Skip to main content

"நோயுற்ற காலத்தில் முடிந்த அளவு இதை பார்க்காமல் இருப்பது நல்லது" - பிரபல இயக்குநர் யோசனை!

Published on 11/05/2021 | Edited on 11/05/2021

 

 cbdbdv

 

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கத்தால், பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதிகரிக்கும் மரணங்கள், மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளின்மை ஆகியன மத்திய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. அதே நேரத்தில், கரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துவருவது சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.

 

இந்த நிலையில், ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ பட இயக்குநர் ரவிக்குமார் தற்போது கரோனா தொற்றிலுருந்து விடுபட்டுள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முன்னெச்சரிக்கையோடு இருந்தேன். இருந்தும் கரோனா என்னை தொற்றியது. வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு மருந்துகளை எடுத்துக்கொண்டேன். என்னோடு அருகிலேயே இருந்த என் குழந்தை நறுமுகைக்கும் கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. எனது மனைவி பிரியாவின் அன்பும், சலிப்பற்ற உணவு உபசரிப்பும் மீண்டுவர ரொம்பவும் உதவியது.  

 

அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் உடனே பரிசோதனை செய்துகொள்வது மிக அவசியம். நோய் தொற்று ஆரம்பித்த ஏழு நாட்கள் மிக முக்கியமான நாட்கள், அதற்குள் மருந்துகள் எடுத்துக்கொள்வது அவசியம். காலதாமதம் செய்வதும் 'எனக்கு வராது. அதெல்லாம் ஒன்னும் இல்லை, டெஸ்ட் பண்ணுனா கரோனான்னு சொல்லிடுவாங்க' இப்படியாக அலட்சியமாக பரிசோதனையைத் தள்ளிப்போடுவதும் நோய் உடலுக்குள் வீரியமடையவே உதவிசெய்யும். மிகுந்த விழிப்புணர்வோடு, நோய்க்கு முந்தினால் மட்டுமே நோயை வெற்றிகொள்ள முடியும்.

 

நோய்த் தொற்றுக்கு ஆளான பிறகு ஃபேஸ்புக் மற்றும் செய்திகள் வாயிலாக இறந்தவர்கள் பற்றிய நியூஸ் கேட்க கேட்க மனப்பதற்றம் ஏற்படுகிறது. துளியும் தூக்கம் வரவில்லை. அதுவும் நம் மனநிலைமையைப் பாதிக்கிறது. நோயுற்ற காலத்தில் முடிந்த அளவு நியூஸ் பார்க்காமல் இருப்பது நல்லது. உறவுகளுக்குள்ளும் நட்புகளுக்குள்ளும் நிறைய தொற்று ஏற்பட்டுள்ளது. அன்பானவர்களுக்கு சொல்லிக்கொள்வதெல்லாம் ஒன்றுதான். சிறிய சந்தேகம் இருப்பினும் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். தாமதம் செய்யாமல் உங்கள் மருத்துவரை அணுகுங்கள். மீண்டு வருவோம்” என பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இதற்காக தான் இவ்ளோ வருஷம் போராடினோம்” - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

Published on 12/01/2024 | Edited on 12/01/2024
sivakarthikeyan about ayalaan response

ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகியுள்ள படம் அயலான். கடந்த 2 வருடங்களுக்கும் மேலாகப் பணிகள் நடந்து தற்போது ரிலீஸூக்கு தயாராகியுள்ளது. 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி. ராஜா தயாரிப்பில் தொடங்கப்பட்ட இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் வாங்கியது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் பொங்கலை முன்னிட்டு இன்று (12.01.2024) வெளியாகியுள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட சிவகார்த்திகேயன், “ஒவ்வொரு வெற்றிகரமான மனிதனுக்கும் வலி நிறைந்த கதை இருக்கும். ஒவ்வொரு வேதனையான கதைக்கும் வெற்றிகரமான முடிவு உண்டு. வலியை ஏற்றுக்கொண்டு வெற்றி பெற தயாராகுங்கள்” என குறிப்பிட்டுள்ளார். 

