Skip to main content

ராக்கி சாவந்த் விவகாரம்: செய்தியாளர்கள் முன்பு மயக்கம் - முன்னாள் கணவர் ஆதரவு

Published on 08/02/2023 | Edited on 08/02/2023

 

 Rakhi Sawant case actress faints outside while talking to media people

 

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் ராக்கி சாவந்த், தமிழில் ‘என் சகியே’, ‘முத்திரை’ உள்ளிட்ட படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இவர் டெல்லியைச் சேர்ந்த ஆதில் கான் குரானி என்பவரைக் காதலித்து வந்த நிலையில், இருவரும் சிம்பிளாக பதிவு திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்பட்டது. ஆனால், ஆதில் கான் ஒரு ஆங்கில ஊடகத்தின் பேட்டியில் இந்த திருமண தகவலை மறுத்துப் பேசினார் . 

 

இது தொடர்பாக நடிகை ராக்கி சாவந்த், ஆதில் கான் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் அவரின் போனில் சில விஷயங்களைப் பார்த்து சந்தேகம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் வேறொரு பெண்ணுடன் ஆதில் கானுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி மும்பை ஒஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

 

இதையடுத்து அதில் கான் மீது மீண்டும் ஒஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதில் அவரது வீட்டில் ரூ.5 லட்சம் பணம், ரூ.2 லட்சம் மதிப்பிலான நகை காணாமல் போனதாகவும் அதை அதில் கான் தான் கட்டிட காவலாளி மூலம் எடுத்து சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் தொடர்பாக அதில் கான் மீது வழக்குப்பதிந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

 

இதனிடையே நடிகை ராக்கி சாவந்த் ஒஷிவாரா காவல் நிலையத்தில் அருகே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் கானை விவாகரத்து செய்யவுள்ளதாக தெரிவித்து அவர் மீது பல குற்றங்களை சுமத்தினார். அப்போது பேசிக்கொண்டிருக்கையில் திடீரென மயங்கிவிழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை தூக்கி எழுப்பி தண்ணீர் கொடுத்து சரி செய்தனர். இது அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

நடிகை ராக்கி சாவந்த் கடந்த 2019 ஆம் ஆண்டு ரித்தீஷ் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டு கடந்த வருடம் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். இப்போது ரித்தீஷ் சிங் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வீடியோ மூலம் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், "ராக்கியின் பக்கம் உண்மை இருக்கிறது. ஆனால் அதை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும். இதைப் பற்றி ராக்கி மூன்று மாதங்களுக்கு முன்பு என்னிடம் கூறினார். அவர் கூறுகையில் அவர் பொய் சொல்லவில்லை என தெரிந்து கொண்டேன். இந்த விவகாரத்தில் நான் ராக்கியின் பக்கம் நிற்பேன். லவ் ஜிஹாத்தில் சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு இது ஒரு பாடம்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரைப்படமாகும் உண்மை சம்பவம் - நடிகைக்கு கொலை மிரட்டல்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
raime sen maakaali poster issue

இந்தி மற்றும் பெங்காலி படங்களில் கவனம் செலுத்தி வருபவர் ரைமா சென். இப்போது இந்தியில் மாகாளி என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படம் 16 ஆகஸ்ட் 1946 அன்று கல்கத்தாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இந்த சம்பவம் இந்தியாவை உலுக்கியது குறிப்பிடத்தக்கது. விஜய் யேலகண்டி இயக்கும் இப்படத்தை விஷ்வ பிரசாத் தயாரிக்க அனுராக் ஹல்டர் இசையமைக்கிறார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கின் போஸ்டர் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் இந்து மதத்தை குறிக்கும் வகையில் காளி தோற்றத்தில் ஒரு புறமும் முஸ்லீம் மதத்தை குறிக்கும் வகையில் ஹிஜாப் அணிந்த தோற்றத்தில் ஒரு புறமும் இணைந்து இருக்கும் முகம் கொண்ட புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டரை தொடர்ந்து தொலைப்பேசி வாயிலாக தனக்கு மிரட்டல் வருவதாக ரைமா சென் தெரிவித்துள்ளார். 

raime sen maakaali poster issue

இது தொடர்பாக அவர் கூறுகையில், “மர்ம நபர்களால் பெங்காலி மற்றும் இந்தியில் அலைபேசி கால்கள் வருகிறது. சுசித்ரா சென்னின் பேத்தியாக இருந்த நான் எப்படி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்பதைப் பொறுத்து மிரட்டல்கள் வந்தன. எதிர்காலத்தில் கொல்கத்தாவில் தான் நீ இருக்க வேண்டும். அதை நினைவில் வைத்துக்கொள் என்கிறார்கள். முதலில் படத்தைப் பார்த்துவிட்டு தங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார். 

Next Story

புடவைகளை விற்று உதவி செய்த பிரபல நடிகை

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
navya nair helped charity people with his saree sold

மலையாள திரையுலகில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகை நவ்யா நாயர். மேலும் தமிழ் மற்றும் கன்னட மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் பிரசன்னா நடிப்பில் வெளியான 'அழகிய தீயே', சேரனின் 'மாயக்கண்ணாடி', முன்னாள் முதல்வர் கலைஞர் எழுதிய 'பாசக்கிளிகள்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானார். இப்போது மலையாளத்தில் மற்றும் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். 

இந்த நிலையில் தனது சமூக வலைதளப்பக்கத்தில், தான் ஒரு முறை அணிந்த மற்றும் புதிதாக வாங்கி அணிய முடியாத புடவைகளை ஆன்லைனில் விற்பனை செய்வதாக அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும் கைத்தறி, காஞ்சிபுரம், பனாரஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான புடைவைகள் இருப்பதாகவும் நியாயமான விலையில் அவை கிடைக்குமெனவும் கூறியிருந்தார். இது விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பியிருந்தனர். 

navya nair helped charity people with his saree sold

இதையடுத்து நவ்யா நாயர் விற்பனையை தொடங்கினார். அதன் மூலம் கிடைத்த லாபத்தை கேரள பத்தனாபுரத்தில் உள்ள காந்திபவனுக்கு நன்கொடையாக கொடுத்துள்ளார். அங்கு வசிப்பவர்களுக்கு புதிய ஆடைகள் மற்றும் பயனுள்ள பொருட்களை வாங்கிக் கொடுத்து அருகில் இருக்கும் காந்தி பவன் சிறப்பு பள்ளிக்கு ரூ.1 லட்சம் நன்கொடையையும் கொடுத்துள்ளார். இவரது செயல் தற்போது பாராட்டை பெற்று வருகிறது.