Skip to main content

அடுத்தடுத்த அறிவிப்புகள்... சமரசமின்றி தயாராகும் சமந்தா படம்

Published on 27/12/2021 | Edited on 27/12/2021

 

samantha starring yashoda movie first schedule shoot wrapped

 

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, டப்பிங் பணியில் தீவிரம் காட்டிவருகிறது. இப்படத்தை தொடர்ந்து நடிகை சமந்தா 'யசோதா' திரைப்படத்தில் நடித்துவருகிறார். இயக்குநர்கள் ஹரி ஷங்கர் மற்றும் ஹரி நாராயணன் இருவரும் இணைந்து இப்படத்தை இயக்குகின்றனர். மணிசர்மா இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தில், நடிகை வரலட்சுமி சரத்குமார் மதுபாலாவாக நடிக்கிறார். 

 

இந்நிலையில், யசோதா படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இப்படம் குறித்து தயாரிப்பாளர் கூறுகையில்," தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எந்த ஒரு சமரசமின்றி தயாரித்து வருகிறோம். முதற்கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்த நாங்கள் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பை ஜனவரி 3ஆம் தேதிமுதல் 12ஆம் தேதிவரையும், இறுதிக்கட்ட படப்பிடிப்பை ஜனவரி 20ஆம் தேதிமுதல் மார்ச் 31 ஆம் தேதிவரையும் நடத்த திட்டமிட்டுள்ளோம் "எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கக் கோவிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம்

Published on 16/07/2023 | Edited on 16/07/2023

 

Actress Samantha Swamy Darshanam at Golden Temple


வேலூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ நாராயணி தங்க கோவில். இங்கு நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும்  நடிகர் நடிகைகள் வந்து சாமி தரிசனம் செய்ய வருகை தருவது வழக்கம்.

 

Actress Samantha Swamy Darshanam at Golden Temple

 

இந்நிலையில் நேற்று பொற்கோவிலுக்கு வந்த பிரபல நடிகை சமந்தா ஸ்ரீ நாராயணி அம்மனை தரிசனம் செய்துள்ளார். பின்பு தங்கத்தினால் ஆன சொர்ணலட்சுமி அம்மன் சிலைக்கு தனது கையால் அபிஷேகம் செய்தும், தீபாராதனையும் செய்த பிறகு கோயிலை சுற்றி வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து பொற்கோயில் மடாதிபதி சக்தி அம்மாவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். அவருக்கு சக்தி அம்மா பிரசாதத்தை வழங்கியுள்ளார். வேலூர் பொற்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த சமந்தாவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்களை நடிகை சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

 

Next Story

சமந்தா படத்திற்கு எதிரான வழக்கு - நீதிமன்றம் அதிரடி

Published on 25/11/2022 | Edited on 25/11/2022

 

Samantha's Yashoda movie case OTT release delayed

 

சமந்தா நடிப்பில் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் கடந்த 11 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் படம் 'யசோதா'. இப்படத்தை 'ஸ்ரீ தேவி மூவிஸ்' நிறுவனம் தயாரிக்க ஹரி ஷங்கர் மற்றும் ஹரிஷ் நாராயணன் இருவரும் இணைந்து இயக்கியிருந்தார்கள். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க மணி சர்மா இசையமைத்திருந்தார். வாடகைத் தாய் கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளதால் மருத்துவமனை சம்மந்தப்பட்ட காட்சிகள் அதிகம் இப்படத்தில் இடம்பெற்றிருந்தன.

 

இந்நிலையில் ஹைதராபாத் சிவில் நீதிமன்றத்தில் ஒரு தனியார் மருத்துவமனை நிர்வாகம் 'யசோதா' படத்தில் தங்களுடைய மருத்துவமனையின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி எங்களுடைய நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கானது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. 

 

வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை அடுத்த மாதம் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதுவரை 'யசோதா' படத்தை ஓடிடியில் வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே யசோதா படத்தை டிசம்பர் மாதம் ஓடிடியில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டதாகவும் அது தற்போது தாமதமாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.