Skip to main content

"என்னுடைய 7 வருட உழைப்பை கெடுத்துடாதீங்கனு இயக்குநர் சொன்னார்" - நடிகர் புகழ் பேச்சு!

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

Pugazh

 

ட்ரைடன்ட்ஸ் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிப்பில், ஹரிஹரன் இயக்கத்தில் குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் குமார் நாயகனாக நடித்துள்ள படம் 'என்ன சொல்ல போகிறாய்'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அஷ்வின் குமார், தேஜஸ்வினி, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

ad

 

இந்நிகழ்வில் நடிகர் புகழ் பேசுகையில், "உயரத்துக்கு ஏணியா இருக்கும் என்னோட பேன்ஸுக்கு நன்றி.  ரவி சார் ஆபீஸ் கூப்பிட்டு செக் கொடுத்து, என்னோட தயாரிப்பில் படம் நடிக்க வேண்டும் என்று சொன்னார். அதன் பிறகு 5 மாதம் கூப்பிடவில்லை. பின், இந்தப் படத்தில் அஷ்வின் நாயகன் என்றார்கள். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இது என் 7 வருட உழைப்பு, தயவு செய்து காமெடி பண்ணி கெடுத்து விடாதீர்கள் என இயக்குநர் கெஞ்சிக் கேட்டார் அதனால் நான் எதுவும் காமெடி செய்யவில்லை. இந்தப் படத்தில் நடித்தது ஜாலியாக இருந்தது. இப்படத்தில் பாடல்கள் அனைத்துமே ஹிட்டாகியுள்ளன. படமும் கண்டிப்பாக வெற்றி பெறும்" எனக் கூறினார்..

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“50 பேரிலிருந்து தொடங்குறேன்” - விஜயகாந்த் நினைவிடத்தில் புகழ் அறிவிப்பு

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
pugazh about vijayakanth

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். 

இந்த நிலையில் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் தொடர்ந்து திரை பிரபலங்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் புகழ், மாலை அணிவித்து மரியாதை செய்தார். 

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜயகாந்த் ஐயா, பசின்னு வந்த அனைவருக்கும் சாப்பாடு போட்டிருக்கிறார். அதனால் இனிமேல் மதியம் நானும் சாப்பாடு போட முடிவெடுத்துள்ளேன். 50 பேரிலிருந்து தொடங்குறேன். பசி என்று யாராவது வந்தால் கே.கே நகரில் உள்ள என்னுடைய அலுவலகத்தில் வந்து சாப்பிடலாம். அதற்காக ஆசீர்வாதம் வாங்க தான் இப்போது வந்தேன். கேப்டன் சாருக்காக என்னால் முடிந்தது இதுதான். என்னுடைய வாழ்நாள் முழுவதும் இதை கடைபிடிக்கவுள்ளேன்” என்றார். 

Next Story

"ரத்தத்தைப் பார்த்தால் மக்கள் கைதட்டும் சத்தத்தை ரசிக்க முடியாது" -  புகழ்

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

Comedy actor Pugazh Interview 

 

சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வரும் ஆகஸ்ட் 16, 1947  திரைப்படத்தில் நடித்த நடிகர் புகழ்  உடன் ஒரு சிறப்பு நேர்காணல்.

 

1947 படத்தில் மிகச் சிறப்பான ஒரு கேரக்டரை இயக்குநர் எனக்கு வழங்கியிருக்கிறார். பல தரப்பினரிடமிருந்தும் எனக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. கௌதம் கார்த்திக் எனக்கு நல்ல குடும்ப நண்பராக அமைந்தது இறைவன் கொடுத்த வரம். மக்களின் மகிழ்ச்சி தான் என்னுடைய பிரதான நோக்கம். ரத்தத்தைப் பார்த்தால் மக்கள் கைதட்டும் சத்தத்தை ரசிக்க முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் என்னை ரசிக்கின்றனர். சென்னைக்கு வந்த புதிதில் மிகுந்த சிரமப்பட்டிருக்கிறேன். வெல்டிங் கடையில் வேலை செய்திருக்கிறேன். சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டிருக்கிறேன். மக்கள் நம் மீது செலுத்தும் அன்புக்காக எதையும் செய்யலாம். 

 

இன்று நான் இந்த நிலைமையில் இருப்பதற்கு முக்கியமான காரணம் வடிவேல் பாலாஜி அண்ணன் தான். இப்போது அவர் நம்மோடு இல்லை என்றாலும், மக்கள் மனதில் எப்போதும் அவர் வாழ்ந்து கொண்டிருப்பார். எனக்குள் அவர் எப்போதும் இருக்கிறார்.

 

சூர்யா சார் மிகவும் அன்பான மனிதர். குடும்பத்தோடு நேரம் செலவிட வேண்டும் என்கிற ஆலோசனையை எனக்கு அவர் வழங்கினார். மனைவிக்காக வாழ வேண்டும் என்று கூறினார். இப்படி ஒரு மனிதரா என்று ஆச்சரியப்பட்டேன். என் நடிப்பின் மீது எதிர்மறையான விமர்சனங்களும் வந்துள்ளன. அனைத்தையும் ஏற்றுக்கொண்டு சரி செய்து கொள்கிறேன். மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பது மட்டும்தான் என்னுடைய நோக்கம். அதை நான் இறுதி வரை செய்வேன்.