால், அவரின் மனைவி உட்பட நான்கு பெண் குழந்தைகளும் கேட்பாரற்றுக் கிடந்த நிலையில், உயிரிழந்த ஆலம் சிங்கின் குழந்தைகளான அஞ்சல், அந்தரா, காஜல், அனன்யா ஆகிய நான்கு பெண் குழந்தைகளின் படிப்புச் செலவையும் ஏற்றதோடு அவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான உதவிகளையும் செய்வதாக வில்லன் நடிகர் சோனு சூட் அறிவித்துள்ளார்.

 

மேலும் நடிகர் சோனு சூட் சமூகவலைத்தளத்தில் ‘இனி இந்தக் குடும்பம் என்னுடையது’ என்றும் பதிவிட்டுள்ளார். இவருக்குப் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சோனு சூட் கரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், இப்போதுவரை தனது சமூக வலைதளங்களில் கோரிக்கை வைப்பவர்களுக்கும் மருத்துவ உதவிகள், கல்விக்கான உதவிகள் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'டென்ஷன் ஆகாதீர்கள்;பிரார்த்தனை செய்யுங்கள்''-சோனு சூட் ட்வீட்!

Published on 29/05/2022 | Edited on 29/05/2022

 

'Don't be tense; pray' '- Sonu Suite Tweet!

 

நான்கு கைகள் நான்கு கால்களுடன் பிறந்த குழந்தையின் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலான நிலையில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய நடிகர் சோனு சூட் முன்வந்துள்ளார்.

 

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் ஒரு ஏழை குடும்பம் ஒன்றில் இரண்டரை வயது சிறுமி ஒருவர் பிறக்கும் பொழுதே நான்கு கைகள் நான்கு கால்களுடன் பிறந்துள்ளார்.அறுவை சிகிச்சை மூலமே அவற்றை அகற்ற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் வறுமை காரணத்தால் அறுவை சிகிச்சை செய்வதற்கான பணம் இல்லாமல் சிறுமியின் குடும்பத்தினர் தவித்து வந்தனர். இந்நிலையில் அச்சிறுமியின் வீடியோவை பார்த்த பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்து உதவி செய்ய முன்வந்துள்ளார். சிறுமியுடைய வயிற்றில் கூடுதலாக உள்ள கைகள் மற்றும் கால்களை அறுவை சிகிச்சை செய்து அகற்றத் தேவையான பரிசோதனையை மருத்துவர்கள் செய்யும் புகைப்படத்தையும், வீடியோவையும் ட்வீட் செய்துள்ள சோனு ''டென்ஷன் ஆகாதீர்கள் சிகிச்சை தொடங்கிவிட்டது. பிரார்த்தனை செய்யுங்கள்'' என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே கரோனா நேரங்களில் பல்வேறு உதவிகளை செய்ததன் மூலம் மேலும் பிரபலமானவர் சோனு சூட் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Next Story

வெளியான தகவல்... சோகத்தில் சோனுசூட் ரசிகர்கள்...!

Published on 10/03/2022 | Edited on 10/03/2022

 

Released information ... Sonu Sood fans in grief ...!

 

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் பல கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

நண்பகல் 12 மணி நிலவரப்படி உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னிலையில் வகித்து வந்த நிலையில் காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக 272 இடங்களிலும், சமாஜ் வாதி கட்சி- 121 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி-03 இடங்களிலும், காங்கிரஸ்-03 இடங்களிலும், மற்றவை 03 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. பஞ்சாப் சட்டமன்றத்தில் உள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி 89 இடங்களிலும், காங்கிரஸ் 18 இடங்களிலும், அகாலிதளம் 06 இடங்களிலும் பாஜக 03 இடங்களிலும், மற்றவை 01 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சி உறுதி செய்யப்பட்டுவிட்டது.

 

கரோனா ஊரடங்கின்போது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி பல்வேறு தரப்பினருக்கும் பல்வேறு வகையில் உதவி செய்து பிரபலமான நடிகர் சோனு சூட், பஞ்சாப் தேர்தலில் தனது தங்கையைக் களமிறக்கியிருந்தார். தனது தங்கை மாளவிகாவின் விருப்பத்தை தொடர்ந்து பஞ்சாப்பின் மேகா தொகுதியில் அவர் போட்டியிட்டார். இந்நிலையில் மாளவிகா வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்துள்ளர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. ''எங்கள் குடும்பத்தின் மீது மக்கள் எப்போதும் பொழியும் அன்பையும் மரியாதையையும் அவர்களுக்கு திருப்பி அளிக்க விரும்புகிறார் எனது தங்கை" என சோனுசூட் நம்பிக்கையுடன் கூறியிருந்த நிலையில் அவரின் பின்னடைவு தொடர்பாக வெளியான தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.