Skip to main content

"ஒரு காட்சியை உருவாக்குவதில் தேர்ந்தவராக இருக்கிறார் அரவிந்த் சுவாமி!" - ரித்விகா பெருமிதம்!

Published on 24/07/2021 | Edited on 24/07/2021

 

fjtfgjgfjmgf

 

தென்னிந்திய நடிகையும், பிக் பாஸ் 2 வெற்றியாளருமான நடிகை ரித்விகா, நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் தமிழ் ஆந்தாலஜி படமான ‘நவராசா’ படத்தில் பிரபல நடிகரும், அறிமுக இயக்குநருமான அரவிந்த் சுவாமியுடன் பணியாற்றியது மிகச்சிறந்த அற்புதமான அனுபவம் என்று கூறியுள்ளார். ‘நவரசா’ ஆந்தாலஜி திரைப்படம் இந்திய தொன்மை விதிகளாக கூறப்படும், மனித  உணர்வுளான  கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி, ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளைக் கொண்டு ஒன்பது வெவ்வேறு அழகான கதைகளைக் கூறுகிறது. இதன் ஒரு பகுதியாக, நடிகர் அரவிந்த் சுவாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரௌத்திரம்’ கதையில் ‘அன்புக்கரசி’ வேடத்தில் நடிகை ரித்விகா நடித்துள்ளார். நவரசங்களுள் கோபத்தின் உணர்ச்சியை இக்கதை சித்தரிக்கிறது. ‘நவராசா’ படம், வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ள நிலையில், அரவிந்த் சுவாமியுடன் இணைந்து பணிபுரிந்தது குறித்து நடிகை ரித்விகா பேசியுள்ளார். அதில்...

 

"அரவிந்த் சுவாமி போன்ற புகழ்பெற்ற நடிகருடன் பணிபுரிவது என் வாழ்வில் மிகப்பெருமையயான தருணம். ஒரு நடிகராக இல்லாமல், இயக்குநராக அவரை அருகில் இருந்து பார்த்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு காட்சியை உருவாக்குவதில், அனைத்து தொழில்நுட்ப சாத்தியங்களையும் பயன்படுத்துவதில், தேர்ந்தவராக இருந்தார். சினிமா குறித்த அவரது நுணுக்கமான அறிவும், அதை உருவாக்கத்தில் அவர் பயன்படுத்திய முறையும் அபாரமானது. இப்படத்திற்காக காட்சிகள் மற்றும் வசனங்களை ஒத்திகை செய்யும் ஆன்லைன் கூட்டங்களில் கலந்துகொண்டது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறுதிக்கட்ட பணியில் கருணாஸின் 'ஆதார்'

Published on 17/02/2022 | Edited on 17/02/2022

 

aadhar film update out now

 

அம்பாசமுத்திரம் அம்பானி, திருநாள் ஆகிய படங்களை இயக்கிய ராம்நாத் பழனி குமார் தற்போது கருணாஸ், அருண் பாண்டியன் நடிக்கும் ஆதார் படத்தை இயக்கி வருகிறார். ரித்விகா, இனியா உமா ரியாஸ்கான், திலீபன் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.  

 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது.  எளிய மனிதர்களின் வலியை பேசும் யதார்த்த படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர், ட்ரைலர் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

 

 

Next Story

"எந்த நடிகர்களும் அப்படி செய்ய முடியாது" - நடிகை ரித்விகா 

Published on 28/01/2022 | Edited on 28/01/2022
hfhdfjfj

 

இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இதில் ரித்விகா, ரீயா, பானுப்ரியா, கே.எஸ் ரவிக்குமார், நாசர், மணிகண்டன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன்  எழுத்தில் உருவான 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற  நாவலின் தலைப்பை இப்படத்திற்கும் படக்குழு வைத்துள்ளது. தற்போது ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிக்பாஸ் புகழ் நடிகை ரித்விகா தன்னுடைய கனவு கதாபாத்திரம் குறித்து நமக்கு அளித்த பிரத்தேக பேட்டியில் கூறியபோது....

 

"எந்த நடிகர்களும் அப்படி செய்ய முடியாது. பழம்பெரும் நடிகர்களை கேட்டால் கூட, நான் அந்த கதாபாத்திரத்தை செய்திருக்கலாம் என இப்போதும் ஏக்கத்தோடு சொல்லுவார்கள். அன்று நான் அந்த கதாபாத்திரத்தை செய்திருக்க வேண்டும், தேதி இல்லை, அந்த நடிகரோடு நடித்திருக்க வேண்டும் என பல்வேறு காரணங்களால் அவர்களால் நினைத்த பாத்திரத்தை செய்திருக்க முடியாது. இது எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும். இது எப்போதும் முழுமை அடையாது. எனக்கும் அப்படியே" என கூறியுள்ளார்.