Skip to main content

"25 ஆண்டுகளுக்கு பிறகு அவருடன் மீண்டும் இணையவுள்ளேன்" - மேடையிலேயே அறிவித்த தயாரிப்பாளர் தாணு!

Published on 04/12/2021 | Edited on 04/12/2021

 

Kalaippuli S Thanu

 

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான மரைக்காயர் திரைப்படம் கடந்த 2ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இயக்குநர் ப்ரியதர்ஷன், கலைப்புலி தாணு உள்ளிட்ட படக்குழுவினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

நிகழ்வில் கலைப்புலி தாணு பேசுகையில், "இயக்குநராக ஒரு இமாலயத்தை தொட்டு அதற்கு மேலாக உயர்ந்து கொண்டிருப்பவர் இயக்குநர் ப்ரியதர்ஷன். 25 ஆண்டுகளுக்கு முன்பு சிறைச்சாலை என்ற படத்தை என்னுடைய தயாரிப்பில் ப்ரியதர்ஷன் சார் இயக்கினார். பட்டிதொட்டியெங்கும் அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. அப்படிப்பட்ட இயக்குநர் மரைக்காயர் படத்தை நான்தான் வெளியிட வேண்டும் என்று அவருடைய தயாரிப்பாளரிடம் கூறியுள்ளார். அவர் படத்தை நான்தான் பண்ணுவேன். என்னுடைய படத்தை அவர்தான் பண்ணுவார் என்று தயாரிப்பாளர் ப்ரியதர்ஷனிடம் கூறியுள்ளார். 

 

ad

 

அதற்காக இந்தப் படத்தினை பார்த்தேன். ஆங்கில படங்களைவிட சிறப்பாக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்கள். இயக்குநர் ப்ரியதர்ஷன் நவீன சிற்பி. அவர் இந்திய சினிமாவிற்கு கிடைத்த மாமணி. அவர் யாருக்கெல்லாம் யாருக்கெல்லாம் வாய்ப்பு கொடுக்கிறாரோ அவர்கள் மிக உயர்ந்த இடத்திற்கு செல்கிறார்கள். ஹாலிவுட் படங்களுக்கு இணையான சி.ஜி. வேலைகளை முதல் படத்திலேயே சித்தார்த் ப்ரியதர்ஷனுக்கு கொடுத்து, அவருக்கு தேசிய விருது பெற்றுக்கொடுத்தார். இந்தப் படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் பேரானந்தம் கொள்கிறேன். படத்தில் ஒளிப்பதிவு, கலை இயக்கம், பாடல்கள், வசனம் சிறப்பாக உள்ளது. 25 ஆண்டுகளுக்கு பிறகு அவருடன் மீண்டும் நான் இணைவதற்கான வாய்ப்பு விரைவில் வரும். அதை அவரே அதிகாரப்பூர்வமாக கூறுவார். தமிழில் நான் படம் பண்ணினால் தாணுவிற்குதான் பண்ணுவேன் என்ற பிடிவாதத்தில் இருக்கிறார். விரைவில் அதற்கான அறிவிப்பு வரும்" எனக் கூறினார்.     

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கடவுள் பாதி மிருகம் பாதி’ - ஆளவந்தான் ரீ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

Aalavandhaan re release update

 

கமல்ஹாசன் கதை, மற்றும் திரைக்கதை எழுதி சுரேஷ் கிருஷ்ணா இயக்கி கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான படம் ஆளவந்தான். வி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.தாணு தயாரித்திருந்த இப்படத்தில் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் படமாக்கப்பட்டு அடுத்தடுத்த தேதிகளில் இரண்டு மொழிகளிலும் வெளியானது.

 

இப்படத்தில் இடம்பெற்ற ஸ்பெஷல் எபெக்ட்ஸ் காட்சிகள் உலக சினிமா ரசிகர்களைக் கவர்ந்தது. மேலும் பிரபல ஹாலிவுட் இயக்குநர் குவின்டின் டரான்டினோ, "ஆளவந்தான் படத்தில் வரும் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் காட்சி தான் எனது 'கில் பில்' படத்தில் வரும் ஒரு சண்டை காட்சிக்கு உத்வேகமாக அமைந்தது" என தன்னிடம் கூறியதாக பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்திருந்தார். இப்படத்தின் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் பணிகளை கவனித்த மதுசூதனனுக்கு 49வது தேசிய விருது விழாவில் தேசிய விருது கொடுக்கப்பட்டது.

 

இப்படம் 22 வருடம் கழித்து ரீ ரிலீஸ் ஆகவுள்ளதாக கடந்த ஜனவரியில் தயாரிப்பாளர் தாணு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார். மேலும் புதிய டிஜிட்டல் ஒலி அமைப்பில் உலகெங்கும் ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில் இப்படத்தின் ரீ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி டிசம்பர் 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. 

 

 

 

 

Next Story

'வாடிவாசல்' நிலை என்ன? - தயாரிப்பாளர் தாணு விளக்கம்

Published on 23/12/2022 | Edited on 23/12/2022

 

producer thanu explain about vaadivaasal rumour

 

சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். ’சூர்யா 42’ என தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது . 

 

இதனிடையே வெற்றிமாறன் இயக்கும் 'வாடிவாசல்' படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படம் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகிறது. அதற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டது. இதனிடையே பாலா இயக்கும் 'வணங்கான்' படத்தில் நடித்து வந்த சூர்யா, சில காரணங்களால் படத்தில் இருந்து விலகினார். 

 

இதனைத் தொடர்ந்து 'வணங்கான்' படத்தைப் போலவே 'வாடிவாசல்' படத்தில் இருந்தும் சூர்யா விலக முடிவெடுத்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியானது. மேலும் 'வாடிவாசல்' படமே கைவிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. 

 

இந்த நிலையில் 'வாடிவாசல்' படத்தின் தயாரிப்பாளர் தாணு, இது குறித்து ஒரு ஆங்கில ஊடகத்தில் பேசியுள்ளார். அவர் பேசுகையில், "சூர்யா வாடிவாசல் படத்தில் இருந்து விலகவில்லை. அவை வெறும் வதந்திதான். யாரும் அதனை நம்ப வேண்டாம். படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் மாதங்களில் அப்டேட்டுகள் வெளியாகும்" எனத் தெரிவித்துள்ளார்.