Skip to main content

கவனிக்க வைத்த படமும்; கதற விட்ட படமும்; கல்லா கட்டிய படமும்: 2022 ரீவைண்ட் சினிமா!

Published on 31/12/2022 | Edited on 31/12/2022

 

Rewind Movie 2022

 

கொரோனா ஊரடங்கு காலங்களுக்குப் பிறகு 2022-ஆம் ஆண்டு புத்துணர்ச்சியாகத்தான் தொடங்கியது. ஆனாலும் ஜனவரி மாதத்தில் இரவு நேர ஊரடங்கு ஞாயிறு ஊரடங்கு என்று கொஞ்சம் பிசிறு தட்டினாலும் ஒருவழியாக தன்னை தக்க வைத்துக் கொண்டு அடுத்தடுத்த மாதங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

 

திரையரங்கைப் பொறுத்தவரை மக்கள் வரத் தொடங்கியிருந்தார்கள். அரங்கம் நிறைந்த காட்சிகள் வந்ததாக எல்லாம் தரவுகள் சொன்னார்கள்தான். அந்த வகையில் கவனிக்க வைத்த படம், கதற விட்ட படம், கல்லா கட்டிய படம் என்று மூன்று வகையில் மூன்று மூன்று படங்களை கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..


கவனிக்க வைத்த படம்:
 

டாணாக்காரன் 


பெரிய பில்டப்புகள் எதுவும் இல்லாமல் ஓடிடி தளத்தில் உருவாகி, பெரிய அளவில் தனக்கான இடத்தைப் பிடித்துக் கொண்டதில் 2022-ல் இயக்குநர் தமிழ் இயக்கிய டாணாக்காரன் முக்கிய இடம் வகிக்கிறது.

 

போலீஸ் அகாடமியில் காவலர் பயிற்சிக்கு நுழைபவர்களின் சிக்கலை படம் பிடித்துக் காட்டியது. திரைக்கதையும் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்திருந்தது. வேறொரு பரிணாமத்தில் விக்ரம் பிரபு இப்படத்தில் நடித்திருந்தார்.

 

கார்கி


சிறுவர்களின் மீதான பாலியல் தொல்லைகள் அவர்கள் மீது நிகழ்த்தப்படுகிற வன்மங்கள் வக்கிரங்கள் பற்றிய பிரச்சனையை அணுகிய விதத்தில் இப்படம் பேசு பொருளானது. சாய் பல்லவி இக்கதையை தேர்ந்தெடுத்து நடித்ததில் மிகவும் பொறுப்பான நாயகியாக மிளிர்கிறார்


இந்தப் பட்த்தின் கிளைமேக்ஸ்தான் எதிர்பார்ப்பாகவே கதையை மையமிட்டு நகர்த்தி சுவாரசியமாகவும் சமூகப் பிரச்சனையை சொல்லி கவனிக்க வைத்தது


விட்னஸ் 


இந்திய சூழலில் மலக்குழி மரணங்கள் இன்னும் நிறுத்தப்படாமல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. எது எதுக்கோ மிசின் கண்டுபிடிக்கிறார்கள் இதற்கு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லையா? கண்டுபிடித்தும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லையா என்பதெல்லாம் விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது.


அந்த வகையில், மலக்குழி மரணம் பற்றிய பிரச்சனையை கதைக் களமாக எடுத்து அதை அரசியல் சட்டத்தின் கீழ் தீர்வுக்குள் கொண்டு வர முயலும் பொது சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்குவதாக அமைகிறது இப்படம். ரோகிணியின் குணச்சித்திர நடிப்பு பாராட்டத்தக்கது.


கதற விட்ட படம்


இந்த படமெல்லாம் தியேட்டருக்கு வந்ததும் தெரியல போனதும் தெரியல என்கிற ரீதியில் மூன்று பெரிய நாயகர்கள் நடித்த படங்கள். எப்புட்ரா இதையெல்லாம் படமாக எடுத்து வைத்திருக்கிறீர்கள் என்று சொல்ல வைத்த படங்கள் இவை.


கேப்டன்


ஆர்யா என்னும் நல்ல உடல்வாகு உள்ள நாயகன் குத்துச் சண்டையை மனிதர்களோடு போட்டால் ஒத்துக்கொள்ளலாம். ஏலியன்ஸோடு போட்டால் எப்படி ஏற்றுக்கொள்வது இதே கேள்விதான் எல்லா ரசிகர்களையும் யோசிக்க வைத்திருக்கும்.


அர்னால்டு ஏலியன்ஸோடு போட்ட சண்டையை பட்டி டிங்கரிங் செய்து இங்கே ஆர்யாவை நடிக்க வைத்தால் பார்க்க முடியல, திரைக்கதையிலும் பெரிய சுவாரசியமற்றுப் போயிருந்தது.


DSP


போலீஸ் படமாக ஏற்கனவே விஜய் சேதுபதியை பார்த்தாச்சு. அதில் வெற்றியும் கண்டார் என்றே சொல்லலாம்தான். ஆனால், இந்த போலீஸ் பல சமயம் பில்டப் போலீஸாகவே வந்து போகிறார். எதுக்குடா இந்தப் படம் என்று கேட்டு முடிப்பதற்குள் சக்சஸ் மீட் என்று நம்மை நம்ப வைத்து திரையரங்கம் வர வைக்கப் பாத்தார்கள்., யாரும் சிக்கல.