ad

நிறைய சிக்கல்களை தாண்டி வெளியாகியுள்ள இப்படத்தை, சிவகார்த்தியேன் ரசிகர்களுடன் பார்க்க, இன்று காலை சென்னையில் உள்ள திரையரங்கிற்கு வருகை தந்தார். படம் தொடங்குவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சைன்ஸ் ஃபிக்சன் ஃபேண்டஸி ஜானரில் இப்படம் வெளியாகியிருக்கிறது. நம்ம ஊர்ல இது மாதிரி ஜானர் ரொம்ப ரொம்ப குறைவு. அதை முயற்சி பண்ணியிருக்கோம் என்பதே எனக்கு சந்தோஷம். தியேட்டருக்கு போங்க. என்ஜாய் பன்னுங்க. நம்பி வாங்க. சந்தோஷமா போங்க. ரிபீட்ல வாங்க. அயலான், எனக்கு ரஜினி முருகன் படத்துக்கு பிறகு பொங்கலுக்கு இரண்டாவது ரிலீஸ். இதுவும் நல்ல வரவேற்பை பெறும் என நம்புகிறேன்” என்றார்.

பின்பு படம் முடிந்து வெளியே வந்த அவர், “இதற்காக தான் நாங்க இவ்ளோ வருஷம் போராடினோம். இன்னைக்கு அது கிடைச்சிருக்கு. அதைத் தாண்டி இன்று நேற்று நாளை படத்திற்கு பிறகு ரவிகுமார் பெயரை ஸ்கிரீனில் பார்த்தது தான் எனக்கு பெரிய சந்தோஷம். நானும் ஏலியன் வருகிற காட்சியெல்லாம் நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது. அதுக்குதான் ஆசைப்பட்டோம் அது நடந்திருக்கு” என நெகிழ்ச்சியுடன் செய்தியாளர்களிடம் பேசினார்.  

Next Story

அயலான் படத்தின் தடை நீக்கம்

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
ayalaan release update

ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகியுள்ள படம் அயலான். கடந்த 2 வருடங்களுக்கும் மேலாகப் பணிகள் நடந்து தற்போது ரிலீஸூக்கு தயாராகியுள்ளது. 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி. ராஜா தயாரிப்பில் தொடங்கப்பட்ட இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் வாங்கியது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் பொங்கலை முன்னிட்டு நாளை (12.01.2024) வெளியாகவுள்ளது. 

ad

கடந்த 2019ஆம் ஆண்டு கே.ஜே.ஆர். நிறுவனம் எம்.எஸ் சேலஞ்ச் என்ற விளம்பர நிறுவனத்திடம் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் படி விளம்பர நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய ரூ.1.5 கோடியை தயாரிப்பு நிறுவனம் செலுத்தவில்லை. இதையடுத்து சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் வெளியான சமயத்தில் ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது. மேலும் மீதமுள்ள ரூ.1 கோடியை அயலான் பட வெளியீட்டிற்கு முன்பு வழங்குவதாக கே.ஜே.ஆர் நிறுவனம் உறுதி மொழி அளித்திருந்தது. 

ஆனால் மீதமுள்ள பணத்தை திருப்பி தராமல் அயலான் படத்தை கே.ஜே.ஆர் நிறுவனம் நாளை வெளியிடுவதால் படத்தை வெளியிட தடை கேட்டு எம்.எஸ் சேலஞ்ச் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அயலான் படத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. கே.ஜே.ஆர் நிறுவனம் மீதமுள்ள ரூ.1 கோடியில் ரூ.50 லட்சத்தை எம்.எஸ் சேலஞ்ச் நிறுவனத்திடம் செலுத்தியது. இன்னும் மீதமுள்ள ரூ.50 லட்சத்தை ஏப்ரல் மாதம் 10ஆம் தேதிக்குள் செலுத்த உத்தரவாதம் அளித்தது. இதையடுத்து அயலான் படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டது.