Skip to main content

”என் குடும்பத்தில் யாருக்கும் நடிக்க விருப்பமில்லை” - ராதாரவி வருத்தம் 

Published on 18/08/2022 | Edited on 18/08/2022

 

Radha Ravi

 

எஸ்.எஸ்.பிக்சர்ஸ் தயாரிப்பில் ராஜா செல்வம் இயக்கத்தில் கார்த்திக் சிங்கா, அனயா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொடை’ . இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

 

நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் ராதாரவி பேசுகையில், “இசையமைப்பாளருக்கு முதல் படம் போன்று தெரியவில்லை, அவருடைய இசை ஈர்க்கும்படி உள்ளது. இளைஞர்கள் திரைத்துறைக்கு வந்து ஜெயிக்க வேண்டும். இந்தப் படத்தின் கதாநாயகன் சிறப்பாக நடித்துள்ளார். ரோபோ சங்கர் மிகச்சிறந்த கலைஞன். அவர் பெரிய ஆளாக வரவேண்டும். சிங்கமுத்து என் குடும்பத்தில் ஒருத்தர். அவர் மகன் நடிகனாகியிருப்பது மகிழ்ச்சி. என் குடும்பத்திலிருந்து யாரும் நடிக்க வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். வாரிசுகள் சினிமாவிற்கு வந்தால்தான் நம் பெயர் நிலைக்கும்.  இந்தப் படத்தின் நாயகனுக்கு உங்கள் ஆதரவு தேவை. இந்த படத்திற்கு உங்களது ஆதரவை கொடுத்து படத்தை வெற்றிபெறச் செய்யுங்கள்” எனக் கூறினார். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"தண்ணி கொடுக்கலைன்னா மட்டும் கத்துறீங்க, போய் கர்நாடகாவை பாருங்க" - ராதாரவி ஆவேசம்

Published on 20/09/2022 | Edited on 20/09/2022

 

radha ravi talk about saamaniyan movie

 

80 களில் முன்னணி நடிகராக இருந்த ராமராஜன் ’சொர்க்கமே என்றாலும்’, ’எங்க ஊரு பாட்டுக்காரன்’, ’கரகாட்டக்காரன்’ உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதன் பிறகு சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்த ராமராஜன் தற்போது சாமானியன் படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

 

இப்படத்தின் டீசர் வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய ராதாரவி, "இது வேற ரூட்டில் போயிருக்க வேண்டிய படம். இதன் நல்ல நேரமோ என்னவோ ராமராஜன் இந்த படத்தில் வந்து இணைந்து விட்டார். நான் ராம.நாராயணன் இயக்கத்தில் பேய்வீடு படத்தில் நடித்த சமயத்திலேயே ராமராஜனை அந்தப்படத்தின் உதவி இயக்குனராக எனக்கு தெரியும். அப்போதே அவரிடம் சில விஷயங்களை கவனித்து சீக்கிரமாக நீ நடிகன் ஆகிவிடுவாய் என்று சொன்னேன்.. அதுதான் நடந்தது. அதன்பிறகு அவருடன் சில படங்களில் இணைந்து நடித்துள்ளேன். ராமராஜன் என்றைக்குமே ரஜினி கமலுக்கு போட்டியாக இருந்ததில்லை. அவரது படங்கள் அந்த இருவரின் படங்களை விட நன்றாக ஓடின. அவ்வளவுதான்.. ஆனால் மற்ற ஹீரோக்களுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தினார் என்பதை மறுக்க முடியாது.

 


ஒருமுறை நடிகர் கமல் விமானநிலையத்தில் இவரை பார்த்துவிட்டு இவரது ஹேர்ஸ்டைல் ஒரிஜினல் தானா, இல்லை விக் வைத்திருக்கிறாரோ என்கிற சந்தேகத்தில் தொட்டு பார்த்தாராம்.. ஆனால் இப்போதும் அதேபோன்ற ஹேர்ஸ்டைலுடன் தான் காட்சியளிக்கிறார். அவருக்கு மனசு சுத்தம்.. அதனால் தான் முடி கொட்டவில்லை என்று நினைக்கிறேன்.. வெளியூர் செல்லும்போது மதுரைப்பக்கம் எங்கோ ஒரு கிராமத்தில் ராமராஜன் ரசிகர் மன்றம் என்கிற போர்டை பார்த்தபோது, இவர் அழியமாட்டார்.. இவரை அழிக்க முடியாது என்று அருகில் இருந்தவரிடம் கூறினேன். நான் இப்படி சொல்வது ஏனென்று சாமான்யனுக்கு புரியும்.
 
