Skip to main content

முடிவுக்கு வந்த பிரபாஸ் படம்!

Published on 29/07/2021 | Edited on 29/07/2021
vdgdbgd

 

யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் தயாரிப்பில் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘ராதே ஷ்யாம்’. இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் இப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்குகிறார். இப்படம் தெலுங்கு, இந்தி என இரு மொழிகளில் நேரடியாக எடுக்கப்பட்டு தமிழ் உள்ளிட்ட பிற இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படவுள்ளது.

 

ஹைதராபாத், இத்தாலி எனப் பல்வேறு இடங்களில் முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு கரோனா பரவல் காரணமாக பாதியில் தடைபட்டது. தற்போது கரோனா பரவலின் தாக்கம் குறையத் தொடங்கிவிட்டதால் ஆந்திராவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, படப்பிடிப்பைத் தொடங்கி தொடர்ந்து நடத்தி வந்த படக்குழு, இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பை முழுவீச்சில் நடத்திவந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றோடு முடிவடைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ராதே ஷ்யாம்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published on 28/03/2022 | Edited on 28/03/2022

 

RadheShyam

 

பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் கடந்த மார்ச் மாதம் திரையில் வெளியான படம் 'ராதே ஷ்யாம்'. இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் தயாரித்திருந்தது. ராதா கிருஷ்ணகுமார் இயக்கியிருந்தார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வெளிவந்திருக்கும் இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக முதல் நாளிலேயே 79 கோடி ரூபாய் வசூல் செய்தது.

 

இந்நிலையில்  'ராதே ஷ்யாம்' படம் ஏப்ரல்-1 அன்று ஓடிடியில் வெளியாகும் என அமேசான் ப்ரைம் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏப்ரல்-1 அன்று தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளிலும் வெளியாகிறது. இதை அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து ஒரு புதிய ட்ரைலரையும் அமேசான் ப்ரைம் வெளியிட்டுள்ளது.

 

 

 

Next Story

'ராதே ஷ்யாம்' படத்தால் நடந்த விபரீதம் - பிரபாஸ் ரசிகர் தற்கொலை

Published on 14/03/2022 | Edited on 14/03/2022

 

radhe shyam movie review prabhas fans suicide

 

யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் தயாரிப்பில், பிரபாஸ் நடிப்பில் வெளியான படம் 'ராதே ஷ்யாம்'.  இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில், ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகிய இப்படத்திற்கு இந்திய முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்தது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் கடந்த 11ஆம் தேதி வெளியாகி இப்படம் வசூல் ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. மேலும் இப்படம் தெலுங்கைத் தாண்டி மற்ற மொழிகளில் வரவேற்பைப் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. 

 

இந்நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்ததால் பிரபாஸ் ரசிகர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்த முத்யால ரவி தேஜா (24) என்பவர் ராதே ஷ்யாம் படத்தை பார்த்திருக்கிறார். அதன் பின் படம் தொடர்பாக வெளிவந்த கலவையான விமர்சனங்கள் குறித்து தனது தாய் மற்றும் நண்பர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து  கவலையில் இருந்த முத்யால ரவி தேஜா வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.