Skip to main content

“யாரோ செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பவன் தான் புருஷன்”- எஸ்.வி.சேகர் கலகல பேச்சு

Published on 20/01/2020 | Edited on 20/01/2020

ஆடை படத்திற்கு பின் அமாலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் படம்  ‘அதோ அந்த பறவை போல’.புதுமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தின் கதையை அருண் எழுதியுள்ளார். இந்த படத்தில் அமலா பால் இரு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்பதுபோல டீஸரில் காட்டப்பட்டது.
 

s vee sekar

 

 

இந்நிலையில் இந்த படக்குழுவின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனரும் நடிகருமான எஸ்.வி.சேகர், “சினிமாவில் இரண்டு வகை படங்கள். ஒன்னு ஓடும் படம், மற்றொன்று ஓடாத படம் அவ்வளவு தான். சினிமாவில் ராமராஜன் பசுமாடு வைத்து பால் கறக்கும் படம் ஓடிவிட்டால் அதேபோன்ற டெம்ப்ளேட்டில் பத்துப்படம் எடுப்பார்கள். ஏன் என்றால் இது வியாபாரம். நாங்கள் படம் எடுத்த காலத்தில் பத்து லட்சத்திலேயே படத்தை எடுத்து விடுவோம். நாம் சரியான பொருட்செலவில் படம் எடுக்க வேண்டும்.

இப்போது ஒரு நாளைக்குப் படப்பிடிப்பு செலவு நாற்பது லட்சம் வரை ஆகிறது. திருமலை சொன்னார் இந்த வருடம் 300 தயாரிப்பாளர்கள் புதிதாக வரவேண்டிய இடத்தில் வெறும் 50 புது தயாரிப்பாளர்கள் மட்டுமே வந்திருக்கிறார்கள். என்னை கேட்டால் 250 தயாரிப்பாளர்கள் காப்பாற்றபப்ட்டிருக்கிறார்கள் என்று சொல்வேன். அனைத்து தொழிலிலும் அதை பற்றி தெரிந்துகொண்டுதான் உள்ளே நுழைவார்கள். ஆனால், சினிமா மற்றும் அரசியலில்தான் அதை பற்றி தெரிந்துகொள்ளாமல் உள்ளே வந்து கற்றுக் கொள்கிறார்கள். அரசியலிலாவது மற்றவர்கள் காசில் கற்றுக்கொள்வார்கள் ஆனால் சினிமாவில் தன்னுடைய சொந்த காசை போட்டு கற்றுக்கொள்கிறார்கள்.. முதலில் சினிமாவை தெரிந்து கொண்டு உள்ளே வரவேண்டும். 

சமீபத்தில்கூட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்திற்கு அரசாங்கத்தின் ஸ்பெஷல் அதிகாரியை பணி நியமனம் செய்திருக்கிறார்கள். அப்படியென்றால் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டவர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது என்பதால் அரசாங்கம் சிறப்பு அதிகாரி ஒருவரை நியமிக்கின்றது. நடிகர் சங்கத்தில் ஒரு 30 கோடி, தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு 13 கோடி வரை முற்றிலுமாக வாஷவுட் பண்ணிவிட்டார்கள் என்று சொல்கிறார்கள். இதனால்தான் சிறப்பு அதிகாரி நியமித்திருக்கிறார்கள். இருந்தாலும் அவருக்கு சினிமாத் துறை குறித்து தெரியாது என்பதால் ஒன்பது பேர் கொண்ட ஒரு குழுவை அவர்களுக்கு அட்வைஸரி போல அமைத்திருக்கிறார்கள். 

ஆனால், நாங்கள் ஒன்பது சேர்ந்தால் எதையும் செய்துவிட முடியும் என்று நினைக்காதிங்க அது தவறு. எங்களுக்கு அந்த அதிகாரம் கிடையாது. இதுதான் உண்மையான விஷயம். திருவள்ளூவர் கூட இரண்டே அடியில் சொல்லிகொடுப்பார். ஆனால் மனைவி ஒரே அடியில் சொல்லிக்கொடுத்துவிடுவார். தான் தவறு செய்யாமல் அதற்கு மன்னிப்பு கேட்பவன் மனுஷன் என்று சொல்வார்கள். யாரோ செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பவன்தான் தாலி கட்டிய புருஷன். அதனால் அடிவாங்குவது குறித்து வருத்தப்படாதீர்கள். 