இயக்குநர் ராகேஷ் இதற்கு முன்பு இயக்கிய மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படத்தில் கூப்பிட்டு ஒருநாள் மட்டும் வேலை கொடுத்தார். இப்போது கொஞ்சம் இம்ப்ரூவ் ஆகி இந்த படத்தில் ஏழு நாட்கள் வேலை இருப்பதாக கூறியுள்ளார்.

 

தமிழ் ரசிகர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். எல்லாரும் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வேண்டும். நீங்க கர்நாடகா போய் பாருங்க, சும்மா தண்ணி கொடுக்கல, கொடுக்கலனு கத்துறீங்களே தவிர வேற ஒன்னும் பண்றதில்ல. அந்த கர்நாடக ரசிகர்களை பாருங்க,   தியேட்டருக்கு  வந்து படம் பார்த்து கர்நாடக திரைத்துறையை வாழ வைக்கிறாங்க. அதே போலத்தான் கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும்  ரசிகர்கள் தியேட்டர்ல வந்து படம் பார்த்துட்டு இருக்காங்க. ஆனால் இங்க தியேட்டர் வந்து படம் பார்த்தா செலவாகுதுன்னு சொல்றீங்க. படம் பார்க்க வந்தால் டிக்கெட் மட்டும் வாங்குங்கள். பாப்கார்ன், கூல்ட்ரிங்க்ஸ் எல்லாம் வாங்கி நீங்களாக செலவை இழுத்துவிட்டுக்கொண்டு அதற்கு விலைவாசியை காரணம் காட்டாதீர்கள்” என்று பேசினார்.

 

 

Next Story

"வசதி இலவசமாக வருவது சினிமாவில்தான்" - ராதா ரவி பேச்சு

Published on 28/02/2022 | Edited on 28/02/2022

 

Radha Ravi talk about kadalai poda ponnu venum movie

 

இயக்குநர் ஆனந்த்ராஜ் இயக்கத்தில் விஜய் டிவி அசார் 'கடலை போட ஒரு பொண்ணு வேணும்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக மனிஷா ஜித் நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபு, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காமெடி கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் ராபின்சன் தயாரிக்கிறார். படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்த படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் அசார். மன்சூர் அலிகான், நாஞ்சில் சம்பத், உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். 

 

இந்நிகழ்ச்சியில் பேசிய ராதா ரவி கூறுகையில்,"இந்த படத்தின் நாயகன் அசார் டிவியிலிருந்து வந்தவர் உனக்கு உதாரணமாக பலரை சொல்வார்கள் அதை கேட்க கூடாது. உனக்கு என்று தனியாக பெயர் கிடைக்கும், இந்தப்படத்தின் ஒரிஜினல் டைட்டில் தெரியும், ஆனால் சொல்ல மாட்டேன், இந்தப் படம்கண்டிப்பாக வெற்றிபெறும், நாஞ்சில் சம்பத் நான் நடிகன் இல்லை. ஆனால் இரண்டு படம் இருக்கு என்றார், ஆனால் இங்கு நடிகனுக்கு படமே இல்லை, உங்களுக்கு படம் இருக்கு என்று சந்தோஷப்படுங்கள், சினிமாவில் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்க வேண்டும், அதற்காக தான் நான் இன்றும் டிரெண்டிங்கில் இருக்கிறேன். வசதி இலவசமாக வருவது சினிமாவில் தான். தயாரிப்பாளர்களால் தான் சினிமா வாழ்கிறது. இந்தப் படம் பாடல் எல்லாம் அற்புதமாக உள்ளது. ஒளிப்பதிவாளர் மிரட்டியிருக்கிறார். சினிமா வாழ வேண்டுமானால் இந்த மாதிரி சின்ன படங்கள் ஓட வேண்டும். நான் அடுத்ததாக 10 சின்ன படங்கள் எடுக்க போகிறேன். ஒரு நல்ல செய்தி தயாரிப்பாளர்களுக்கும், பெப்சிக்கும் அமைச்சர் முன்னாள் ஒப்பந்தம் உருவாக போகிறது. அதனால் சினிமா கண்டிப்பாக வளரும், இந்தப் படம் டைட்டிலுக்கே ஓடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி" எனக் கூறியுள்ளார்.