Skip to main content

இவர்தான் அந்தப் பெண் ஒளிப்பதிவாளர்- ஷாந்தனு ட்வீட்!

Published on 19/05/2020 | Edited on 19/05/2020

 

shanthanu


கரோனாவின் தாக்கத்தால் தேசிய ஊரடங்கு அமலில் இருப்பதால் வீட்டிலிருந்தவாறு 'கொஞ்சம் கரோனா கொஞ்சம் காதல்' என்ற குறும்படத்தை எழுதி, இயக்கி வெளியிட்டுள்ளார் சாந்தனு. 

இதில் அவரும், அவரது மனைவி கீர்த்தியும் இணைந்து நடித்துள்ளனர். முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்டுள்ள இந்தக் குறும்படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
 


இந்தக் குறும்படத்தைப் பார்த்த பலருக்கும், ஒளிப்பதிவாளர் இடத்தில் யுவஸ்ரீ என்ற பெண்ணின் பெயர் இருந்தது. யார் இவர் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். 

இதனைத் தொடர்ந்து, யார் அந்த ஒளிப்பதிவாளர் யுவஸ்ரீ என்பதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஷாந்தனு. அதில், "யார் அந்தக் கேமரா பெண்மணி என்று வியக்கும் அனைவருக்கும்... அவர்தான் யுவஸ்ரீ. எங்கள் வீட்டில் இருக்கும் பணிப்பெண். எல்லா இடத்திலும் திறமையானவர்கள் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் இவ்வுலகத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். நாம் அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கவேண்டும். அவருக்கு லைக்குகளை வழங்கி, அவர் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அப்பாவின் கண்ணீரை இந்த படம் துடைச்சிருக்கு” - எமோஷனலான ஷாந்தனு

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
shanthanu speech in blte star success meet

'நீலம் புரொடக்‌ஷன்ஸ்' சார்பாக பா. ரஞ்சித் தயாரிப்பில் ஜெய்குமார் இயக்கத்தில் ஷாந்தனு, அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம்  'ப்ளூ ஸ்டார்'. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவான இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். கடந்த 25 ஆம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. இப்படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்ற நிலையில், பா. ரஞ்சித், அஷோக் செல்வன், ஷாந்தனு, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர்.

அதில் ஷாந்தனு பேசுகையில், “இந்த வெற்றிக்காக நான் 15 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருந்தேன். இன்னும் கூட என்னால் இதை நம்பமுடியவில்லை. இப்படி ஒரு நல்ல விஷயம் என் வாழ்வில் நடக்கிறதா..?, என் மனைவியிடம் கூட நேற்று என்னால் நம்பமுடியவில்லை என்று பேசிக் கொண்டிருந்தேன். சக்சஸ் மீட்டில் சந்திப்போம் என்று பலமுறை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசி இருக்கிறோம். ஆனால் சக்சஸ் மீட் என்பது இதுதான் என் வாழ்வில் முதல்முறை. ப்ருத்வி பேசிய அனைத்தும் எனக்கும் பொருந்தும். இப்படத்தின் வெற்றி எப்படிப்பட்ட படத்தை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதை எனக்குக் கற்றுக் கொடுத்தது.  மேலும் என் அப்பா அம்மாவை சந்தோசப்படுத்திப் பார்க்கும் வாய்ப்பை எனக்கு இந்த ப்ளூ ஸ்டார் கொடுத்திருக்கிறது.

