Skip to main content

“நிலையற்ற வாழ்வில் அவரது மறைவு பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது” - சரத்குமார் இரங்கல்

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
sarathkumar condolence message for director surya prakash passed away

ராஜ்கிரண் மற்றும் வனிதா விஜயகுமார் நடிப்பில் 1996ஆம் அண்டு வெளியான மாணிக்கம் படத்தை இயக்கியவர் சூர்யபிரகாஷ். இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், தொடர்ந்து சரத்குமாரை வைத்து மாயி மற்றும் திவான் என இரண்டு படங்களை இயக்கியுள்ளார். மேலும் ஜீவன் நடித்த அதிபர் மற்றும் தெலுங்கில் ராஜசேகர் நடித்த பாரதசிம்ஹா ரெட்டி ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து, வருசநாடு என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வந்தார். இந்த படம் வெளியாவதில் தாமதமாகி வருகிறது. 

இந்த நிலையில் இன்று அதிகாலை இயக்குநர் சூர்யபிரகாஷ் மறைந்துள்ளார். மாரடைப்பு காரணமாக மறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவரது மறைவு திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது மறைவுற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சரத்குமார், “எனது நடிப்பில் வெளியான மாயி, திவான் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்யபிரகாஷ் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஜெயிச்சே ஆகணும்...'-அங்கப்பிரதட்சணம் செய்த சரத்குமார்

Published on 03/06/2024 | Edited on 03/06/2024
 'victory will come soon...'-Sarathkumar who performed Angakpradhatsanam

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக நடைபெற்றது. அதன்படி, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி, முதல் கட்டமாகத் தமிழகம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் 18-வது ஜனநாயகத் திருவிழா தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஒவ்வொரு தொகுதிகளிலும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று 01-06-24 அன்று 6 மணியுடன் முடிவடைந்தது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி (நாளை) எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் பாஜக கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் நடிகர் சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிட்டு உள்ளார். இந்நிலையில் நாளை வாக்குகள் எண்ணப்பட இருப்பதால் தனது மனைவியும் பாஜக வேட்பாளருமான ராதிகா சரத்குமார் மற்றும் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவிலில் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் வழிபாட்டில் ஈடுபட்டனர்.

பின்னர் நடிகர் சரத்குமார் கோவிலை சுற்றி அங்கப்பிரதட்சணம் செய்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையங்களில் வைரலாகி வருகிறது. அதே விருதுநகர் தொகுதியில் மறைந்த நடிகர் விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக கட்சியின் சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்ட பலர் போட்டியிடுகின்றனர். இதனால் விருதுநகர் தொகுதி ஸ்டார்ட் தொகுதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது

Next Story

மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல நடிகர் 

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
Johnny Wactor passed away in robbery incident

ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் கவனம் செலுத்தி வந்தவர் நடிகர் ஜானி வேக்டர். ஜெனரல் ஹாஸ்பிட்டல் என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவர் கடந்த 25ஆம் தேதி அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் அதிகாலை 3.30 மணியளவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருக்கு வயது 37.

இது தொடர்பாக ஆங்கில ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மே 25ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் ஜானி வேக்டர், சக ஊழியருடன் இருந்த போது மாஸ்க் அணிந்த மூன்று மர்ம நபர்கள் அவரது காரில் உள்ள ஒரு பொருளை திருட முயல்வதைப் பார்த்துள்ளார். அவர்களை நோக்கி போகும் போது மர்ப நபர்களில் ஒருவர், ஜானி வேக்டரரை சுட்டுள்ளார். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். 

இந்தச் சம்பவம் ஹாலிவுட் திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஜானி வேக்டரின் தாயார், ஒரு ஆங்கில ஊடகத்தில், “என் மகன் திருடர்களோடு சண்டையிடவில்லை. இருப்பினும் அவனைச் சுட்டுக்கொன்று விட்டனர். உடனே மூவரும் தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் பற்றிய விவரங்கள் மறைக்கப்பட்டு ஒருவர் கூட இன்னும் கைது செய்யப்படவில்லை” எனக் கூறினார்.