பிரின்ஸ்


சிவகார்த்திகேயன் டான் என்னும் வெற்றி படம் தந்திருந்தார் என்று தயாரிப்பாளர், இயக்குநர் தரப்பில் கூறப்பட்டது. எப்படியோ சுவாரசியமாக பார்க்க வைத்துவிட்டார்கள். ஆனால் அடுத்து பிரின்ஸ் வெளியிட்டார். பிரின்ஸ் மகுடம் சூடாமலேயே போய்விட்டார்.


கல்லா கட்டிய படம்


இந்தப் படங்களைப் பற்றிய சிறு குறிப்பு குறிப்பிடப்படவில்லை. ஏனெனில் வெற்றி பெற்று வசூலும் செய்திருக்கிறது. பெரும்பான்மையான மக்களால் பார்க்கப்பட்டும் இருக்கிறது. அந்த வகையில் டாப் 10 வசூல் படங்கள்


1.பொன்னியின் செல்வன்
2.விக்ரம்
3.வலிமை
4.கேஜிஎப் (தமிழ்)
5.பீஸ்ட்
6.டான்
7.RRR (தமிழ்)
8.திருச்சிற்றம்பலம்
9.சர்தார்
10.லவ் டுடே


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாய் திறந்த ஜாஃபர் சாதிக் - சிக்கும் திரைப் பிரபலங்கள்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Jaffer Sadiq case he invested in films by fraud money

டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்டது திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது.

மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார். தொடர்ந்து ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்த நிலையில், அவரது இல்லத்தில் சோதனையில் ஈடுபட்ட மத்திய போதைப்பொருள் தடுப்புத்துறை, வீட்டை தாழிட்டு நோட்டீஸ் ஒட்டிச் சென்றிருந்தது. தொடர்ந்து ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

இது குறித்து என்.சி.பி. தலைமையகத்தில் சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய என்.சி.பி. துணை இயக்குநர் ஞானேஷ்வர் சிங்க், ஜாபர் சாதிக் குறித்து பல்வேறு அதிர்ச்சியான தகவல்களைப் பகிர்ந்தார். அவர் கூறுகையில், “ஜாஃபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெரும் தொகையை சம்பாதித்து, தனது குற்றங்களை மறைக்க திரைப்படங்கள், கட்டுமானம் மற்றும் விருந்தோம்பல் போன்ற பல தொழில்களில் முதலீடு செய்துள்ளார். அவரது போதைப்பொருள் கடத்தல், உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் புதுடெல்லி, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற இடங்களில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா வரை பரவியிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் 3500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தியுள்ளனர். அவரது தயாரிப்பு நிறுவனத்தில் போதைப்பொருள் பணம் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவரது தயாரிப்பு நிறுவனம் பண மோசடி செய்யும் முன்னோடியாக இருந்ததாக தெரிகிறது” என்றார். 

மேலும், தமிழ்நாடு திரைத்துறை சார்ந்த பிரபலங்களுக்கும் தொடர்பிருப்பதாக ஜாஃபர் சாதிக் வாக்குமூலம் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல், கட்டுமான துறையில் இருக்கும் நபர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு, அதில் தொடர்புடைய திரைப் பிரபலங்களின் பெயர்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

திரிஷாவின் கண்டனம்; சில மணிநேரத்தில் வீடியோ வெளியிட்ட ஏ.வி. ராஜு

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
Trisha's Condemnation; AV released the video within an hour. Raju

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியான ஏ.வி. ராஜு அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்புப்படுத்திப் பேசியிருந்தார். மேலும் தன்னை அதிமுகவிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிமுகவின் சட்ட விதிகளைத் தெரியாமல் எடப்பாடி பழனிசாமி உள்ளார்’ எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

இந்நிலையில், கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி இழிவாகப் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜுவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகை த்ரிஷா, இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கவனம் ஈர்ப்பதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து பேசுபவர்களை பார்ப்பதற்கே அறுவறுப்பாக உள்ளது. அவதூறு பேச்சுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமது வழக்கறிஞர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜுவின் பேச்சுக்கு பல்வேறு சினிமா பிரபலங்களும் கண்டங்கள் தெரிவித்து வந்த நிலையில், த்ரிஷா இதை உறுதிப்படுத்தி உள்ளார்.

mm

இந்நிலையில் ஏ.வி.ராஜு இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''என்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில், சில ஊடகங்களில் திரைப்படத் துறையினரை அவதூறாக நான் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நான் பேசியது அரசியல் ரீதியாக மட்டும் தான் பேசினேன். அந்த இடத்தில் பேட்டியை முடித்த பின்பு ஒரு சிலர் கேட்ட கருத்துக்கு நான் அந்த விளக்கத்தை சொன்னேன். எந்த இடத்திலும் திரைத்துறையினரை வருத்தப்படும் அளவிற்கு பேசக் கூடியவர் நான் அல்ல.

ஒருவேளை அப்படி பேசியதாக தகவல்கள் உங்களுக்கு தவறாக கிடைத்திருந்தால், நான் உங்கள் அனைவருக்கும், பெப்சிக்கும், திரைப்பட நடிகர் சங்கத்திற்கும் மற்றும் சம்பந்தப்பட்ட திரிஷாவுக்கும் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவேளை மனம் புண்படும்படி இருந்திருந்தால் என் சார்பாக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.