ராஜேஷ் என்னும் இந்தக் கதாபாத்திரம் இன்று இந்த அளவிற்கு பேசப்படுகிறது என்றால் அதற்கு முழு முதற்காரணம் வசனம் எழுதிய எழுத்தாளர் தமிழ் பிரபா மற்றும் இயக்குநர் ஜெயக்குமார் இருவரும் தான். அவர்களுக்கு பெரிய நன்றி.  எழுத்தாளர் ஒரு படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை நான் முதலில் என் அப்பாவிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.. இப்பொழுது ப்ளூ ஸ்டார் படத்தின் மூலம் அது மீண்டும் நிரூபனமாகி இருக்கிறது. என் அப்பா, எத்தனையோ நடிகர்களுக்கு நான் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்கிறேன்… ஆனால் என் மகனுக்கு என்னால் அப்படி ஒரு வெற்றியைக் கொடுக்க முடியவில்லையே என்று கண்கலங்கி இருக்கிறார். ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றி அந்தக் கண்ணீரைத் துடைத்திருக்கிறது. அதற்காகவும் இப்படக்குழுவினருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்த வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்து என் அப்பா இயக்குநர் கே.பாக்யராஜ் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அது மிகவும் எமோஷனலாக இருந்தது” என்றார். 

Next Story

“எனக்கென்று ஒரு அடையாளம் இல்லையே என்று கவலைப்பட்டேன்” - ப்ருத்வி பாண்டியராஜன்

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Prithvirajan speech in blue star success meet

'நீலம் புரொடக்‌ஷன்ஸ்' சார்பாக பா. ரஞ்சித் தயாரிப்பில் ஜெய்குமார் இயக்கத்தில் ஷாந்தனு, அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம்  'ப்ளூ ஸ்டார்'. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவான இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். கடந்த 25 ஆம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. இந்த வெற்றியைப் படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடியது.

இப்படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்ற நிலையில், பா. ரஞ்சித், அஷோக் செல்வன், ஷாந்தனு, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். அதில் ப்ருத்வி பாண்டியராஜன் பேசுகையில், “இப்படி ஒரு வெற்றிக்காகத்தான் நான் 18 ஆண்டுகளாக காத்துக் கொண்டு இருந்தேன்… எல்லோரும் என்னை பாண்டியராஜனின் பையன்  என்று சொல்லும் போது ஆரம்பத்தில் சந்தோசமாக  இருந்தது. பின்னர் எனக்கென்று ஒரு அடையாளம் இல்லையே என்று கவலைப்பட்டேன்… ஆனால் இன்று ப்ளூ ஸ்டார் படத்தைப் பார்த்துவிட்டு, எல்லோரும் என்னை என் பெயரைக் கூட சொல்லிக் கூப்பிடாமல் என் கதாபாத்திரத்தின் பெயரான சாம், சாம் என்று சொல்லிக் கூப்பிடும் போது மிகவும் சந்தோசமாகவும் பெருமையாகவும் இருந்தது. இந்த வெற்றியை எனக்குக் கொடுத்த இயக்குநர் ஜெயக்குமாருக்கும் என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் இயக்குநர் பா.ரஞ்சித்திற்கும் லெமன் லீஃப் புரொடக்‌ஷன்ஸ் கணேசமூர்த்தி மற்றும் சவுந்தர்யாவுக்கும் நன்றிகள்.

அசோக்செல்வன் ஒரு தன்னலமற்ற கதாநாயகன். தான் மட்டும் ஸ்கோர் செய்தால் போதும் என்று நினைக்காமல் தன்னோடு சேர்ந்து நடிப்பவர்களும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நடிகர், எனக்குத் தெரிந்து அசோக் மட்டும் தான். ஆரம்பத்தில் இருந்தே என்னிடம், ‘இப்படம் கண்டிப்பாக உனக்கு பெரிய திருப்புமுனையாக இருக்கும், அவசரப்படாமல் பொறுமையாக இரு..’ என்று கூறினான். அவனுக்கு மீண்டும் நன்றி. இப்படத்தில் நான் இன்று இருக்கிறேன் என்றால், அதற்கு காரணம் என் நண்பன் சாந்தனு தான். அவன் தான் இப்படத்தின் ஆடிஸன் போய்க் கொண்டிருப்பதை என்னிடம் தெரிவித்தான். அவனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்” என்று பேசினார்.