Skip to main content

நடிகர் ராமராஜனுக்கு என்னதான் ஆச்சு..?

Published on 18/10/2021 | Edited on 18/10/2021

 

bhfdhdetjd

 

சினிமாவைவிட்டு விலகி ஓய்வில் இருக்கும் பல நடிகர்களின் உடல் நலம் குறித்து அவ்வப்போது போலியான வதந்திகள் இணையத்தில் உலா வந்த வண்ணம் இருக்கும் நிலையில், தற்போது இந்த லிஸ்ட்டில் நடிகர் ராமராஜனும் இணைந்துள்ளார். சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நடிகர் ராமராஜனின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தற்போது புதிய தகவல்கள் பரவிவருகின்றன. இந்த செய்தியால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், இதுகுறித்து ராமராஜன் தரப்பில் விளக்கம் அளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்..


"வதந்திகளை நம்ப வேண்டாம் -

வசூலில் சாதனை புரிந்து தமிழ் சினிமா வரலாற்றில் சரித்திரம் படைத்த 'கரகாட்டக்காரன்' படம் மட்டுமல்ல, பல நூறு நாட்கள் படங்களை தந்து தனக்கென ஒரு பாணியில் வலம் வந்தவரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான மக்கள் நாயகன் ராமராஜனை பற்றி தற்சமயம் தவறான வதந்தியை பரப்பிவருகிறார்கள். திரு.ராமராஜன் அவர்கள் பூரண நலத்துடன் இருக்கிறார். யாரும் இந்த வதந்தியை நம்பவேண்டாம். இரண்டு படங்களுக்கு தனது கதையை தந்துள்ள ராமராஜன் அடுத்ததாக இரண்டு படங்களில் நடிப்பதற்கு தன்னை தயார்படுத்தி வருகிறார் என்பதே உண்மை. ராமராஜன் உடல்நலத்துடனும் மனவலிமையுடனும் இருக்கிறார். விரைவில் அவர் நடிக்கும் பட துவக்க விழாவில் கலந்துகொள்வார்" என குறிப்பிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தனிமை; மன வேதனை; பாழடைந்த வீடு' - நடிகை கனகாவின் பரிதாப நிலை

Published on 23/12/2022 | Edited on 23/12/2022

 

'Loneliness; Heartbreak; house full of garbage'-actress Kanaka's plight

 

தமிழில் 'கரகாட்டக்காரன்', 'அதிசய பிறவி', 'விரலுக்கேத்த வீக்கம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை கனகா. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகத் திரையுலகிலிருந்து விலகியிருக்கும் கனகா, சென்னை  ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வருகிறார்.  

 

திரைப்படத்தில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் அப்பாவுடன் சொத்து தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை, கை கூடாத காதல் எனப் பல பிரச்சனைகளால் வீட்டில் முடங்கிய நிலையிலேயே இருந்துள்ளார் கனகா. இதனால் பல வருடங்களாக அவர் தனிமை வாழ்க்கையே வாழ்ந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியே முகம் காட்டாத அளவிற்குத் தனிமை அவரை ஆட்கொண்டுவிட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை தீயணைப்புத் துறைக்கு வந்த அழைப்பில் நடிகை கனகாவின் வீட்டிலிருந்து அதிகப்படியான புகை வெளியேறுவதாகப் புகார் அளிக்கப்பட்டது.

 

'Loneliness; Heartbreak; house full of garbage'-actress Kanaka's plight

 

அதனைத் தொடர்ந்து கனகாவின் வீட்டிற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் கனகாவோ வீட்டிற்குள் நுழைய தீயணைப்பு வீரர்களை அனுமதிக்க மறுத்ததோடு, அவர்களைத் திட்டியுள்ளார். பின்னர் நீண்ட நேரத்திற்குப் பிறகு உள்ளே சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்பொழுது வீட்டிற்குள் சென்றபோது சிதறிக் கிடக்கும் குப்பைகள், குவியல் குவியலாகத் துணி மூட்டைகள், ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டு விட்டு போடப்பட்ட குப்பைகள் எனக் கேட்பாரற்று வீடு கிடந்துள்ளது. பாழடைந்த நிலையில் இருந்த வீட்டில் அவர் எப்படி வசித்து வந்தார் என எண்ணத் தோன்றும் அளவிற்கு வீட்டின் நிலைமை இருந்ததாகக் கூறப்படுகிறது. அதுவும் எப்பொழுதும் வெளியே முகம் காட்டாத கனகா அன்றுதான் வெளியே வந்தார் என்றும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

 

 

Next Story

23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் எவர்க்ரீன் கூட்டணி

Published on 10/11/2022 | Edited on 10/11/2022

 

after 23 years ilaiyaraja composing music for ramarajan movie samaniyan

 

80களில் 'எங்க ஊரு காவல்காரன்', 'கரகாட்டக்காரன்', 'தங்கமான ராசா' என பல ஹிட் படங்களைக் கொடுத்து டாப் ஹீரோவாக வலம் வந்தவர் ராமராஜன். அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகிய ராமராஜன் தற்போது 'சாமானியன்' படம் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். இப்படத்தை ராகேஷ் இயக்க ராதாரவி மற்றும் எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மதியழகன் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. 

 

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக இளையராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ராமராஜன் படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். இது தொடர்பாக இளையராஜாவை நேரில் சந்தித்துள்ளது படக்குழு. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

இவர்கள் கூட்டணியில் வெளியான 'செண்பகமே...செண்பகமே', 'சொர்கமே என்றாலும்...', 'மதுர மரிக்கொழுந்து...' உள்ளிட்ட பல பாடல்கள் இன்றும் ரசிகர்களின் பிளே லிஸ்டில் உள்ளது. அதிலும் சில பாடல்கள் ராமராஜன் குரலுக்கு இளையராஜாவின் குரல் அப்படியே பொருந்தியிருக்கும். இப்படி நீங்கா நினைவுகளாகப் பல பாடல்களைத் தந்த இந்த எவர் க்ரீன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.