Skip to main content

சூப்பர்ஹிட் பான் இந்தியா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் சமந்தா, விஜய் சேதுபதி!

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

Samantha and Vijay Sethupathi to join 'Pushpa 2

 

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த படம் 'புஷ்பா – தி ரைஸ்'. இப்படத்தில் ராஷ்மிகா மந்தானா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தின் இசைப் பணிகளை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொண்டார். இவர் இசையில் வெளியான அனைத்துப் பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக சமந்தா சிறப்புத் தோற்றத்தில் நடனமாடிய 'ஊ...சொல்றியா மாமா' பாடலை இளைஞர்கள் கொண்டாடித் தீர்த்தனர். 

 

சமீபத்தில் கூட ஒரு விருது விழாவில் சல்மான் கானிடம், 'உங்களுக்குப் பிடித்த பாடல் எது' என்ற கேள்வி கேட்கப்பட்ட போது, 'ஊ அண்டவா மாமா' பாடலை குறிப்பிட்டார். இதனை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனது அன்பைத் தெரிவித்திருந்தார். இதனிடையே 'புஷ்பா – தி ரைஸ்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'புஷ்பா 2' படத்திற்கான ஆரம்பக் கட்ட பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. 

 

இந்நிலையில் 'புஷ்பா 2' படத்திலும் சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் ஒரு குத்து பாடல் உள்ளதாகவும், அதில் சமந்தா நடித்தால் இந்த பாடலும் ஹிட் ஆகும் எனவும் படக்குழு நம்புவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சமந்தாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு இப்படத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த முன்னணி நடிகை ஒருவரும் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. 

 

மேலும் 'புஷ்பா 2' படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் உயர் அதிகாரியாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்திலேயே விஜய் சேதுபதி நடிக்க இருந்து, பின்பு சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது. அதனால் 'புஷ்பா 2' படத்தில் விஜய் சேதுபதி நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சமந்தாவிற்கு வாழ்த்து தெரிவித்த நயன்தாரா

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
nayanthara wished samantha

சமீப காலமாக சினிமாவில் இருந்து விலகியிருந்தார் சமந்தா. தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், அது பூரண குணமடைய தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டு வருகிறார். கடைசியாக விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்திருந்தார். தமிழில் விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார்.  இப்போது கைவசம் 'சிட்டாடெல்' வெப் தொடர் வைத்துள்ளார். இதன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து டிராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தார். பின்பு சமீபத்தில் இத்தொடரை பார்த்ததாகவும் தங்களுக்கு பிடித்ததாகவும் படக்குழுவுடன் இருக்கும் புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதையடுத்து மீண்டும் நடிப்பிற்கு திரும்புவதாக தெரிவித்திருந்தார். மேலும் உடல்நலம் குறித்த பாட்கேஸ்ட் ஒன்றை வெளியிட்டுவதாக தெரிவித்த அவர் அண்மையில் அதனை வெளியிட்டுருந்தார்.

இந்த நிலையில் சமந்தா கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படம் ‘யே மாயா சேசவே’ என்ற தெலுங்கு படம் இன்று வெளியாகி 14 ஆண்டுகளை கடக்கிறது. இதன் மூலம் திரைத்துறைக்கு அவர் வந்து 14 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நயன்தாரா அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், சமந்தா புகைப்படத்தை பகிர்ந்து நீங்கள் அதிக ஆற்றல் பெற வேண்டும் என்கிற தொனியில் குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார். இருவரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

‘புஷ்ப ராஜ்...’ - அடுத்தடுத்த பாகங்கள் குறித்து அல்லு அர்ஜுன்

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
allu arjun about pushpa 3

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் வெளியான படம் 'புஷ்பா – தி ரைஸ்'. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். இவர் இசையில் வெளியான அனைத்துப் பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக சமந்தா சிறப்புத் தோற்றத்தில் நடனமாடிய 'ஊ...சொல்றியா மாமா' பாடலை இளைஞர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் ‘புஷ்பா தி ரூல்’ என்ற தலைப்பில் தற்போது உருவாகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முன்னோட்ட வீடியோ, கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஆகஸ்ட் 15ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 74வது பெர்லின் சர்வதேச திரைப்படவிழாவில் புஷ்பா படம் திரையிடப்படுகிறது. இதில் கலந்து கொண்ட அல்லு அர்ஜுன், புஷ்பா படத்தின் மூன்றாம் பாகம் குறித்து பேசியுள்ளார். இது தொடர்பாக பிரபல ஆங்கில இணையதளத்திற்கு பேட்டியளித்த அவர், “நிச்சயமாக புஷ்பா படத்தின் மூன்றாம் பாகத்தை எதிர்பார்க்கலாம். நாங்கள் அதை ஒரு தொடராக உருவாக்க விரும்புகிறோம். அற்புதமான யோசனைகளும் திட்டங்களும் அடுத்தடுத்து உள்ளன. புஷ்பா 1 இல் பார்த்ததை விட புஷ்பா 2வில் வித்தியாசமான புஷ்பாவை பார்ப்பீர்கள். அதைவிட பெரிய படமாகவும் இருக்கும்” என்றார்.