Skip to main content

“டைட்டிலுக்கு 50 லட்சம் கேக்குறாங்க” - சசிகுமார் வேதனை

Published on 16/11/2022 | Edited on 16/11/2022

 

sasikumar speech at Naan Mirugamaai Maara press meet

 

இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நான் மிருகமாய் மாற'. இப்படம் வருகிற 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்தது படக்குழு. அதில் சசிகுமார், கதாநாயகி ஹரிப்பிரியா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் பங்கேற்றனர். 

 

ad

 

அப்போது சசிகுமார் பேசுகையில், "இது ஒரு வயலண்டான கதை. ஆனால், அதற்குள் ஒரு  குடும்பம், குழந்தை, மனைவி என இருந்தது. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படத்தில் அதிகக் காட்சிகளில் மழை இருக்கும். அதனால் மழை இப்படத்தில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும். 

 

இப்படத்தில் நான் சவுண்ட் என்ஜீனியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஹீரோயின் ஹரிபிரியா என்னைப் பார்த்து ரொம்ப பயந்தாங்க. அதற்கான காரணத்தை நான் சொல்லிவிடுகிறேன். எங்களுடைய காட்சிகள் எல்லாம் தன்மையான முறையில் தான் இருந்தது. அவருடன் எந்த ஆக்சஷன் காட்சிகளும் படமாக்கப்படவில்லை. அதனால் என் ஆக்சஷன் காட்சிகளைப் பார்த்து பயந்தாங்க. இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சத்யசிவாவின் அடுத்த படத்திலும் நடிக்கிறேன்" எனப் பேசினார்.

 

பின்பு இப்படம் தலைப்பு மாற்றப்பட்டது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சசிகுமார், "இந்தப் படம் முதலில் 'காமன் மேன்' என்ற தலைப்பில் தான் இருந்தது. ஆனால் அந்த தலைப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. இந்த தலைப்பை ஏற்கனவே ஒருத்தர் வைத்திருந்தார். பின்பு எங்களுக்கும் கொடுத்திருந்தாங்க. இப்பலாம் ஒரு டைட்டிலுக்கு 25 லட்சம், 50 லட்சம் கேக்குறாங்க. அதன் காரணமாக தயாரிப்பாளர் வேண்டாம் என முடிவெடுத்துவிட்டார்." என வேதனையுடன் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ராங்கி தொழில்நுட்பக் குழுவைப் பாராட்டித் தள்ளிய திரிஷா

Published on 28/12/2022 | Edited on 28/12/2022

 

Trisha praise Raangi technical team

 

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு திரிஷாவின் சினிமா கிராஃப் மீண்டும் உயரத் தொடங்கியிருக்கிறது. அந்த வகையில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தந்து வெளியாக இருக்கிற ராங்கி திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நடிகை திரிஷா பேசியதாவது..

 

“ஒரு நடிகையாக நான் நடித்து முடித்து போய்விடுவேன். அதற்குப் பிறகு இந்தப் படம் வெளிவர உழைப்பது தொழில்நுட்பக் குழு தான். அவர்களுக்கு என் வாழ்த்துகள். என்னைப் பொறுத்தவரை இவர்கள் தான் ஒரு படம் சிறப்பாக அமைய முக்கியக் காரணமாகும். படத்தின் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் மற்றும் இவர்களை வேலை வாங்குகிற இயக்குநர் ஆகியோரின் பங்களிப்பு மிக மிக முக்கியம்.

 

படத்தின் ஸ்டண்ட் மாஸ்டருக்கு நன்றி. நீங்க வாங்க, நாம பார்த்துக்கலாம் என்று தைரியமாக களம் இறக்கியவர் அவர்தான். ஸ்பாட்ல போயி தான் ரிகர்சலே பண்ணுவோம். ஒரு படப்பிடிப்பு தளத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தராமல் ரொம்ப ஜாலியாக இருந்ததற்கு காரணமே படப்பிடிப்பின் தொழில்நுட்பக் குழுவைச் சேர்ந்தவர்கள் தான். இந்த நிகழ்விற்கு பல உதவி இயக்குநர்கள் வரல. ஆனால், பின்னால் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உழைப்பு அர்ப்பணிப்பு நிறைந்தது.” என்றெல்லாம் பாராட்டினார்.


 

Next Story

"இப்ப சின்ன இருமல்னா கூட, எனக்கு பெரிய செய்தி..." - நடிகர் கமல்ஹாசன்

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

 

"Even if I have a small cough, I have big news..."- Actor Kamal Haasan Anguish!

 

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'DSP' திரைப்படத்தின் பாடல் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (25/11/2022) நடைபெற்றது. விழாவில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மிஷ்கின், நடிகர் வைபவ் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசன், "சகோதரர் விஜய் சேதுபதியின்  'DSP'-க்காக இங்கு வந்திருக்கேன். படம் வெற்றி பெற எனது வாழ்த்துகள். ட்ரைலர் பார்த்தேன். ரொம்ப நல்லாருந்துச்சி. விழாவின் போது சொன்னேன், முன்பெல்லாம் பெரிய விபத்து நேரும் போது கூட, அடுத்து எப்ப ஷூட்டிங் வரீங்கனு கேட்பாங்க. அடுத்தப் படம் எப்ப ரிலீஸ்னு கேட்பாங்க.

 

இப்ப சின்ன இருமல்னா கூட, எனக்கு பெரிய செய்திகள் எல்லாம் வந்துட்டு இருக்கு. அதற்குக் காரணம் ஒன்று ஊடகம், மற்றொன்று பெருகியிருக்கும் அன்பு என்று நான் நம்புகிறேன். நன்றாக இருக்கிறேன். ‘இந்தியன் 2’ படத்துக்கான அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆரம்பித்துள்ளது" எனத் தெரிவித்தார்.