Skip to main content

முகம் வீங்கியபடி ஸ்ருதிஹாசன் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

shruthi hassan post makes fans shock

 

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அந்த வகையில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்திலும், நடிகர் பாலமுரளி கிருஷ்ணா நடிப்பில் தயாராகி வரும் 'வீர சிம்ஹா ரெட்டி' படத்திலும், சிரஞ்சீவிக்கு ஜோடியாக 'வால்டேர் வீரய்யா' எனும் படத்திலும் நடித்து வருகிறார். 

 

இதனிடையே ஹாலிவுட்டில் பிரபல நிறுவனமான டிசி தயாரிக்கும் 'தி சான்ட்மேன்: ஆக்ட் III' ஆடியோ நாடகத்திலும் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹாலிவுட்டிலும் நடிகையாக அறிமுகமாகிறார். டாப்னே ஷ்மோன் என்ற பெண் இயக்குநர் இயக்கும் 'தி ஐ' (The Eye) படத்தில் நடிக்கிறார். 

 

இந்நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து வரும் ஸ்ருதிஹாசன், தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். எப்போதும் ஸ்ருதிஹாசன் புகைப்படங்களை ரசிக்கும் ரசிகர்கள் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகியுள்ளனர். 

 

அந்தப் புகைப்படத்தில் முகம் வீங்கியபடியும், மேக்கப் இல்லாமலும் ஸ்ருதிஹாசன் உள்ளார். மேலும், அந்தப் பதிவில், "சரியான செல்ஃபிக்கள் மற்றும் பதிவுகள் நிறைந்த இந்த உலகில் பதிவிடுவதற்கு தேர்வு செய்யாத புகைப்படங்கள் இவை. மோசமான தலைமுடி, காய்ச்சல் மற்றும் சைனஸ் காரணமாக முகம் வீங்கிய நாள், மாதவிடாய் நாள் மற்றும் பல… இதையும் நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

இதைக்கண்டு ரசிகர்கள் ஷாக்கானாலும், ஒரு பிரபலமாக இருக்கும் ஸ்ருதிஹாசன் இது போன்று புகைப்படங்களை வெளியிடுவதற்கு தைரியம் வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர். 

 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடக்கம்; ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு கோடி இழப்பா? 

Published on 06/03/2024 | Edited on 07/03/2024
Too much loss per hour for Block Facebook, Instagram

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு, மார்க் ஜுக்கர்பெர்க் என்பவர் தொடங்கிய நிறுவனம் ஃபேஸ்புக். உலகம் முழுவதும் உள்ள இணைய பயனர்களுக்கு தங்களது கருத்துகள் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைத்தளமாக ஃபேஸ்புக் முன்னிலையில் உள்ளது. தற்போது, மார்க் ஜுக்கர்பெக் மெட்டா எனும் நிறுவனத்தைத் தொடங்கி அதன் கீழ் ஃபேஸ்புக் மற்றும் மற்றொரு பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை நிர்வகித்து வருகிறார்.

உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபலமான சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் செயல்பாடுகள், திடீரென்று உலகம் முழுவதும் நேற்று (05.03.2024) இரவு 9 மணியளவில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை முடங்கியிருந்தது. சமூக வலைத்தள கணக்குகளின் பக்கங்கள் தானாகவே லாக் அவுட் (Logout) ஆகியதால் பயனர்கள் தவித்து வந்தனர். மேலும் தகவல் தொடர்பு கிடைக்காததால் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் இணையவாசிகள் அவதியடைந்தனர். இதனையடுத்து, தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்டு 2 தளங்களும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன. 

இந்நிலையில், மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் 1 மணி நேரம் முடங்கியதால் அமெரிக்க பங்குச் சந்தையில் மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு 1.6 சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் 23,127 கோடி இழந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 

‘புளூம்பெர்க்’ என்ற நிறுவனம் நேற்று (05-03-24) வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் குறித்த புதிய பட்டியலில், 179 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் 4வது பெரும் பணக்காரராக மெட்டா சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க் இருந்தார். இதற்கிடையே, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் நேற்று 1 மணி நேரம் முடங்கியதால், மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் $2.79 பில்லியன் டாலர் குறைந்து தற்போது $176 பில்லியனாக உள்ளது. இருப்பினும், உலகின் நான்காவது பணக்காரர் என்ற நிலையை மார்க் ஜுக்கர்பெர்க் தக்க வைத்துள்ளார். 

Next Story

பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பேஸ்புக், இன்ஸ்டாகிராம்!

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Facebook, Instagram shocked the users

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்கள் முடங்கியுள்ளன.

உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபலமான சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் செயல்பாடுகள் உலகம் முழுவதும் இன்று (05.03.2024) இரவு 9 மணியளவில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை முடங்கியிருந்தது. சமூக வலைத்தள கணக்குகளின் பக்கங்கள் தானாகவே லாக் அவுட் (Logout) ஆகியதால் பயனர்கள் தவித்து வந்தனர். மேலும் தகவல் தொடர்பு கிடைக்காததால் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் இணையவாசிகள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், தற்போது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயல்படத் தொடங்கியது.