Skip to main content

"நீதானே என் பொன்வசந்தம்..." - முன்னாள் கணவருடன் வாழ்ந்த வீட்டை சொந்தமாக்கிய சமந்தா

Published on 29/07/2022 | Edited on 29/07/2022

 

Samantha buys house where she used live with Naga Chaitanya

 

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவர் நடிகை சமந்தாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இது திரையுலகினர் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.   இதனைத் தொடர்ந்து இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். 

 

ad

 

இந்நிலையில் நடிகர் சமந்தா தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் ஒன்றாக வாழ்ந்த ஹைதராபாத் வீட்டை விலைக்கு வாங்கியுள்ளார். சமந்தா - நாக சைதன்யாவின் பிரிவிற்கு பிறகு அந்த வீடு விற்கப்பட்ட நிலையில் நடிகை சமந்தா தற்போது அந்த வீட்டை வாங்கியவரிடம் இருந்து அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதாக  கூறப்படுகிறது. மேலும் அந்த வீட்டில் தற்போது தனது அம்மாவுடன் சமந்தா வாழ்ந்து வருகிறாராம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரசிகரின் கேள்வியும் - சமந்தாவின் பதிலும்  

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
samantha reacted fans comment regards naga chaitanya

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. சென்னையில் உள்ள பல்லாவரத்தை சேர்ந்தவரான இவர், விஜய், சூர்யா, சிம்பு, அல்லு அர்ஜூன், நானி போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்து புகழ்பெற்றவர். கடந்த 2010 ஆம் ஆண்டு 'விண்ணைத் தாண்டி வருவாயா' தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக சமந்தா தொடங்கிய திரையுலகப் பயணம் குறுகிய காலத்தில் பேன் இந்திய அளவில் வளர்ந்துள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரங்களிலும் தனித்துவமாக நடித்து தனக்கென்று தனியிடத்தை திரையுலகில் பிடித்தவர் சமந்தா. திரையுலகில் வளர்ந்த நட்சத்திரமாக சமந்தா இருந்தாலும், 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற படத்தின் மூலம் சமகால உச்ச நட்சத்திரம் நயன்தாராவுடன் எந்த வித ஈகோவுமின்றி நடித்தார். 

இதனிடையே, நடிகை சமந்தா டோலிவுட்டின் பிரபல நடிகர் நாக சைதன்யா உடன் காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணமான 4 ஆண்டுகளில் நாக சைதன்யாவை தனிப்பட்ட காரணங்களால் விவாகரத்து செய்தார். இருவரும் விலகி தனியாக வசித்து வருகின்றனர். அதன் பிறகும் நடித்து வந்த சமந்தா, புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து 'ஊ சொல்றியா மாமா..' என்ற பாடலுக்கு மட்டுமே நடனமாடினார். இப்பாடல் மிகப்பெரிய ஹிட்டானது. இதனிடையே, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா நடிப்பில் இருந்து தற்காலிக பிரேக் எடுத்துக் கொள்ளப்போவதாக அறிவித்தார். அதன் பின்னர், வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்த பிறகு நீண்ட நாள்களாக ஓய்விலிருந்த சமந்தா கடந்த ஆண்டுதான் படங்களில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். உடல்நலக்குறைவில் இருந்து மீண்டு வந்த பிறகு விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்த 'குஷி' படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து ஆங்கில வெப்சீரிஸான 'சிட்டாடெல்'-இன் இந்தி ஸ்பின் ஆஃப் வெர்ஷனில் நடித்தவர், கொஞ்ச நாள்கள் எந்தப் படங்களிலும் கமிட்டாகாமல் ஓய்வெடுக்கப்போவதாகக் கூறினார்.

