Skip to main content

"மக்களின் வாழ்க்கையைவிட டாஸ்மாக் முக்கியமா?" - நடிகர் செந்தில் கேள்வி! 

Published on 12/06/2021 | Edited on 12/06/2021

 

gdbdbf

 

கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டில் ஊரடங்கு, சில தளர்வுகளுடன் வரும் ஜூன் 21ஆம் தேதிவரை நீட்டித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். கரோனா தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் கூடுதலாக அத்தியாவசிய செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

 

இதற்குப் பொதுமக்களும் பல்வேறு பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இதுகுறித்து நடிகர் செந்தில் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்... "மக்களின் வாழ்க்கையைவிட டாஸ்மாக் முக்கியமா? தயவுசெய்து டாஸ்மாக்கை மூடிவிட்டு மக்களின் உயிரைக் காப்பாற்ற மு.க. ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறோம். நன்றி! #CloseTasmac" என பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கலைஞருடைய விசுவாசி” - விஜயகாந்த் குறித்து செந்தில்

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
senthil about vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். இதையடுத்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது. 

இந்த நிலையில் நடிகர் செந்தில் கண்ணீர் மல்க ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசுகையில், “எந்த செய்தி கேட்கக்கூடாதோ அந்த செய்தியை கேள்விப்பட்டேன். மனசே இல்லை. விஜயகாந்த் நல்ல நடிகர் மட்டுமல்ல, நல்ல மனிதர். அவருடன் நிறைய படங்கள் நடிச்சிருக்கேன். இனிமையாக பழகக்கூடியவர். என்கிட்ட மட்டமில்லை டெக்னீஷியன் முதற்கொண்டு எல்லாரிடமும் பழகுவார். சாப்பிடும்போது கூட சமத்துவமாக எல்லாரையும் பார்ப்பார். அவர் இருக்கும்போது நடிகர் சங்க கடன் அவ்ளோ இருந்தது, அதை அடைத்தார். அதன் பிறகு கலைஞருக்கு தங்க பேனா, பெரிய விழா நடத்தினார். அவர் கலைஞருடைய விசுவாசி. பல நன்மைகள் எல்லாருக்கும் செய்திருக்கார். வேலை செய்பவர்கள் கூட விஜயகாந்த் படம் என்றால் குஷியாக இருப்பார்கள். அவரைப் பிரிந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Next Story

செந்திலுடன் பாபி சிம்ஹா... வைரலாகும் புகைப்படம்

Published on 23/06/2022 | Edited on 23/06/2022

 

actor Senthil and his son ManiPrabhu join bobby simha Thadai Udai movie

 

அறிமுக இயக்குநர் என்.எஸ் ராகேஷ் இயக்கும் தடை உடை படத்தில் பாபி சிம்ஹா நடித்து வருகிறார். கதாநாயகன், வில்லன் எனக் கதைக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் நடிக்கும் பாபி சிம்ஹா தடை உடை படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக மிஷா நராங் நடித்து வருகிறார்.  மேலும் இப்படத்தில் செந்தில் மற்றும் அவரது மகன் மணி பிரபு முக்கிய கதாபாத்திரங்களில்  நடிக்கின்றனர்.  ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் கிராமத்து கதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.  

 

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் செந்திலும், அவரது மகன் மணி பிரபுவும் இன்று கலந்துகொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பை விரைந்து முடித்து டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிடத் படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.