Skip to main content

“இப்போதுதான் பெற்றோர் இல்லை என வருந்துகிறேன்...” -சோனு சூட் 

Published on 21/11/2020 | Edited on 21/11/2020

 

sonu sood

 

 

இந்தியத் திரையுலகின் பிரபல வில்லன் நடிகர் சோனு சூட். அனுஷ்காவுடன் 'அருந்ததி', சிம்புவுடன் 'ஒஸ்தி' உள்ளிட்ட படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார். 

 

பஞ்சாபைச் சேர்ந்த சோனு சூட், கரோனா ஊரடங்கின் போது புலம்பெயர் தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊருக்குச் செல்ல உதவினார். மேலும் சமூக வலைதளம் மூலமாகக் கல்வி, மருத்துவம் தொடர்பாக  உதவி கேட்பவர்களுக்கும் தனது உதவிக்கரத்தை நீட்டி வருகிறார்.

 

இந்த நிலையில், சோனு சூட்டை பஞ்சாப் மாநிலத்தின் அடையாளமாக நியமிக்க வேண்டுமென, பஞ்சாப் மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி கருணா ராஜு, இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குப் பரிந்துரை செய்திருந்தார். இப்பரிந்துரையை இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது.        

 

நேர்மையாக வாக்களிப்பது தொடர்பாக பஞ்சாப் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, சோனு சூட்டை பஞ்சாப் மாநிலத்தின் அடையாளமாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சோனு சூட், பஞ்சாப் மாநில அடையாளமாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர்.

 

இந்நிலையில் இதுகுறித்து பேசுகையில், "எப்போதையும் விட இப்போதுதான் எனது பெற்றோர் இல்லை என்பதை நினைத்து வருந்துகிறேன். அவர்களைப் பெருமைப்படுத்துவேன் என்று எப்போதும் அவர்களிடம் கூறுவேன். எங்களது சொந்த ஊரான மோகா முழுக்க எனது பெயரை அறியச் செய்வேன் என்றும் அவர்களிடம் உறுதியளித்திருந்தேன்.

 

இது எல்லாமே எனது பெற்றோரின் ஆசிர்வாதங்கள் தான். என்னை பஞ்சாபின் அடையாளமாக நியமித்துள்ளனர். மேலே இருந்து என் பெற்றோர் என்னைப் பார்த்து புன்னகைப்பதை நான் உணர்கிறேன். இது மிகப்பெரிய பொறுப்பு. இதை சுமக்கும் திறன் எனக்கு இருக்கிறது என நினைக்கிறேன். என்னுள் அசாத்தியமான துணிச்சலையும், வலிமையையும் நான் உணர்கிறேன். அது எங்கிருந்து வருகிறது என்று எனக்கு தெரியவில்லை.

 

ஒரு பக்கம் சிலர் என்னை விமர்சிக்கின்றனர். ஆனால் எனது நேர்மையான நோக்கமும், மக்களின் அன்பு மற்றும் நம்பிக்கையும் தான் என்னை இயக்குகிறது. அவர்களது நம்பிக்கையை சந்தேகப்படும் எந்த ஒரு நபராலும் போக்கிவிட முடியாது" என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'டென்ஷன் ஆகாதீர்கள்;பிரார்த்தனை செய்யுங்கள்''-சோனு சூட் ட்வீட்!

Published on 29/05/2022 | Edited on 29/05/2022

 

'Don't be tense; pray' '- Sonu Suite Tweet!

 

நான்கு கைகள் நான்கு கால்களுடன் பிறந்த குழந்தையின் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலான நிலையில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய நடிகர் சோனு சூட் முன்வந்துள்ளார்.

 

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் ஒரு ஏழை குடும்பம் ஒன்றில் இரண்டரை வயது சிறுமி ஒருவர் பிறக்கும் பொழுதே நான்கு கைகள் நான்கு கால்களுடன் பிறந்துள்ளார்.அறுவை சிகிச்சை மூலமே அவற்றை அகற்ற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் வறுமை காரணத்தால் அறுவை சிகிச்சை செய்வதற்கான பணம் இல்லாமல் சிறுமியின் குடும்பத்தினர் தவித்து வந்தனர். இந்நிலையில் அச்சிறுமியின் வீடியோவை பார்த்த பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்து உதவி செய்ய முன்வந்துள்ளார். சிறுமியுடைய வயிற்றில் கூடுதலாக உள்ள கைகள் மற்றும் கால்களை அறுவை சிகிச்சை செய்து அகற்றத் தேவையான பரிசோதனையை மருத்துவர்கள் செய்யும் புகைப்படத்தையும், வீடியோவையும் ட்வீட் செய்துள்ள சோனு ''டென்ஷன் ஆகாதீர்கள் சிகிச்சை தொடங்கிவிட்டது. பிரார்த்தனை செய்யுங்கள்'' என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே கரோனா நேரங்களில் பல்வேறு உதவிகளை செய்ததன் மூலம் மேலும் பிரபலமானவர் சோனு சூட் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Next Story

வெளியான தகவல்... சோகத்தில் சோனுசூட் ரசிகர்கள்...!

Published on 10/03/2022 | Edited on 10/03/2022

 

Released information ... Sonu Sood fans in grief ...!

 

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் பல கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

நண்பகல் 12 மணி நிலவரப்படி உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னிலையில் வகித்து வந்த நிலையில் காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக 272 இடங்களிலும், சமாஜ் வாதி கட்சி- 121 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி-03 இடங்களிலும், காங்கிரஸ்-03 இடங்களிலும், மற்றவை 03 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. பஞ்சாப் சட்டமன்றத்தில் உள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி 89 இடங்களிலும், காங்கிரஸ் 18 இடங்களிலும், அகாலிதளம் 06 இடங்களிலும் பாஜக 03 இடங்களிலும், மற்றவை 01 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சி உறுதி செய்யப்பட்டுவிட்டது.

 

கரோனா ஊரடங்கின்போது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி பல்வேறு தரப்பினருக்கும் பல்வேறு வகையில் உதவி செய்து பிரபலமான நடிகர் சோனு சூட், பஞ்சாப் தேர்தலில் தனது தங்கையைக் களமிறக்கியிருந்தார். தனது தங்கை மாளவிகாவின் விருப்பத்தை தொடர்ந்து பஞ்சாப்பின் மேகா தொகுதியில் அவர் போட்டியிட்டார். இந்நிலையில் மாளவிகா வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்துள்ளர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. ''எங்கள் குடும்பத்தின் மீது மக்கள் எப்போதும் பொழியும் அன்பையும் மரியாதையையும் அவர்களுக்கு திருப்பி அளிக்க விரும்புகிறார் எனது தங்கை" என சோனுசூட் நம்பிக்கையுடன் கூறியிருந்த நிலையில் அவரின் பின்னடைவு தொடர்பாக வெளியான தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.