இந்தப் படத்தில் பெரிய பிளஸ் அமலாபால். அவருக்கு எல்லா மொழிகளிலும் மார்க்கெட் இருக்கு. அமலாபாலின் தையரித்தை நான் பாராட்டுகிறேன்.சினிமாவிற்கு சென்சார் தேவையே இல்லை என்பது என் கருத்து. நம்பிக்கை வேறு, ஓவர் நம்பிக்கை வேறு. சரியான நேரத்தில் படத்தை வெளியிடுங்கள். என் படம் எப்போது வெளியானாலும் ஓடும் என்று ஓவர் நம்பிக்கை வைக்காதீர்கள். அதனால், இப்படத்தை அப்படிச் சரியான நேரத்தில் வெளியீட்டு வெற்றி காண வாழ்த்துகிறேன்” என்று பேசியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வருக்கு கோரிக்கை வைத்த எஸ்.வி. சேகர்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

SVee Shekhar request to the Chief Minister mk stalin

 

கிருஷ்ணமணி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கிஷன்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘எமகாதகன்’. பிரைம் ரீல்ஸ் நிறுவனம் வழங்கும் இந்தப் படத்தில் கதாநாயகர்களாக கார்த்திக் மற்றும் மனோஜ் நடிக்க ரஷ்மிகா திவாரி கதாநாயகியாக நடித்துள்ளார். ‘வட்டகரா’ சதீஷ் வில்லனாக நடிக்க அனுஷ்கா மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.  விக்னேஷ் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ‘எமகாதகன்’ படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் எஸ்.வி. சேகர், தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநர் திருமலை, நடிகர் சௌந்தர்ராஜன்  மற்றும் இயக்குநர் சரவணசக்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

நடிகர் எஸ்.வி. சேகர் பேசும்போது, “வெற்றிகரமான மனிதர்களை எமகாதகன் என சொல்வது உண்டு. அந்த வகையில் இந்த படத்தின் டைட்டில் நெகட்டிவ் ஆக இல்லாமல் அதேசமயம் அனைவரும் புழங்கக்கூடிய வார்த்தையாக இருக்கிறது. இன்று சின்ன படங்கள் தியேட்டருக்கு வருவது சிரமமாக இருக்கிறது. பெரிய படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் ஒரே சமயத்தில் இரண்டு மூன்று சின்ன படங்களையும் தயாரித்து ஒரே நேரத்தில் திரைக்கு கொண்டு வரவேண்டும். அப்போதுதான் சின்ன படங்கள் மீதும் கவனம் திரும்பும்.

 

திரைப்படங்கள் சென்சார் செய்யப்பட்டிருந்தால் அந்த படங்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என்கிற ஒரு விதி இருக்கிறது. அதை தமிழக முதல்வர் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். தியேட்டர்கள் கிடைக்காத சூழ்நிலையில், அப்படியே கிடைத்தாலும் போட்ட பணத்தை எடுக்க முடியாத சூழலில் இந்த மானியம் தயாரிப்பாளர்களுக்கு ரொம்பவே உதவியாக இருக்கும். அதேபோல தனிப்பட்ட முறையில் யூட்யூப் நடத்துபவர்களுக்கு என ஒரு நல வாரியம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதையும் முதல்வருக்கு கோரிக்கையாக வைக்கிறேன்.

 

படம் பார்க்க செல்பவர்கள் படத்திற்கு என்ன சான்றிதழ்கள் கொடுத்துள்ளார்கள் என்பதை கவனித்து தியேட்டர்களுக்கு குடும்பத்தை அழைத்துச் செல்ல வேண்டும். தமிழ்நாட்டில் யு சர்டிபிகேட் பெற்ற சில படங்களுக்கு மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு செல்லும்போது ஏ சர்டிபிகேட் தான் கொடுக்கப்படுகிறது. காரணம் அது சர்வதேச நிலைப்பாடு. ஆனால் சென்சார் செய்யப்படும் இடங்களில் உள்ள சில அட்ஜஸ்ட்மென்ட் காரணமாக இதுபோன்று நிகழ்கிறது. எல்லா இடத்திலும் தவறுகள் நடந்தாலும் சினிமா மற்றும் அரசியலில் அவை மிகைப்படுத்தி காட்டப்படுகின்றன” என்றார்.

 

 

Next Story

'இறைவனாய் தந்த இறைவியே…' - திருமண கோலத்தில் அமலா பால்

Published on 06/11/2023 | Edited on 06/11/2023

 

 

 

அமலா பால், அவரது கடந்த பிறந்தநாளன்று அவரின் நண்பர் ஜகத் தேசாய் ப்ரபோசலுக்கு சம்மதம் தெரிவித்தார். மேலும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில் கேரளா மாநிலம், கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஜகத் தேசாயை அமலா பால் திருமணம் செய்துகொண்டார். நேற்று நடந்த (05.11.2023) இந்த திருமணத்தில் மணமக்களது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.