rajini meets jigarthanda 2 team

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. 2014 ஆம் ஆண்டு வெளியான 'ஜிகர்தண்டா' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இப்படத்தை கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கதிரேசன் தயாரித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். தீபாவளியை முன்னிட்டு கடந்த 10 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertisment

படத்தைப் பார்த்த திரைப் பிரபலங்கள் பலரும் படக்குழுவிற்கு சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஷங்கர், அனிருத், நெல்சன் திலீப்குமார், அருண்ராஜா காமராஜ், அறிவழகன், மாரி செல்வராஜ், விக்னேஷ் சிவன், சிம்பு, புஷ்கர் காயத்ரி, பொன்ராம், சௌந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் ரஜினிகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு, வித்தியாசமான கதை மற்றும் கதைக்களம். சினிமா ரசிகர்கள் இதுவரைக்கும் பார்க்காத புதுமையான காட்சிகள்” எனக் குறிப்பிட்டார்.

Advertisment

இந்த நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழுவை நேரில் அழைத்து பாராடியுள்ளார் ரஜினி.இது தொடர்பான புகைப்படங்களைத்தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த கார்த்திக் சுப்புராஜ், “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு உங்கள் அன்பையும் பாராட்டுகளையும் பொழிந்ததற்கு மிக்க நன்றி தலைவா. எங்களுடனான உங்கள் ஒரு மணி நேர உரையாடல் எனக்கும் ஒட்டுமொத்த குழுவிற்கும் ஒரு பாசிடிவ்வான உணர்வைக் கொடுத்தது சார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.