Skip to main content

"கதாநாயகி பேசிய வசனம் அனைவரையும் மிரட்டிப் போட்டுவிட்டது" - சித்தார்த்

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

siddharth speech in takkar press meet

 

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில், கார்த்திக் ஜி கிரிஷ் எழுத்து இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள படம் 'டக்கர்’. இப்படம் வருகிற ஜூன் 9ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சென்னையில் இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது.

 

இந்நிகழ்வில் நடிகர் சித்தார்த் பேசியதாவது, “கோவிட் காலத்துக்கு பிறகு உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். ‘டக்கர்’ பட இயக்குநர் கார்த்திக் இந்தப் படத்திற்காக என்னை சந்தித்தபோது, சில விஷயங்கள் எனக்கு ஹைலைட்டாக தோன்றியது. எந்த இடத்திலும் நிற்காத ஸ்பீடான ஒரு படம் இது. ’டக்கர்’ என இந்தப் படத்தின் தலைப்பின் அர்த்தம் பார்டர் தாண்ட தாண்ட மாறிக் கொண்டே இருக்கும். வட இந்தியாவில் ‘டக்கர்’ என்றால் போட்டி, சில ஊர்களில் ஸ்மார்ட்டாக இருப்பதை ‘டக்கர்’ என சொல்வார்கள். மோதல், சூப்பர் என பல அர்த்தம் உண்டு. இந்தப் படத்தில் ‘டக்கர்’ பயன்படுத்தியதன் காரணம், மோதல். ஒரு பொண்ணுக்கும் ஹீரோவுக்குமான க்ளாஷ்தான் அது. 

 

நடிகர் யோகிபாபு, கதாநாயகி திவய்ன்ஷா, சீனியர் ஹீரோ அபிமன்யு, முனீஷ்காந்த், விக்னேஷ்காந்த என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். ‘உடலுறவு  வேண்டுமனால் வைத்துக் கொள்ளலாம், கல்யாணம் எல்லாம் வேண்டாம்’ என கதாநாயகி டிரைய்லரில் பேசும் வசனம் அனைவரையும் மிரட்டி போட்டுவிட்டது. யூடியூப் கமெண்டிலேயே இதுதொடர்பாக நிறைய விவாதங்கள். இந்த கதாநாயகி கதாநாயகனை சந்திக்கும்போது என்ன நடந்தது என்பதும் ‘டக்கர்’ரில் இருக்கும். தொழில்நுட்பக் குழுவினர் சிறப்பான வேலையைக் கொடுத்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னாவுக்கு இந்தப் படம் மியூசிக்கலாக முக்கியமானதாக இருக்கும். ’டக்கர்’ திரைப்படம் திரையரங்குகளுக்காக எடுக்கப்பட்ட கமர்ஷியல் படம். நண்பர்களோடு, குடும்பத்தோடு நீங்கள் ஜாலியாக பார்க்கலாம். நிச்சயம் உங்களை ‘டக்கர்’ ஏமாற்றாது” என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அயலானுக்கு குரல் கொடுத்த பிரபல நடிகர்

Published on 13/12/2023 | Edited on 13/12/2023
siddharth give voice to alien character in sivakarthikeyan ayalaan

'இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக உருவாகி வரும் படம் 'அயலான்'. இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். 2024 பொங்கலை முன்னிட்டு திரைக்கு வருகிறது. இப்படத்தின் முதல் பாடல் 'வேற லெவல் சகோ' கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது.  

இப்படத்தின் டீசர் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது. டீசர் விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் மீண்டும் ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து சிவகார்த்திகேயன் படத்திற்கு உலகளவில் பல நாடுகளில் மற்றும் திரை எண்ணிக்கையில் அதிகளவு வெளியாகும் திரைப்படம் அயலான் என படக்குழு தெரிவித்தது. பின்பு இப்படத்தின் இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகும் எனவும் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 26ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் படத்தின் அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது படத்தில் வரும் ஏலியன் கதாப்பாத்திரத்திற்கு டப்பிங் பேசிய நபர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிரபல நடிகர் சித்தார்த் தான் ஏலியனுக்கு குரல் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள். மேலும் அயலான் படத்தில் ஒரு பகுதியாக இருந்ததற்கு நன்றி எனவும் ரசிகர்கள் நிச்சயம் சித்தார்த் குரலை ரசிப்பார்கள் எனவும் கூறியுள்ளனர். 

Next Story

சித்தார்த்தின் ‘சித்தா’- ஒடிடி ரிலீஸ் அப்டேட்

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

siddarth chiththa ott release update

 

எடாகி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சித்தார்த், அஞ்சலி நாயர், நிமிஷா சஜயன், குழந்தை நட்சத்திரங்கள் பஃபியா, சஹஸ்ரா ஆகியோர் நடித்திருந்த படம் ‘சித்தா’. இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் மற்றும் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளனர். கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

 

குழந்தை கடத்தல் மற்றும் குழந்தை பாலியல் துன்புறுத்தல் போன்ற முக்கியமான சமூகப் பிரச்சினைகளை அழுத்தமாகப் பேசியிருக்கும் இப்படம் விமர்சகர்களாலும் பாரட்டப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி நவம்பர் 28 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.