Skip to main content

"கதாநாயகர்களை கதையின் நாயகனாக மாற்றியது அவர்தான்" - இயக்குநர் சீனு ராமசாமி பேச்சு!

Published on 10/12/2021 | Edited on 10/12/2021

 

seenu ramasamy

 

ஆர்.கே.வி இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் பிரேம்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கடைசி காதல் கதை'. இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், இயக்குநர் கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், சீனு ராமசாமி உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். 

 

ad

 

நிகழ்வில், இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில், "படத்தின் டீசரை இன்னும் நான் பார்க்கவில்லை. ஆனால், போஸ்டர் டிசைனை பார்த்தேன். அதை பார்க்கும்போதே மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டது. படத்தின் இயக்குநர் ஆர்.கே.வி எனக்கு 20 ஆண்டு கால நண்பர். அவர் ஒரு கதைப்புலி. எப்போதும் சினிமாவில் இயங்கிக்கொண்டிருப்பார். சினிமா மீது அவர் வைத்துள்ள நம்பிக்கைதான் புது முகங்களை வைத்து இப்படி ஒரு படத்தை அவரை எடுக்க வைத்துள்ளது. அந்த நம்பிக்கை வீண் போகாது. நிச்சயம் வெற்றிபெறும்.  

 

சமீபத்தில் ஒரு ஓடிடி நிறுவனம் என்னை அழைத்துப் பேசியது. அப்போது பேசும்போது கதையம்சம் கொண்ட படங்களை இயக்கும் இயக்குநர்கள் இனி நம்பிக்கையாக இருக்கலாம் சார் என ஒருவர் கூறினார். புதிதாக ஏழு ஓடிடி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் வர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கேட்பதற்கே மிகவும் சந்தோசமாக இருந்தது. இது படைப்பாளிகளுக்கு நம்பிக்கையான காலமாக இருக்கிறது. 

 

கே.எஸ்.ரவிக்குமார் மாதிரியான ஜாம்பவானை இந்த விழாவிற்கு அழைத்ததே ஆர்.கே.வியின் பெரிய வெற்றி. அவர் எடுத்த படங்களை இன்று பார்க்கும்போது எவ்வளவு மெனக்கெடலுடன் அவர் வேலை பார்த்துள்ளார் என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. அதேபோல கே.பாக்யராஜ் சாரும் வருகை தந்துள்ளார். தமிழ் சினிமாவில் கதாநாயகர்களை கதையின் நாயகனாக மாற்றியது அவர்தான். இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்" எனக் கூறினார்.      

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘தேரு போல அசஞ்சு வந்தவளே...’ - குத்தாட்டம் போடும் ஜி.வி. பிரகாஷ்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Idimuzhakkam first single released

ஜி.வி. பிரகாஷ் நடிகராக இடி முழக்கம், 13, கள்வன், டியர், கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இசையமைப்பாளராக தங்கலான், அமரன், சூர்யாவின் 43வது படம் என ஏகப்பட்ட படங்களில் பணியாற்றுகிறார். 

இதில் சீனு ராமசாமி இயக்கத்தில் இடி முழக்கம் உருவாகி வருகிறது. கலைமகன் முபாரக் தயாரிக்கும் இப்படத்தில் காயத்ரி, கஞ்சா கருப்பு, சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். என்.ஆர். ரகுநந்தன் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் கடந்த மாதம் நடந்த பூனே சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்திய சினிமா பிரிவில் திரையிடப்பட்டது. 

இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாடலாக  ‘அடி தேனி சந்தையில்...’ என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி இப்பாடலைத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். வரதன் எழுதியுள்ள இப்பாடலை அந்தோனி தாசன் மற்றும் மீனாட்சி இளையராஜா இணைந்து பாடியுள்ளனர். திருவிழாவில் நடக்கும் குத்து பாடலாக இப்பாடல் அமைந்துள்ள நிலையில், பாடலுக்கேற்ற குத்தாட்டம் போட்டுள்ளார் ஜி.வி. பிரகாஷ்.

Next Story

நடிகர் அவதாரமெடுக்கும் இயக்குநர் சீனுராமசாமி; பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

 Director Seenuramasamy, who plays the actor; first Look Poster Release

 

தமிழ் சினிமாவில் கூடல்நகர் திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் சீனுராமசாமி. தொடர்ந்து தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் போன்ற படங்கள் இயக்கியதன் மூலமாக அனைத்து விதமான ரசிகர்களையும் ஈர்த்தவர். இவருடைய இடம் பொருள் ஏவல், இடி முழக்கம் ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.

 

இவரது இயக்கத்தில் வெளியான தர்மதுரை திரைப்படத்தில் நூலகராக ஒரு காட்சியில் மட்டும் இடம்பெறுவார். தற்போது புதுமுக இயக்குநர் விஜய் கார்த்திக் இயக்கும் "ஈகுவாலிட்டி” என்ற திரைப்படத்தில் முழுவதுமாக நடித்திருக்கிறார். இது குறித்து இயக்குநர் சீனுராமசாமி தன்னுடைய வலைதள பக்கத்தில் “குறை நிறைகளோடு என் படைப்புகளை ஆதரித்து அங்கீகரித்த தமிழ் சமூகம் எனை நடிகனாகவும் ஏற்று கொள்ளும் என்ற நம்பிக்கையில் நான் நடித்த திரைப்படத்தின் முதல் பார்வையை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்” என்று போஸ்டரை வெளியிட்டுள்ளார்.