Skip to main content

இயக்குனர் முத்தையா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published on 09/01/2021 | Edited on 09/01/2021

 

Muthaiya

 

'குட்டிப்புலி' படத்தின் மூலம், தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் இயக்குனர் முத்தையா. அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'தேவராட்டம்'. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படத்தைத் தொடர்ந்து, இயக்குனர் முத்தையா இயக்கும் அடுத்த படத்திற்கு 'புலிக்குத்தி பாண்டி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

 

விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். இந்தநிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, புலிக்குத்தி பாண்டி படம் வரும் ஜனவரி 15-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சன் டீவியில் நேரடியாக வெளியாக உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வில்லனாக அறிமுகமாகும் விஜய் பட ஒளிப்பதிவாளர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
cinematographer sukumar debut as actor

குட்டிப்புலி, கொம்பன், மருது என கிராமத்து பின்னணியில் படங்களை இயக்கி பிரபலமானவர் முத்தையா. அந்த வகையில் கடைசியாக ஆர்யாவை வைத்து 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தை இயக்கியிருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. 

இதையடுத்து முத்தையா இயக்கும் அடுத்த பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இப்படமும் அவரது ஸ்டைலில் கிராமத்து பின்னணியில் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக அவரது மகன் விஜய் முத்தையாவை அறிமுகப்படுத்துகிறார். இப்படத்தில் கதாநாயகியாக தர்ஷினி மற்றும் பிரிகிடா சாகா முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். 

இந்த படத்தை கே.கே.ஆர். சினிமாஸ் சார்பில் ரமேஷ் பாண்டியன் தயாரிக்க, ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். இப்படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது. இப்படத்தில் பரத் வில்லனாக நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் ஒளிப்பதிவாளர் சுகுமார் மற்றொரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்த படப்பிடிப்பும் முடிந்துள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒளிப்பதிவாளர் சுகுமார், கும்கி, காக்கிச் சட்டை, பைரவா உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அவர் இப்படத்தில் நடிப்பது உறுதியாகும் பட்சத்தில் இப்படம் மூலம் நடிகராக அறிமுகமாவார்.

Next Story

கதாநாயனாக அறிமுகமாகும் முத்தையா மகன்

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
muthaiya son vijay enter into cinema as hero character

குட்டிப்புலி, கொம்பன், மருது என கிராமத்து பின்னணியில் படங்களை இயக்கி பிரபலமானவர் முத்தையா. அந்த வகையில் கடைசியாக ஆர்யாவை வைத்து 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தை இயக்கியிருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. 

இதையடுத்து முத்தையா இயக்கும் அடுத்த பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி இப்படமும் அவரது ஸ்டைலில் கிராமத்து பின்னணியில் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக அவரது மகன் விஜய் முத்தையாவை அறிமுகப்படுத்துகிறார். இப்படத்தில் கதாநாயகியாக தர்ஷினி மற்றும் பிரிகிடா சாகா முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். 

இந்த படத்தை கே.கே.ஆர். சினிமாஸ் சார்பில் ரமேஷ் பாண்டியன் தயாரிக்க, ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். இப்படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.