தற்போது, ஓய்விலிருந்து திரும்பி உடல் நலம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'ஹெல்த் பாட்கேஸ்ட்' ஒன்றைச் செய்து வருகிறார். இதைத் தொடர்ந்து ஒருசில படங்களிலும் கமிட்டாகி தனது பணியை மீண்டும் தொடர்ந்து வருகிறார். நடப்பு ஆண்டு மூலம் சமந்தா திரைத்துறைக்கு வந்து 14 ஆண்டுகள் கடந்துள்ளது. அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர். அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடும் சமந்தா சமூக வலைத்தளங்களில் ஆரோக்கியம் தொடர்பான பாட்காஸ்ட்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் யோகா வீடியோ ஒன்றை சமந்தா பகிர்ந்துள்ளார். தனது தினசரி வழக்கத்தில் யோகா எவ்வளவு முக்கியமானது? என்பதையும் அதன் பயன்களை விளக்கும் வகையிலும் வீடியோ ஒன்றை சமந்தா பதிவிட்டிருந்தார். அதில், "நான் தினமும் காலை 5.30 மணிக்கு படுக்கையில் இருந்து எழுந்து விடுவேன். சூரிய உதயத்தில் சில நிமிடங்கள் இருப்பேன். அதன்பிறகு மூச்சு பயிற்சி செய்வேன். 25 நிமிடங்கள் தியானம் செய்வேன். உற்சாகமாக அன்றைய தினத்தை தொடங்க இதன் மூலம் எனக்கு அதிகமான சக்தி கிடைக்கிறது..'' என ஆங்கிலத்தில் பேசியிருந்தார்.  

ஆனால், அந்த வீடியோவிற்கு கருத்து தெரிவித்த ரசிகர் ஒருவர் சமந்தாவை சங்கடப்படுத்தும் வகையில் கேள்வி ஒன்றை கேட்டார். அந்த ரசிகர், “ஏன் உங்கள் அப்பாவி கணவன் நாக சைதன்யாவை ஏமாற்றினீர்கள் என்பதை சொல்லுங்கள்..” என்று பதிவிட்டார். அந்த வீடியோவிற்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கமெண்ட் குவிந்த நிலையில், முன்னாள் கணவர் பற்றி ரசிகர் கேட்ட கேள்விக்கு மட்டும் சமந்தா பதில் அளித்துள்ளார். அதில், “மன்னிக்கவும்.. இந்த யோகா நடைமுறைகள் உங்களுக்கு உதவாமல் போகலாம். உங்களுக்கு வலிமையான ஒன்று தேவைப்படலாம்.. நல்லா இருங்க..” என்று பதிவிட்டுள்ளார். சமந்தாவின் இந்தக் கருத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், இதுபோன்ற ஹேட்டர்களுக்கு பதிலளித்து உங்கள் தரத்தை குறைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் எந்த விஷயமும் தெரியாமல் இதுபோன்ற கேள்விகளை எப்படி உங்களால் கேட்க முடிகிறது, அது அவரது தனிப்பட்ட வாழ்க்கை என்று சமந்தாவிடம் கேள்வி எழுப்பிய பயனருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

சமந்தாவைத் தொடர்ந்து ஸ்ருதிஹாசனும் விலகல் - ரசிகர்கள் குழப்பம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Following Samantha, Shruti Haasan also quit in chennai story

2021ஆம் ஆண்டு சமந்தா நடிப்பில் ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான் இயக்கத்தில் சென்னை ஸ்டோரி என்ற தலைப்பில் ஒரு சர்வதேச படம் உருவாகுவதாக அறிவிப்பு வெளியானது. இப்படம் டிமேரி என் முராரி எழுத்தில் 2004ஆம் ஆண்டு வெளியான ‘தி அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ்’ என்ற ரொமாண்டிக் காதல் நாவலைத் தழுவி எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இதன் படப்பிடிப்பு தொடங்கியிருந்த சூழலில் சமந்தா விலகினார். இதற்கு தசை அலர்ஜி பாதிப்பு காரணம் எனக் கூறப்பட்டது. இதையடுத்து ஸ்ருதிஹாசன் கமிட்டானார். மேலும் இங்கிலாந்தைச் சேர்ந்த விவேக் கல்ரா, கெவின் ஹார்ட், ஜான் ரெனோ உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க கமிட்டாகினர்.

Following Samantha, Shruti Haasan also quit in chennai story

சமீபத்தில் இதன் படப்பிடிப்பிலும் ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டார். இந்த நிலையில் ஸ்ருதிஹாசனும் தற்போது சென்னை ஸ்டோரி படத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இப்படத்தில் கமிட்டாகி வரும் நடிகைகள் விலகிவருவது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.